பச்சை கற்பூர பரிகாரம்

pachai karpooram pariharam in tamil
- Advertisement -

பச்சைக் கற்பூரம் என்பது சமையல் கலையிலும், அதே நேரம் ஆன்மீக ரீதியான பரிகாரங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு அற்புத ஆற்றல் வாய்ந்த பொருளாகும். இறை வழிபாடுகளில் பச்சை கற்பூரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கு காரணம் பச்சைக் கற்பூரம் பல நேர்மறை சக்திகளை இருக்கக் கூடியதாக உள்ளது. அந்த வகையில் இந்த பச்சைக் கற்பூரத்தை கொண்டு செய்யப்படும் சில சக்தி வாய்ந்த பச்சை கற்பூர பரிகாரம் ( Pachai karpooram pariharam in Tamil ) குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சொந்தமாக தொழில் வியாபாரங்கள் செய்பவர்கள் தங்களுக்கு மிகப்பெரிய அளவில் செல்வம் சேர பச்சைக் கற்பூரத்தை கொண்டு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு சிறிய அளவிலான செம்பு அல்லது பித்தளை தட்டு ஒன்று எடுத்து, அதில் சிறிய அளவில் இருக்கும் பச்சை கற்பூர துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து அதற்கு சந்தனம், குங்குமம் பொட்டிட்டு அதை இந்த பச்சை கற்பூரத்தின் மீது வைத்து விட வேண்டும். இந்த ஐந்து ரூபாய் நாணயத்தின் மீது ஒரு மல்லிகை பூவை வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது இந்த பச்சை கற்பூரம் நாணயம் கொண்ட தட்டை உங்கள் தொழில், வியாபாரக்கூடங்களில் கல்லாப்பெட்டிக்கு அருகில் வைக்க வேண்டும். குபேரர் மற்றும் மகாலட்சுமிக்குரிய மந்திரங்களை துதித்து தொழில் வியாபாரங்களை மேற்கொள்ள வேண்டும். தினந்தோறும் புதிதாக பச்சைக் கற்பூரங்களை மாற்றி வைக்க வேண்டும். பயன்படுத்திய பச்சைக் கற்பூரத்தை எடுத்து தண்ணீரில் போட வேண்டும். நாணயத்திற்கு தினம் தோறும் புதிதாக சந்தன குங்குமம் பொட்டிட வேண்டும்.

பச்சைக் கற்பூர தீபத்தை ஏற்றுவதன் மூலம் நம்முடைய வீட்டில் தெய்வீக அதிர்வலைகளை அதிகரிக்க செய்து, அதன் மூலம் வளமான வாழ்க்கையை பெறலாம். புதிதாக ஒரு நல்லெண்ணெய் பாட்டிலை வாங்கிக் கொள்ளுங்கள். அதே போன்று 50 ரூபாய் அளவிற்கு தூய பச்சை கற்பூரத்தை வாங்கி கொள்ள வேண்டும். பின்பு புதிதாக வாங்கிய நல்லெண்ணெய் பாட்டிலின் மூடியை திறந்து, நீங்கள் வீட்டில் வாங்கி வைத்திருக்கின்ற பச்சைக் கற்பூரங்களை அந்த பாட்டிலுக்குள் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். இதனால் அந்த பச்சை கற்பூரம் ( Pachai karpooram pariharam in Tamil ) நல்லெண்ணெய் உடன் நன்கு கரைந்து விடும்.

- Advertisement -

பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையில் தினமும் விளக்கேற்றும் பொழுது, இந்த பச்சைக் கற்பூர எண்ணையை அகல் விளக்குகளில் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றுவதால் வீட்டில் நறுமணம் கமழ்வதோடு, தெய்வீக அதிர்வலைகளை அதிகரிக்க செய்யும். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றும் பொழுது, இந்த பச்சை கற்பூர எண்ணையை ஊற்றி, தாமரைக் கண்டு திரியைப் போட்டு, தீபம் ஏற்றுபவர்களுக்கு குபேரர் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைத்து செல்வ வளம் மிக்க வாழ்க்கை உண்டாகும்.

பச்சைக் கற்பூரம் செல்வத்தை அருளும் தெய்வமான குபேரனின் அம்சம் கொண்டது என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் நமக்கு குபேர சம்பத்து உண்டாக, முதலில் ஒரு வெள்ளைத் துணியை எடுத்து அதை மஞ்சளில் தோய்த்து காய வைத்துக் கொள்ளுங்கள். பச்சைக் கற்பூரம் 15 கிராம், ஏலக்காய் 15 கிராம், பெருஞ்சீரகம் 15 கிராம், கிராம்பு 15 கிராம், மஞ்சள் தூள் 15 கிராம் ஆகிய இந்த ஐந்து மங்கள பொருட்களையும் எடுத்து, மஞ்சள் பூசி காயவைத்த அந்த மஞ்சள் துணியில் போட்டு சிறிய மூட்டையாக கட்டி உங்கள் வீட்டில் குபேர மூலை என கூறப்படும் தென்மேற்கு மூலையில் இருக்கின்ற சுவரில் ஆணி அடித்து இந்த மூட்டையை மாட்டி வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஆண் குழந்தை பிறக்க பரிகாரம்

சுவரில் ஆணி அடித்து மாட்டி வைக்க முடியாதவர்கள், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கின்ற மேஜை செல்ஃப் போன்றவற்றிலும் வைக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்துக்கு ஒரு முறையோ இந்த மூட்டையில் இருக்கின்ற பொருட்களை எடுத்து, அப்புறப்படுத்தி புதிதான பொருட்களை போட்டு வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்து வருப்பவர்களுக்கு வீட்டில் வீண் விரயங்கள் ஏற்படாமல் தடுத்து செல்வ வளம் பெருகச் செய்யும்.

- Advertisement -