பல நாள் பண கஷ்டத்தை தீர்க்கும் பால் பரிகாரம்

mahalashmi4
- Advertisement -

நம்முடைய வீட்டின் சந்தோஷமும் செல்வ கடாட்சமும், என்றைக்குமே  பால் போல பொங்கி வழிந்து கொண்டே தான் இருக்க வேண்டும். சந்தோஷமும் வீட்டில் குறையக்கூடாது. செல்வ வளமும் வீட்டில் குறையக்கூடாது. இதற்காகத்தான் அந்த காலத்தில் பெண்கள் அடுப்பை பற்ற வைத்தவுடன், பொங்கி வழிய கூடிய பாலை முதலில் காய்ச்சக் கூடிய வழக்கத்தை வைத்திருந்தார்கள்.

அப்படி இல்லை என்றால் உலை வைத்து அரிசி கழுவி போடுவாங்க. அதாவது சாதமும் பொங்கி வழியும் அல்லவா. அதனால் தான் இந்த இரண்டு விஷயங்களை தினமும், பெண்கள் காலையில் சமையலறையில் கடைபிடித்து வருகிறார்கள். இதன் மூலம் வீட்டில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். செல்வ கடாட்சத்துக்கு குறைவே இருக்காது.

- Advertisement -

நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள். அதற்காக பாலை தினமும் பொங்கி அடுப்பில் வழியே விடக்கூடாது. பொங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். சரி இப்போது பல நாள் பண கஷ்டத்தை தீர்க்க பாலை வைத்து என்ன பரிகாரம் செய்வது, இதை தெரிந்துகொள்ள ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

பண கஷ்டத்தை தீர்க்கும் பால் பரிகாரம்

இதற்கு மண்ணால் செய்யப்பட்ட சின்ன குடுவை தேவை. சின்ன குடுவை அல்லது சின்ன கிண்ணம் உறை போடுவதற்கு எல்லாம் வீட்டில் பயன்படுத்துவார்கள். அது போல ஒரு சின்ன மண் கிண்ணத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மண்ணில் செய்யப்பட்ட கிண்ணம். இப்போது கடைகளில் சுலபமாக கிடைக்கிறது. அதை வாங்கி உங்களுடைய வீட்டில் பயன்படுத்த வேண்டும். தினமும் அதில் பால் ஊற்றி பயன்படுத்தலாம் அல்லது தயிர் உரை போட்டு பயன்படுத்தலாம்.

- Advertisement -

இரண்டுமே மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்கள் தான். அதாவது சிவப்பு நிறத்தில் இருக்கும் அந்த மண்பாண்டம் செவ்வாய் பகவானை குறிப்பது. மகாலட்சுமி அம்சம் பொருந்தியது பால், தயிர் இது இரண்டையும் அந்த செவ்வாயான மண்பாண்டத்தோடு சேர்க்கும்போது நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மிகச் சிறிய அளவில் ஒரு மண்ணால் செய்யப்பட்ட கிண்ணம் வாங்கி, அதில் ஒரு குழி கரண்டி அளவு காய்ச்சாத பசும்பாலை ஊற்றி உங்க வீட்டு பிரிட்ஜில், ஃப்ரீசருக்கு உள்ளே வைத்து விடுங்கள். 15 நாட்கள் அது அப்படியே இருக்கட்டும். ஐஸ் கட்டியாக மாறிவிட்டால் அது அவ்வளவு எளிதில் கெட்டுப் போகாது.

- Advertisement -

15 நாட்கள் கழித்து பழைய பாலை வெளியில் எடுத்து, மண் பாங்கான இடத்தில் கொட்டி விட்டு, மீண்டும் அந்த குடுவையை கழுவி புதுசாக பசும் பால் ஊற்றி ஃப்ரீசரில் வைத்தால், உங்களுடைய வீட்டில் மண்பாண்டத்தில் எப்போதுமே பசும்பால் சேர்ந்து இருக்கும். இதனால் உங்களுடைய வீட்டில் ஐஸ்வரியும் ஒரு துளி கூட குறையாது. இந்த பரிகாரம் படிப்பதற்கு கொஞ்சம் முட்டாள்தனமாகவும், விசித்திரமாகவும் இருக்கலாம். ஆனால் நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக வளர்பிறை வசந்த பஞ்சமி வாராகி வழிபாடு

இந்த பரிகாரம் பலன் கொடுக்கும் பட்சத்தில் உங்களை விட அதிர்ஷ்டசாலி இந்த பூமியில் வேறு யாருமே இருக்க முடியாது. உங்கள் பண கஷ்டத்தை தீர்த்து வைப்பதற்காக, நம்பிக்கை உள்ளவர்களுக்காக மட்டும் சொல்லப்பட்டுள்ள எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் இது.

- Advertisement -