கடன் அடைய ஒரு ரூபாய் பரிகாரம்

one rupee pariharam
- Advertisement -

இன்றைய காலத்தில் நோய்கள் எந்தளவுக்கு அதிகமாகி மக்களை வாட்டி வதைக்கிறதோ அதே அளவிற்கு கடன்களும் அதிகமாகி மக்களை கஷ்டத்திற்குள் ஆக்குகிறது. இதற்கு அவர்களின் இயலாமை ஒருவித காரணமாக திகழ்கிறது. இந்த இயலாமையை நீக்கி அவர்களின் கடன் பிரச்சினையை அடையச் செய்வதற்கு பல முயற்சிகளை அவர்கள் எடுத்தாலும் அந்த முயற்சிகளோடு ஒரு சிறிய பரிகாரத்தை செய்யும் பொழுது அந்த முயற்சிகள் வெற்றியடையும். கடன் பிரச்சனையும் தீரும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எவ்வளவு கடன் இருந்தாலும் ஒரு ரூபாயை வைத்து எப்படி பரிகாரம் செய்து அந்த கடனை அடைப்பது என்று தான் பார்க்கப் போகிறோம்.

கடன் என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணமாக திகழ்பவர் செவ்வாய் பகவானே. அதனால் பொதுவாக கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். முருகப்பெருமானை வழிபாடு செய்வதோடு ஒரு சில பரிகாரங்களை செய்யும் பொழுது அந்த கடன் விரைவிலேயே அடைவதற்குரிய வழிகள் நம்மை தேடி வரும் என்றுதான் கூற வேண்டும். அப்படிப்பட்ட ஒரு எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். பொதுவாக செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் முருகனை வழிபாடு செய்வதன் மூலம் செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் குறையும் என்று கூறுவோம். அதேபோல்தான் செவ்வாய்க்கிழமை அன்று மதிய வேளை சரியாக 1 மணி 15 நிமிடத்திற்கு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்திற்கு ஒரு வெள்ளை நிற ஆஃபீஸ் கவர், குறைந்தபட்சம் ஒரு ரூபாய் அதிகபட்சம் தங்களால் இயன்ற அளவு பணம் தொகை. மேலும் ஒரு பிங்க் கலர் பேனா. சரியாக மதியம் 1:15க்கு இந்த வெள்ளை நிற ஆபீஸ் கவரில் தங்களால் இயன்ற அளவு தொகையை வைத்து அந்த கவரிங் மேல் பிங்க் நிற பேனாவை வைத்து யாருடைய கடனை அடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவர்களின் பெயரை எழுதி இந்த கவரை பூஜை அறையில் வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த நேரம் என்பது செவ்வாய் கோரையில் வரக்கூடிய குளிகை நேரம் ஆகும். பொதுவாக குளிகை நேரத்தில் நாம் எதை செய்தாலும் அது திரும்பத் திரும்ப செய்யக்கூடிய செயலாக அமையும் என்று கூறப்படுகிறது. செவ்வாய் ஹோரில் இந்த முறையில் நாம் கடன் தீர்ப்பதற்காக அசல் தொகையை எடுத்து குளிகை நேரத்தில் வைப்பதன் மூலம் செவ்வாய் பகவானின் அருளால் விரைவிலேயே அந்த கடன் பிரச்சினையில் இருந்து நம்மால் வெளியில் வர முடியும்.

இதையும் படிக்கலாமே: பெயர் புகழ் அந்தஸ்து பதவி நல்ல வேலை கிடைக்க செல்ல வேண்டிய கோவில்

இந்த எளிமையான சூட்சுமத்தை உணர்ந்து நாமும் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து கடன் பிரச்சனையில் இருந்து வெளியில் வரலாம்

- Advertisement -