வீட்டில் விளக்கு ஏற்றும் எண்ணையில் இதை போட்டு வைத்தால் மகாலட்சுமி நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவாள்! போதும் போதும் என்கிற அளவிற்கு பண மழை பொழியும்.

pachai-karpooram-vilakku
- Advertisement -

வீட்டில் பொதுவாக குலதெய்வம், இஷ்ட தெய்வங்கள் வாசம் செய்ய வெள்ளிக் கிழமையில் நல்லெண்ணெய் தீபம் அல்லது நெய் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களை கொடுக்கும். அப்படி ஏற்றப்படும் தீப எண்ணெயில் இந்த ஒரு பொருளை போட்டு வைத்தால் நல்ல ஒரு அதிர்ஷ்டம் வரும். வீடு முழுவதும் கோவிலில் இருக்கின்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும். மனதை சுலபமாக ஒருமுகப்படுத்தும். நாம் வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்க செய்யும் என்பது நம்பிக்கை. அது என்ன பொருள்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

ainthu-muga-vilakku

இந்த ஒரு பொருளை விளக்கேற்றும் எண்ணையில் போட்டு தீபம் ஏற்றினால் வீட்டில் தெய்வ சக்திகள் ஆதிக்கம் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்க இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். வீட்டை கோவிலாக மாற்றக் கூடிய இந்த பொருள் சாதாரணமாக நம் வீட்டில் இருந்தாலே நல்ல ஒரு வைப்ரேஷன் கிடைக்கும். அப்படி இருக்கும் பொழுது இந்த பொருளை தீபம் ஏற்றும் எண்ணெயில் சேர்ப்பதால் கிடைக்கக் கூடிய பலன்களை வார்த்தைகளில் கூறி விட முடியாது.

- Advertisement -

குலதெய்வ அருள் தருவதற்கு இந்த ஒரு பொருளை தீப எண்ணெயில் சிறிதளவு நுணுக்கி சேர்த்தால் எங்கே இருந்தாலும் உங்களுடைய குல தெய்வம் உங்கள் வீட்டிற்கு வருகை தருவார்கள். உங்களுடைய வேண்டுதல்களை கேட்டு கட்டாயம் நிறைவேற்றி தருவார்கள். திருப்பதியில் வாசம் செய்யும் ஏழுமலையானுக்கு இருக்கும் அற்புத சக்திகளில் இந்த ஒரு பொருளுக்கும் நிச்சயம் ஒரு பங்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

thirupathi

சாதாரணமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் கற்பூரத்தை எல்லோருக்கும் தெரியும். ஆனால் ‘சுத்தமான பச்சை கற்பூரம்’ தெய்வீக மூலிகை பொருளாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இதில் இருக்கும் ரசாயனம் கருங்கல்லை கூட வெடிக்க செய்யும் ஆற்றல் படைத்தது. ஆனால் திருப்பதி ஏழுமலையான் திருவுருவச் சிலையில் வருடம் முழுவதும் பச்சைக் கற்பூரத்தை வைத்தாலும் அந்த சிலைக்கு எதுவுமே ஆவதில்லை. நாராயணனுக்கு விருப்பமான பச்சை கற்பூரம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டில் பணவரவு சரளமாக இருக்கும் என்கிற ஐதீகம் உண்டு.

- Advertisement -

பூஜை பொருட்கள் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் முப்பது ரூபாய் முதல் கிடைக்கக் கூடிய இந்த பச்சை கற்பூரம் சிறிதளவு நுணுக்கி பவுடராக மாற்றிக் கொள்ளுங்கள். இந்த பவுடரை நீங்கள் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் நல்லெண்ணெய் உடன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயில் கரைந்து பச்சை கற்பூரம் ஆனது நல்ல ஒரு வாசனையை கொடுக்கும். இந்த எண்ணெய் கொண்டு வெள்ளிக்கிழமை தோறும் தீபம் ஏற்றி வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

pachai karpooram

நாம் நம் வீட்டில் மட்டுமல்லாமல், தொழில் செய்யும் இடங்களிலும், வியாபார ஸ்தலங்களிலும் நீங்கள் விளக்கு ஏற்றும் பொழுது இந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றலாம். இந்த எண்ணெயில் தீபம் ஏற்றும் பொழுது அதனுடைய அதிர்வலைகள் அந்த இடம் முழுவதும் பரவிவிடும். இதனால் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். தொழில் செய்பவர்களுக்கு தொழில் விருத்தி அடையும். பணம் கைகளில் சரளமாகப் புரளும். மனதில் இருக்கும் தீய எண்ணங்களை நீக்கி, நல்ல வழியில் திசை திரும்பி செல்லக் கூடிய ஆற்றலை கொடுக்கும். ஒரு முறை முயற்சி செய்து பார்த்து நீங்களும் பயனடையலாமே!

இதையும் படிக்கலாமே
பெண்கள் இந்த ஒரு தர்மத்தை செய்தாலே போதும். குடும்பமே அதன் மூலம் சிறந்த பலனை பெரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -