பணக்கஷ்டம் தீர ராமநவமி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

ramar3
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் மனிதர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய கஷ்டம் பணக்கஷ்டம். எப்படியாவது பணத்தை சம்பாதித்து விட மாட்டோமா, குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டத்தை எல்லாம் தீர்த்து விட மாட்டோமா என்று ஓடி ஓடி பணத்தை சேர்க்கின்றோம். ஆனாலும் நாம்தான் பணத்தை தேடி ஓடுகின்றோமே தவிர, அந்த பணம் நம்மை தேடி ஓடி வர மாட்டேங்குது. இதற்கு என்ன செய்வது. இன்று ராமபிரான் அவதரித்த ராமநவமி அல்லவா. ராமரை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். பணம் தானாக உங்களைத் தேடி ஓடி வரும்.

பணக்கஷ்டம் தீர

இன்று 17.4.2024 புதன்கிழமை ராமநவமி கொண்டாடப்படவிருக்கின்றது. இன்று மாலை 7 மணி வரைக்கும் தான் இந்த ராம நவமி திதி இருக்கின்றது. இன்று மாலை 7 மணிக்குள் பூஜை அறையில் அமர்ந்து இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். ஒரு பத்து ரூபாய் நோட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நோட்டை செலவு செய்யக்கூடாது. இந்த பரிகாரத்தை செய்து இந்த நோட்டை அப்படியே மடித்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விட்டால் போதும் உங்கள் வீட்டில் பண ஈர்ப்பு விதி அதிகரிக்கும்.

- Advertisement -

இந்த நம்பரை ரூபாய் நோட்டில் எழுதுவதற்கு பச்சை நிற பேனாவை பயன்படுத்துங்கள். 91724. இதில் ஒன்பது என்பது நவமி திதியின் எண். அதாவது அமாவாசை முடிந்து ஒன்பதாவது நாள் நவமி திதி. பௌர்ணமி முடிந்தாலும் ஒன்பதாவது நாள் நவமி திதி வரும்.

ஆக நவமி திதியை குறிக்கக்கூடிய எண் இந்த 9. இன்றைய தேதி 17, வருடம் 24 அவ்வளவுதான். இந்த நம்பரில் மறைந்து இருக்கக்கூடிய சூட்சமம் இதுதான். இந்த நம்பரை ரூபாய் நோட்டில் எழுதும்போது ராம ராம நாமத்தை மனதில் ஜபித்துக் கொண்டே எழுதுங்கள்.

- Advertisement -

பணம் எங்களை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும் என்ற நேர்மறை ஆற்றலோடு இந்த நம்பரை எழுதி இந்த நோட்டில் உள்ளங்கைகளில் வைத்து ராம நாமத்தை நம்பிக்கையோடு ஜெபித்து உங்கள் பணக்கஷ்டம் இன்றோடு ஒரு முடிவுக்கு வந்தது என்று நீங்களே தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.

இனி வரக்கூடிய காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் பல மடங்காக பெருகும் என்று நினைத்து இந்த நோட்டை எடுத்து பீரோவில் வச்சிருங்க. கூடவே இன்று பெருமாள் கோவிலுக்கு போயிட்டு துளசி பிரசாதமாக வாங்கி இந்த நோட்டுக்கு மேல வையுங்க ரொம்ப ரொம்ப நல்லது. உங்களுடைய வீட்டில் பணமும் நகையும் சேர்ந்து கொண்டே இருக்கும். செல்வ கடாட்சம் பல மடங்கு பெருகும்.

இதையும் படிக்கலாமே: ராம நவமி அன்று உச்சரிக்க வேண்டிய ராம மந்திரம்

நம்பிக்கையின் அடிப்படையில் செய்யக்கூடிய பரிகாரம் இது. பரிகாரத்தின் மீது துளி சந்தேகம் இருந்தாலும் பரிகாரத்தை செய்ய வேண்டாம். நிச்சயமாக பலிக்காது. முழு நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு பரிகாரம் 100 மடங்கு அல்ல 200 மடங்கு பலன் தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -