பல நாள் கடன் பிரச்சனையை, ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வரும் படிகாரக் கல். கடன் தொல்லையில் இருந்து வெளிவர இதை ஒருமுறை செய்து பாருங்கள்.

- Advertisement -

எந்தப் பக்கம் திரும்பினாலும் கடன். கடனை கொடுத்தவன் வந்து கழுத்தை பிடிக்கின்றான். கடன்காரனுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடக்கூடிய நிலைமை உள்ளவர்களுக்கு கூட இந்த பரிகாரம் சீக்கிரமே பலன் தரும். இன்றைய சூழ்நிலையில் கடன் வாங்காமல் யாராலும் வாழ்க்கையை நடத்த முடியாது என்ற ஒரு கட்டாயத்திற்கு வந்து விட்டோம். ஹவுசிங் லோன் முதல் படிப்பதற்கு லோன் வரை நம்மை அழைத்து அழைத்து கடன் கொடுக்கும் காலம் இது. கூடுமானவரை கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்துவதற்கு பாருங்கள். ஏதோ ஒரு சூழ்நிலையில் கடன் வாங்கிட்டீங்க. அந்த கடனை கண்டு பயப்படாதீங்க.

கைநீட்டி வாங்கிய கடனாக இருந்தாலும் சரி, வங்கியில் பெற்ற கடனாக இருந்தாலும் சரி ஏதோ ஒரு வகையில் நம் தலை மேல் ஒரு பாரம் இருக்கிறது. தொடர்ந்து ஒழுங்காக கடன் தொகையை திருப்பி கட்ட வேண்டும் என்றால், நிரந்தரமான வருமானம் தேவை. நிரந்தரமான வருமானம் தேவை என்றால் நிரந்தரமான வேலை தேவை. அல்லது நிரந்தரமான தொழில் இருக்க வேண்டும். நிரந்தரமான வேலையை பெற வேண்டும் என்றால் அதற்கு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட வேண்டும். உழைக்க வேண்டும். இவை அனைத்தையும் நீங்கள் செய்து கூடவே இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் ஒரு நல்லது நடக்கும்.

- Advertisement -

நான் எதுவுமே செய்ய மாட்டேன். பரிகாரத்தை மட்டும் தான் செய்வேன். தானாக நல்லது நடக்க வேண்டும் என்றால் அது நடக்காத காரியம். சரி பரிகாரத்தை பார்த்து விடுவோம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவை ஒரு வெற்றிலை. ஒரு படிகார கல். ஒரு கிழிசல் இல்லாத கொஞ்சம் பெரிய வெற்றிலையாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். படிகார கல்லை எடுத்து அந்த வெற்றிலையின் மேல் எழுத வேண்டும். (பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை வேண்டி இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.)

படிகார கல்லைக் கொண்டு வெற்றிலையில் எழுதினால் நம் கண்ணுக்கு எதுவும் தெரியாது. இருந்தாலும் பரவாயில்லை. படிகார கல்லை கொண்டு வெற்றிலையின் மேல் கடன் தீர வேண்டும் என்று எழுதுங்கள். உங்களுக்கு சுமையை கொடுக்கும் கடன் எது. அந்த நபரின் பெயரை எழுதி, அந்த கடன் தீர வேண்டும் என்று அந்த வெற்றிலையில் எழுதலாம். நீங்கள் எழுதும் எழுத்து இந்த பிரபஞ்சத்திற்கு தெரியும். உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம் கிடையாது. (எழுதிய இடத்திலேயே மீண்டும் எழுதினால் கூட தவறு கிடையாது.)

- Advertisement -

உதாரணத்திற்கு வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வீட்டுக் கடன் சீக்கிரம் அடைய வேண்டும் என்று எழுதலாம். இப்படி எழுதி விட்டு அந்த வெற்றிலையை அப்படியே சுருட்டி ஒரு மஞ்சள் நூல் போட்டு கட்டி அரச மரத்துக்கு அடியில் கொண்டு போய் வைத்துவிட்டு வந்து விடுங்கள்

எல்லோர் வீட்டு அருகிலும் அரசமரம் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் இந்த இலையை கொண்டு போய் ஏதாவது ஒரு கோவிலில் இருக்கும் தல விருச்சங்களுக்கு கீழே வைத்து விட்டு வரலாம். அப்படி இல்லை என்றால் இந்த வெற்றிலையை ஒரு நூல் போட்டு கட்டி, ஏதாவது ஒரு மரத்தில் கட்டி தொங்கவிட்டு வரலாம். இது ஒரு தாந்திரீக பரிகாரம். வெற்றிலையும் படிகாரமும் சேரும்போது உங்களுடைய இந்த வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

எல்லா விஷயத்திலும் வெற்றியை கொடுப்பது வெற்றிலை. வெற்றியை தடுப்பதற்கு உண்டான தடைகளை தகர்க்கும் சக்தி படிகாரத்திற்கு உள்ளது. ஆகவே இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நிச்சயமாக உங்கள் கடன் தொல்லை தீர ஏதாவது ஒரு ரூபத்தில் வழி கிடைக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -