படிப்பில் சிறந்து விளங்க விநாயகர் வழிபாடு

vinayagar exam
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அவரிடம் பணமோ அல்லது படிப்போ இருக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தால் அவருடைய வாழ்க்கையில் அவரால் நல்ல முன்னேற்றத்தை பெற முடியும். பணத்தையாவது பிறர் ஏமாற்றி அபகரித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். ஆனால் படிப்பை யாராலும் எந்த சூழ்நிலையாலும் அபகரிக்கவோ ஏமாற்றவோ முடியாது என்பதால் தான் இன்றைய காலகட்டத்தில் அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல படிப்பை வழங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அப்படிப்பட்ட படிப்பில் சிறந்து விளங்க செய்யக்கூடிய விநாயகர் வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

என்னதான் பெற்றோர்கள் நல்ல பள்ளியாக பார்த்து சேர்த்து விட்டாலும் படிக்கும் குழந்தைகள்தான் நன்றாக படிக்கும். எந்த இடத்தில் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை எப்படி படிக்கிறார்கள் என்பது தான் முக்கியம். சில குழந்தைகள் கற்பூர புத்தியுடன் சொன்னதை உடனே புரிந்து கொண்டு அதை மனதில் நிறுத்தி நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். சில குழந்தைகள் ஒரு முறைக்கு இருமுறை படித்து மனதில் பதிய வைத்து மதிப்பெண்கள் எடுப்பார்கள்.

- Advertisement -

இன்னும் சில குழந்தைகள் இருக்கிறார்கள் படிக்க மாட்டார்கள். அப்படியே படித்தாலும் அதை ஞாபகம் வைத்து தேர்வில் எழுதவும் மாட்டார்கள். மதிப்பெண்கள் பெறுவது மிகவும் குறைவாகவே இருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் மிகவும் வருத்தம் அடைவார்கள். அவர்களின் வருத்தத்தை போக்கக்கூடிய ஒரு விநாயகர் வழிபாட்டை தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். காலை 10:30 மணியிலிருந்து 12 மணிக்குள் செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் எந்த கோவிலுக்கும் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டிற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகரின் சிலை அல்லது விநாயகரின் படம் இருந்தால் போதும். விநாயகருக்கு மிகவும் பிடித்தமான பூவாக கருதப்படுவது செம்பருத்திப்பூ.

- Advertisement -

எந்த நிறத்தில் இருக்கக்கூடிய செம்பருத்தி பூவாக இருந்தாலும் பரவாயில்லை. பலதரப்பட்ட நிறங்களில் இருக்கக்கூடிய செம்பருத்திப் பூக்களை கூட நாம் பறித்து போடலாம். 27 செம்பருத்தி பூக்களை பறித்து அதை மாலையாக தொடுத்து விநாயகரின் படத்திற்கோ அல்லது சிலைகோ போட வேண்டும். பிறகு அவருக்கு நெய்வேத்தியமாக உங்களால் எதை செய்ய முடியுமோ அதை செய்து வைக்கலாம். கற்கண்டு, உலர் திராட்சை, பேரிச்சை, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, வேறு ஏதாவது பழ வகைகள் அல்லது வீட்டில் சமைத்த சாதம், பால் இப்படி எதை வேண்டுமானாலும் மனதார அவருக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

பிறகு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விநாயகரின் ஸ்லோகங்கள், விநாயகர் அகவல் போன்றவற்றை கூற வேண்டும். பிறகு மூல மந்திரம் என்று உங்களுக்கு எது தெரியுமோ அதை 27 முறை கூறி வழிபட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வழிபாடு மேற்கொண்டு வர படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகளும் சிறந்து விளங்குவார்கள்.

இதையும் படிக்கலாமே: தலையெழுத்து மாற பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

தங்கள் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க விநாயகரிடம் முழு நம்பிக்கை வைத்து இந்த வழிபாட்டை மேற்கொண்டு முழு பலனையும் அடைக்கலாம்.

- Advertisement -