வீட்டில் எந்த இடங்களில் எல்லாம் பல்லி இருந்தால் அதிர்ஷ்டம் வரும் என்று உங்களுக்கு தெரியுமா? வீட்டில் பல்லி இருக்கும் இடத்தின் அதிர்ஷ்ட பலன்கள்!

palli-lizard-thulasi
- Advertisement -

வீடு என்றால் கண்டிப்பாக அதில் பல்லி இருக்கும். பல்லி இல்லாத வீடுகள் இல்லை என்று கூறலாம் ஆனால் அந்த பல்லி இருப்பது சிலருக்கு பிடிக்கவே செய்யாது. உடனே அதை துரத்தி அடித்து விடுவார்கள். பல்லி அதிகம் இருக்கும் இல்லங்களில் அதிர்ஷ்டமும் அதிகரிக்கும் என்று ஆன்மீகம் கூறுகிறது. வீட்டில் எந்த இடங்களில் எல்லாம் பல்லி வாசம் செய்வது அதிர்ஷ்டத்தை தரும்? என்கிற ரகசியத்தை தான் ஆன்மீக குறிப்பாக இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பொதுவாக இந்து மதத்தில் பல்லியை தெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர். இன்றும் பல்வேறு கோவில்களில் பல்லியை தொட்டு தடவி வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. புராணங்களில் கூட பல்லிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. இப்படி பல்லிக்கும், ஆன்மீகத்திற்கும் இருக்கும் தொடர்பை முன்னிறுத்தி நம் வீட்டில் எங்கெல்லாம் பல்லி இருந்தால் அதிர்ஷ்டத்தை தரும்? என்று பார்ப்போம்.

- Advertisement -

வீட்டில் பல்லி இருக்கும் பலன்கள்
முதலாவதாக வீட்டில் பல்லி இருப்பது என்பதே அதிர்ஷ்டம் தான் என்கிறது சாஸ்திரங்கள்! பல்லி இல்லாத வீட்டில் நிம்மதியும் இருக்காது என்று கூறப்படுகிறது. பல்லி தெய்வீக அம்சமாக கருதப்படுவதால் அவற்றை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. இவ்வாறு செய்தால் பாவம் வந்து சேரும். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை துன்புறுத்தாமல் விரட்டி விடுங்கள். அதை விடுத்து பாவத்தை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

வீட்டின் பூஜை அறையில் பல்லி இருந்தால் மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும் ஒரு விஷயமாக கருதப்படுகிறது. செல்வ செழிப்பும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வீட்டில் பூஜை அறையில் பல்லி இருக்க வேண்டுமாம். சிலருடைய இல்லங்களில் எல்லாம் பார்த்தால் எந்நேரமும் பூஜை அறையில் பல்லிகள் நடமாட்டம் இருக்கும். இவ்வாறு இருக்கும் இல்லங்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவையாக கருதப்படுகிறது. இவர்களுக்கு பில்லி, சூனியம், ஏவல் போன்றவை அண்டாது என்றும் கூறப்படுகிறது. பல்லி நம்மையும், வீட்டையும் காவல் காக்கும் அரணாக பூஜை அறையில் இருந்து செயல்படுமாம்.

- Advertisement -

நீங்கள் உங்களுடைய வீட்டில் துளசி மாடம் வைத்திருந்தால், அந்த இடத்தில் பல்லி இருக்கிறதா? என்று பாருங்கள். துளசி மாடத்தில் இது வாசம் செய்தால் மகாலட்சுமியுடன், மகாவிஷ்ணு சேர்ந்து அருள் புரிவதாக ஐதீகம் உண்டு. துளசி மாடம் மகாலட்சுமியையும், பல்லி மகாவிஷ்ணுயும் குறிப்பதால் இவை இரண்டும் ஒன்றாக இருக்கும் இடத்தில் சகல சௌபாக்கியங்களும் நிறையும் என்று நம்பப்படுகிறது.

சமையல் அறையில் பல்லி இருப்பது நல்லதல்ல எனவே சமையலறையில் பல்லி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் பல்லி நம் மீது விழுந்தால் விழும் இடத்திற்கு ஒவ்வொரு பலன்கள் உண்டு என்பது அனைவரும் அறிவீர். இப்படி பல்லி விழும் பலன்களை பார்த்து பயப்படாமல் அன்றைய நாளில் நீங்கள் மகாவிஷ்ணுவை துளசி சாற்றி வழிபட்டால் போதும் பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் சேருமாம்.

இதையும் படிக்கலாமே:
இரவு தலையணைக்கு அடியில் இந்த 1 பொருளை வைத்து தூங்கினாலே போதும். தூங்கும் போதே உங்கள் கஷ்டங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக உங்களை விட்டு விலகி விடும்.

படுக்கை அறையில் பல்லிகள் இருந்தால் ஒற்றையாக இருக்கக் கூடாது. ஜோடி ஜோடியாக பல்லி இருந்தால் நல்லது என்றும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டைகள் சீக்கிரமாக சரியாகிவிடுமாம். அந்த அளவிற்கு நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது எனவே இனியும் பல்லியை கண்டால் அருவருப்பாக நினைக்காமல் அவை தரும் அதிர்ஷ்டத்தையும் நினைக்கலாமே!

- Advertisement -