மதியம் வடித்த சாதம் மீதமாகி விட்டதா? கவலை வேண்டாம் உடனடியாக இந்த சாதத்தை வைத்து ஈவினிங் டீயுடன் சாப்பிட சுவையான வடை செய்திடுங்கள்

sadam-vadai
- Advertisement -

இப்பொழுது மழைக்காலம் என்பதால் காலையில் வடித்த சாதத்தை மதியம் சாப்பிட முடியாது. மதியம் வடித்த சாதத்தை இரவு சாப்பிட முடியாது. அந்த அளவிற்கு சாதம் சில்லென ஃப்ரிட்ஜில் வைத்தது போல் மாறிவிடும். இப்படி ஒரு சில வீடுகளில் மதியம் வடித்த சாதம் அளவுக்கு அதிகமாக மீதம் ஆகிவிடும். இது போன்ற தருணங்களில் அதனை தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் சாப்பிடலாம் என்று தோன்றும். ஆனால் இப்பொழுது மழைக்காலம் என்பதால் அவ்வாறு செய்வதினால் உடல்நலக் குறைபாடு தான் ஏற்படும். தேவை இல்லாமல் சளி பிரச்சனை உண்டாகும். எனவே இந்த சாதத்தை வீணாக கீழே கொட்டவும் மனது வராது. ஆகவே இதனை உபயோகமாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுட சுட வடை செய்துக் கொடுத்தால் யாருக்குமே தெரியாது இது பழைய சாதத்தில் செய்தது என்று. வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

rice

தேவையான பொருட்கள்:
பழைய சாதம் – 2 கப், அரிசி மாவு – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிய துண்டு இஞ்சியை தேங்காய்துருவல் பயன்படுத்தி துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

onion

பிறகு இரண்டு கப் சாதத்தை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு கிண்ணத்திற்க்கு மாற்றி அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு முறை கலந்து விட வேண்டும். பிறகு அரை ஸ்பூன் உப்பு, துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த கலவை வடை பிடிக்கும் பதத்திற்கு வரும்வரை அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலந்து கொண்டு வரும்பொழுது வடை மாவு பதத்திற்கு வந்தவுடன் அரிசி மாவு சேர்ப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

vadai

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, மாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டி, அதன் நடுவில் மெது வடைக்கு செய்வது போல ஆள்காட்டி விரலை வைத்து ஒரு ஓட்டை போட்டுக் கொண்டு, வடை மாவை எண்ணெயில் போட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வடையாக எண்ணெயில் போட்டு சிவந்து வரும் வரை வேக விட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான வடை தயாராகிவிட்டது. இதை மாலை வேளையில் டீயுடன் சேர்த்து கொடுத்து பாருங்கள். மிகவும் அற்புதமான சுவைல்யி இருக்கும்.

- Advertisement -