இரவு தலையணைக்கு அடியில் இந்த 1 பொருளை வைத்து தூங்கினாலே போதும். தூங்கும் போதே உங்கள் கஷ்டங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக உங்களை விட்டு விலகி விடும்.

wheat
- Advertisement -

அந்த காலத்தில் கடவுளின் திருவுருவப்படம் இல்லாத சமயத்தில், பூமியில் வாழ்ந்த மக்கள் எல்லாம் சூரியனை தான் கடவுளாக நினைத்து வழிபாடு செய்து வந்தார்கள். இந்த பூலோகத்தில் கண்கண்ட கடவுள் என்றால், அது அந்த சூரிய பகவான் தான். நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் இல்லாமல் வாழ்வதற்கு, நல்ல வேலையில் அமருவதற்கு, நல்ல வருமானத்தை பெறுவதற்கு சந்தோஷமாக வாழ்வதற்கு அந்த சூரிய பகவானின் ஆசீர்வாதம் தேவை. இவ்வளவு அருமை பெருமைகளைக் கொண்ட சூரிய பகவான் வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கஷ்டங்கள் தீர சூரிய பகவான் பரிகாரம்
பொதுவாகவே சூரிய பகவான் வழிபாடு என்றால் நாம் எல்லோருக்கும் தெரியும். காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, காலை 6 மணி அளவில் சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். இது முதல் விஷயம். இந்த சூரிய பகவானுக்கு உரிய தானியம் என்றால் அது கோதுமை. ஒரு சிறிய சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய பகவானுக்கு உரிய நிறம் சிவப்பு. அந்த சிவப்பு துணியில் உங்கள் கைகளால் ஒரு கைப்பிடி அளவு கோதுமையை எடுத்து வைத்து, முடிச்சாக கட்டி, இரவு தூங்கும் போது இதை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். குறிப்பாக இந்த பரிகாரத்தை நீங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குவது மிக மிக சிறப்பு. ஞாயிறு என்பது சூரிய பகவானுக்கு உரிய கிழமை.

- Advertisement -

அடுத்த ஞாயிறு வரும் வரை இந்த முடிச்சை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கலாம். இந்த ஞாயிற்றுக்கிழமை தலையணைக்கு அடியில் முடிச்சை வைக்கிறீர்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டது. முடிச்சுக்கு உள்ளே இருக்கும் கோதுமையை எடுத்து குருவிகளுக்கு சாப்பிட வைக்கலாம். அப்படி இல்லை என்றால் பசு மாட்டிற்கு சாப்பிட கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் மரத்தடியில் போட்டு விடலாம். எரும்புகள் சாப்பிட்டுக் கொள்ளும்.

நீங்கள் எந்த ஒரு குறிக்கோளை மனதில் நினைத்து, எந்த ஒரு கஷ்டம் சரியாக வேண்டும் என்று மனதில் நினைத்து இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குகிறீர்களோ, அந்த வேண்டுதல் நிறைவேறும் வரை இந்த கோதுமையை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கக்கூடிய பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர வேண்டும். உங்களுடைய வேண்டுதல் எவ்வளவு பெரியதோ, உங்களுடைய கோரிக்கை எவ்வளவு பெரியதோ அதற்கான நாட்கள் கட்டாயம் எடுக்கும் அல்லவா. படிப்படியாக உங்களுடைய கஷ்டங்களை குறைத்து உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி தரக்கூடிய வேலையை இந்த ஒரு சின்ன ஆன்மீக பரிகாரம் செய்யும். சூரிய பகவானின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற்று தரக்கூடிய நல்லதொரு சுலபமான பரிகாரங்களில் இதுவும் ஒன்று.

- Advertisement -

இரண்டாவது இன்னொரு பரிகாரத்தையும் நாம் பார்க்க போகின்றோம். இதுவும் சூரிய பகவானை நினைத்து செய்யக்கூடிய பரிகாரம்தான். சில பேருக்கு நல்ல ஒரு வேலை நிரந்தரமாக அமையாது. அது அரசாங்க வேலையாக இருக்கட்டும். தனியார் வேலையாக இருக்கட்டும். நிரந்தர வருமானம், நிரந்தர வேலை இல்லாதவர்கள் படக்கூடிய கஷ்டம் ரொம்ப பெரியது. நிரந்தர வேலை நிரந்தர வருமானத்தை கிடைக்க இந்த பரிகாரத்தையும் முயற்சி செய்து பார்க்கலாம்.

காலையில் எழுந்து சூரிய பகவானுக்கு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். இப்படி சூரிய நமஸ்காரம் செய்யும் போது உங்களுக்கு முன்னால் ஒரு சொம்பு நிறைய தண்ணீர், ஐந்து வர மிளகாய்களை வைத்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை முடித்துவிட்டு இந்த தண்ணீரை கொஞ்சமாக சூரிய பகவானை நினைத்து பூமியில் ஊற்றிவிட்டு, பக்கத்தில் வைத்திருக்கும் ஐந்து வர மிளகாய்களை எடுத்து உங்களுடைய தலையை 5 முறை சுற்றி நெருப்பில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கடுகு அளவு கூட சந்தோஷம் இல்லாத வீட்டில், கடலளவு மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும் கடுகு. இதை மட்டும் செய்தால் குடும்ப கஷ்டங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் தீரும்.

நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து ஒரு 11 நாட்கள் இப்படி சூரிய நமஸ்காரம் செய்து பாருங்கள். உங்களுக்கு சீக்கிரத்தில் நிறைவான வருமானத்தோடு மனதிற்கு பிடித்த நல்ல வேலை கிடைக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளது. பரிகாரத்தின் மீது நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -