இந்த அறிகுறிகள் உங்களுடைய வீட்டில் அடிக்கடி தெரிகிறதா? எதிர்பாராத ஏதோ ஒரு பண கஷ்டம் உங்களுக்கு வரப்போகிறது என்று அர்த்தம்.

kadan
- Advertisement -

மனிதனுக்கு பணக்கஷ்டம் வருவது என்பது இயல்புதான். ஆனால் சில சமயங்களில் நாம் எதிர்பாராத ரொம்பவும் பெரிய பண கஷ்டம் வந்துவிட்டால், அதை சமாளிப்பது கடினமான விஷயமாகி விடும். நமக்கு இறைவனால் காட்டப்படுகின்ற ஒருசில அறிகுறியின் மூலம் இந்த பண கஷ்டம் வருவதை நம்மால் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் வருவதை முன்கூட்டியே காட்டும் அறிகுறிகள் என்னென்ன. கஷ்டத்தை தடுக்க நாம் என்ன பரிகாரம் செய்வது. தெரிந்து கொள்வோமா.

நமக்கு இறைவனால் கொடுக்கப் படக்கூடிய எல்லா நல்ல வாய்ப்புகளும், நம் கையை விட்டு நழுவிக் கொண்டே செல்லும். இப்படி வாய்ப்புகள் அடிக்கடி தவறினாலும் ஏதோ ஒரு சிக்கலில் சிக்க போகின்றோம் என்று அர்த்தம்.

- Advertisement -

அடிக்கடி நம் வீட்டில் தண்ணீர் குழாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். தேவையே இல்லாமல் தண்ணீர் நிறைய செலவாகும். அடிக்கடி வீட்டில் இருக்கும் மின்சார பொருட்கள் பழுது அடைந்து போகும். இப்படி இருந்தாலும் வீட்டிற்கு ஏதோ ஒரு விரையும் வரப்போகிறது என்று அர்த்தம்.

சில பேருக்கு வாயில் எச்சில் அதிகமாக சுரந்து கொண்டே இருந்தால் கூட பண கஷ்டம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக நம்முடைய கைகளில் சூரிய மேடு என்று ஒன்று இருக்கும் அல்லவா. அந்த இடத்தில் மச்சம் வரும். அப்படி திடீரென்று சூரியன் மேடின் அருகில் மச்சம் வந்தால் நம் கையில் இருக்கும் பணம் சீக்கிரம் செலவாகி விடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

நிலை வாசலில் எண்ணெய் கொட்டி விட்டால் கடன் பிரச்சனை வரும். நம் கையில் இருக்கும் நகையையும் பணத்தையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சமயங்களில் நம் கையில் இருக்கும் பணமோ அல்லது நகையோ தொலைந்த இடம் தெரியாமல் போய் விட்டால், அதன் மூலம் கூட நமக்கு இழப்பு ஏற்படும். சிலசமயம் சிந்திப்போம் இந்த 500 ரூபாயை எந்த இடத்தில் வைத்தோம் தெரியவில்லையே! எப்படி தொலைந்தது? என்று தெரியவில்லையே. எதற்கு செலவு செய்தோம். என்று இப்படி எதிர்பாராமல் தொலைய கூடிய பணம் நமக்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்தி தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

கஷ்டத்தை தீர்க்கும் பரிகாரங்கள்:
தட்சிணா மூர்த்திக்கு வியாழக்கிழமை அன்று மாப்பொடி (பச்சரிசி மாவு) மூலம் அபிஷேகம் செய்து வந்தால் நம் வீட்டில் செல்வவளம் படிப்படியாக பெருகத் தொடங்கும். கடன்தொல்லை படிப்படியாக குறையத் தொடங்கும். இதேபோல பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கும் இந்த மாப்பொடியை கொடுங்கள். அதாவது பச்சரிசிமாவு அபிஷேகம் என்று இதைச் சொல்வார்கள்.

சில பேருக்கு சனி திசை, ராகு கேது திசை, குரு திசை, புதன் திசை இப்படி எந்த திசை நடந்தாலும் சரி அதன் மூலம் அவர்களுக்கு பிரச்சினை வராமல் இருக்க திருவாரூரில் அமைந்திருக்கும் குன்றக்குடியில் ஒரே திசையில் உள்ள நவகிரக கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வர வேண்டும்.

சிலருக்கு நேரம் காலம் சரியில்லாத தால் பணப்பிரச்சனை தொடர்ந்து வரும். பண இழப்பு ஏற்படும். கடன் தொல்லை ஏற்படும். இப்படி உங்களுடைய ஜாதகத்தில் நேரம் காலம் சரியில்லை. தலையெழுத்து சரியில்லை என்றால் ஒருமுறை தஞ்சாவூர் அருகில் இருக்கும் திருகண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வாருங்கள். உங்கள் தலையெழுத்து மாறும்.

- Advertisement -