செல்வம் பெருக வளர்பிறை வசந்த பஞ்சமி வாராகி வழிபாடு

selvam peruga
- Advertisement -

வாராகி அன்னையின் வழிபாடு என்றாலே அது பஞ்சமி திதி தான். அந்த வகையில் இன்று வந்திருக்கக் கூடிய இந்த பஞ்சமியை வசந்த பஞ்சமி என்று சொல்வார்கள் அது மட்டுமின்றி இது வளர்பிறையில் வந்திருக்கக் கூடிய பஞ்சமியும் கூட.இவை அனைத்திலும் விட இந்த பஞ்சமி வெள்ளிக்கிழமை அன்று விழுந்திருக்கிறது.

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயார், சுக்கிரன் ஆகியோரின் அருள் ஆசிய பெறக் கூடிய அற்புதமான நாள். அந்த தினத்தில் வாராகி அன்னையை நாம் இந்த முறையில் வழிபடும் பொழுது நம்முடைய செல்வ நிலை பல மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வளர்பிறை வசந்த பஞ்சமி வாராகி வழிபாடு

இந்த பஞ்சமி திதியானது இன்று மாலை 5.48 க்கு தொடங்கி நாளை மாலை 5.38 மணி வரை தான் உள்ளது. வாராகி அன்னையின் வழிபாட்டை இரவு நேரத்தில் செய்வது தான் சிறந்தது. ஆகையால் இன்றைய தினத்தில் வாராகி அன்னை வழிபடுவது நமக்கு பல்வேறு பலன்களை கொடுக்கும்.

இந்த வழிபாடு செய்வதற்கு வாராகி அன்னையின் திருவுருவப்படம் சிலை இருந்தால் அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டிட்டு தயார் செய்து கொள்ளுங்கள். படம் இல்லையென்றால் ஐந்து முகம் கொண்ட அகல் விளக்கை வாங்கி வைத்து அதை வாராகி அன்னையாக பாவித்து தீபம் ஏற்ற வேண்டும். அப்படி ஐந்து முகம் விளக்கு கிடைக்கவில்லை என்றால் ஐந்து அகல் விளக்கை வாங்கி வைத்து தீபம் ஏற்றலாம்.

- Advertisement -

எப்படி ஏற்றினாலும் ஒரு நெய் தீபம் ஏற்ற வேண்டும். ஐந்து முகம் கொண்டு தீபத்தை ஏற்றினால் அதில் சிறிதளவு நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். வாராகி அன்னைக்கு நெய்வேத்தியமாக மாதுளை முத்துக்கள் கிழங்கு வகைகள் நவதானியத்தால் செய்த அடை மிளகு சேர்த்து வடை இப்படியான வற்றை வைக்கலாம். இது நாம் எப்போதும் வாராகி அன்னை வழிபடும் முறை.

செல்வ வளத்தை பெருக்கிக் கொள்வதற்கான முறை பற்றி இப்போது பார்க்கலாம். இந்த தீப வழிபாட்டை இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக செய்ய வேண்டும். ஏனெனில் இது தான் சுக்கிர ஹேரை இந்த நேரத்தில் வழிபாடு செய்யும் போது சுக்கிரனின் அருள் ஆசி முழுவதுமாக நமக்கு கிடைக்கும் இத்துடன் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண ஆசியும் பெறலாம்.

- Advertisement -

அதற்கு ஒரு சிறிய தட்டு எடுத்துக் கொள்ளுங்கள் அந்த தட்டிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு விட்டு அதன் மேல் கல் உப்பை பரப்பி விடுங்கள். இந்த கல்லுப்பின் மீது மஞ்சளை கொண்டு ஸ்ரீம் என்ற மந்திரத்தை எழுதுங்கள். அதன் பிறகு இந்த கல் உப்பை சுற்றிலும் ஆறு மொச்சை பயிரை வையுங்கள் .இது சுக்கிர பகவானுக்கு மிகவும் உகந்த தாகும்.

இப்போது அந்த ஸ்ரீம் என்ற மந்திர வார்த்தைக்கு மேல் ஒரு அகல் விளக்கை வையுங்கள். இந்த அகல் விளக்கும் மஞ்சள் குங்குமம் பொட்டிட்டுக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் நிறத்தில் திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்றி ஓம் வாராகி நமஹ என்ற இந்த நாமத்தை 27 முறை சொல்லுங்கள்.

அதன் பிறகு உப்பின் மேல் வைத்து இந்த மொச்சையை நன்றாக தூள் செய்து எறும்பிற்கு தானமாக வைத்து விடுங்கள்.இந்த கல் உப்பு மஞ்சள் இவை எல்லாம் பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் காலை இதை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள் அல்லது தண்ணீரில் கரைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: காரியத் தடை நீங்க சதுர்த்தி வழிபாடு

இந்த ஒரு தீப வழிபாடு உங்களுடைய வாழ்க்கையின் செல்வ வளத்தை பல மடங்கு அதிகரித்து கொடுக்கும். மேலும் சுக்கிரன் ஹோரையில் அன்னையை வழிபடுவதால் அனைத்து செல்வாதிபதி தெய்வங்களின் அருள் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -