வாழ்க்கையில் உங்களை முன்னேற விடாமல் முட்டுக்கட்டை போடும் எப்பேர்பட்ட தடைகளையும் தகர்க்கும் பச்சைக் கற்பூரம்.

pachai-karpooram
- Advertisement -

சில பேரை நாம் பார்த்திருப்போம். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் ஒரு வேலையை செய்ய வேண்டும் என்ற உத்வேகமே இருக்காது. உதாரணத்துக்கு சிறிய பிள்ளைகளாக இருந்தால் சரியாக படிக்கவே மாட்டார்கள். சரியாக விளையாட மாட்டார்கள். சரியாக சாப்பிட மாட்டார்கள். மற்ற குழந்தைகளிடம் நன்றாக பேச மாட்டார்கள். ஏதோ பித்து பிடித்தது போல பிரம்மை பிடித்தது போல சோகத்திலேயே இருப்பார்கள். பெரியவர்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சினை இருக்கும். எந்த வேலையிலும் ஈடுபாடு இருக்காது.

நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் சம்பாதிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னேற திருமணம் செய்துகொள்ள வேண்டும், சந்தோஷமாக வாழ வேண்டும், என்ற எந்த பிடிப்பும் இல்லாமல், தூங்குவாங்க! எழுந்திரிப்பாங்க! சாப்பிடுவாங்க. மறுபடியும் தூங்குவாங்க எழுந்திருப்பார்க சாப்பிடுவாங்க. இப்படியே தங்களுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். இவர்களை முன்னேற விடாமல் முட்டுக்கட்டை போடக்கூடிய அந்த கெட்ட சக்தி எதுவாக இருக்கும்.

- Advertisement -

இப்படிப் பட்ட பிரச்சினைக்கு இந்த பிரபஞ்சத்தில் நிறைய பெயர் உண்டு. சில பேர் இவர்களுக்கு பைத்தியம் என்று சொல்வார்கள். சில பேர் இவர்களுக்கு பேய் பிசாசு பிடித்துவிட்டது என்று சொல்லுவார்கள். சில பேரு சோம்பேறி என்று சொல்லுவார்கள். எதுவாக இருந்தாலும் ஒரு மனிதன் இயல்பு நிலையை விட பின்தங்கி இருக்கின்றான் என்றால் அந்த மனிதனை முதலில் நல்ல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சோதனை செய்து பார்க்க வேண்டும். மருத்துவ ரீதியாக பிரச்சனையை சரி செய்ய முடியவில்லை என்றால் கொஞ்சம் தாந்திரீக ரீதியான பரிகாரத்தையும் செய்யது பார்க்கலாம்.

பாதிக்கப்பட்டவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை கிழக்கு பார்த்தவாறு அமர வையுங்கள். ஒரு சிறிய கொட்டாங்குச்சியை எடுத்து நெருப்பு மூட்டி விடுங்கள். சாம்பிராணி தூபம் போடும் இரும்பு தூபக்கால் இருக்கும் அல்லவா. அதிலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம். கொட்டாங்குச்சி நெருப்பு மூட்டி விட்டு, அந்த நெருப்பில் பச்சை கற்பூரத்தை சிறிதளவு எடுத்து நன்றாக தூள் செய்து போடுங்கள். கூடவே தர்ப்பைப் புல்லை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அந்த நெருப்பில் போடுங்கள். கொஞ்சமாக குங்கல்யம் அந்த நெருப்பில் போட்டு விடுங்கள். இப்போது அந்த நெருப்பிலிருந்து புகை வர தொடங்கும். இந்த புகையை பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்க வேண்டும்.

- Advertisement -

இந்தப் புகையின் முன்பு பாதிக்கப்பட்டவர்களை அமரச் செய்யுங்கள். அவ்வளவு தான் ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த புகையை ஒரு மனிதன் சுவாசித்து வந்தால், அவனுள் இருக்கக்கூடிய ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றலானது வெளியே சென்றுவிடும். எப்போதுமே சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் பிறகு சுறுசுறுப்பாக மாறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த புகை பரிகாரத்தை 3 நாட்கள் செய்து முடித்துவிட்டு மூன்றாவது நாள், ஒரு பெரிய திருஷ்டிப் பூசணிக்காயை வாங்கி குறிப்பிட்ட அந்த நபரை வலது பக்கம் மூன்று முறை, இடது பக்கம் மூன்று முறை , ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றி பூசணிக்காயை கொண்டுபோய் முச்சந்தியில் உடைத்து விடவேண்டும். அந்த மனிதனை பிடித்த எப்பேர்பட்ட எதிர்மறை ஆற்றல் ஆக இருந்தாலும் சரி அந்த உடம்பை விட்டு வெளியேறிவிடும்.

சில பேருக்கு கண் திருஷ்டி இருந்தால் கூட இப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும். நம்மை முன்னேற விடாமல் நம் உடம்பில் புகுந்து கொண்டு ஆட்டிப்படைக்கும் எப்படிப்பட்ட கெட்ட ஆற்றலையும் வெளியே இழுத்து நல்ல கூடிய சக்தி வாய்ந்த இரண்டு பரிகாரங்கள் தான் இவை. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சுலபமான இரண்டு பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -