பணப் பிரச்சனை தீர பரிகாரம்

panam vasambhu
- Advertisement -

நம்மில் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை பிறரின் கண் திருஷ்டி தான். நாம் எப்படி தான் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி வந்தாலும், இவர்களுடைய பொல்லாத பார்வைகள் நம்மளை முன்னேறவே விடாது. ஏதாவது ஒரு வகையில் நம்மை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கும். இதனால் குடும்பத்தில் ஏற்பட கூடிய பிரச்சனை கள் அதிலும் குறிப்பாக பண பிரச்சனை அதிகமாகவே இருக்கும்.

ஒரு சிலரின் முன்பு நாம் பணத்தை எடுத்து செலவு செய்து விட்டால் போதும், மறுபடியும் நம்மால் பணத்தை எடுத்து வைக்கவே முடியாது. பணம் நம்மிடம் வராமல் தடைப்பட்டுக் கொண்டே இருக்கும். அப்படியே வந்தாலும் ஏதேனும் வீண்விரயங்கள் ஆகிக் கொண்டிருக்கும். இது பணத்தின் மீது ஏற்படும் திருஷ்டி.

- Advertisement -

ஆகையால் தான் நம் வீட்டு பெரியவர்கள் முன்பெல்லாம் பிறர் முன்பு பணத்தை எடுத்து செலவு செய்யக் கூடாது. யாருக்கேனும் கொடுப்பதாக இருந்தாலும் மறைவாக எடுத்து தான் கொடுக்க வேண்டும். பணத்தை வெளியில் எடுத்து அப்படியே காட்டக் கூடாது என்று சொல்வார்கள். சரி இந்த பணத்தின் மீது ஏற்பட்டிருக்கும் திருஷ்டியை போக்க எளிமையான ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் காணப்போகிறோம்.

பண திருஷ்டி போக பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்ய நம் ஆள்காட்டி விரல் உள்ள ஒரே ஒரு வசம்பு துண்டை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வசம்பு துண்டை இரண்டு பாதியாக உடைத்துக் கொள்ளுங்கள். இரண்டு பாதிகளில் ஒரு பாதியை மீண்டும் நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த நான்கு துண்டுகளை உங்கள் வீட்டில் நான்கு மூலையில் வைக்க வேண்டும். நீங்கள் வைக்கக் கூடிய இடம் பிறர் வந்து போகக் கூடிய இடமாக இருக்க வேண்டும். இதை பூஜை அறையிலும், படுக்கை அறையிலும் வைக்க வேண்டாம். இந்த நான்கு துண்டு வசம்பையும் கையில் வைத்துக் கொண்டு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணத்தடை பண திருஷ்டி போன்றவை நீங்க வேண்டும் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த வசம்பை நீங்கள் வைக்கக் கூடிய மூலையில் யாருக்கும் தெரியாதவாறு வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது சனிக்கிழமையில் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை இந்த வசம்பை வைத்தால் சனிக்கிழமை அன்று எடுத்து வீட்டிற்கு வெளியே கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

சனிக்கிழமையில் செய்தால் செவ்வாய்க்கிழமை அன்று எடுத்துப் போட்டு விடுங்கள். இதைத் தவிர்த்து இன்னும் பாதி வசம்பு இருக்கும் அல்லவா அதில் சிறிதளவு நெய்யை தடவி மெழுகுவத்தியில் காட்டினால் வசம்பு எரிந்து நல்ல மணம் வரும். இந்த மணத்தை வீட்டின் உள்ளே முழுவதுமாக காட்டிய பிறகு இந்த வசம்பையும் வெளியில் தூக்கி போட்டு விடுங்கள். அவ்வளவு தான் பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் அருகம்புல்

இந்த பரிகாரத்தை மாதம் ஒரு முறை செய்து வந்தால் போதும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்து பண தடைகளும், பணம் முடக்கமும் நீங்கி பணவரவு தாராளமாக இருக்கும். செலவுக்கு பணம் இல்லை என்று ஒரு நாளும் யோசிக்காத அளவிற்கு பணவரவு பெருகும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை அடையுங்கள்.

- Advertisement -