பணம் வருவதற்கான தடைகள் நீங்கி, உங்கள் கையில் மளமளவென்று பணம் சேர்வதற்கு இந்த மூன்று பாதாம் மட்டும் போதும்

sukkiran
- Advertisement -

ஒரு சிலரிடம் பணம் கையில் வருவது என்பதே போராட்டமாக இருக்கும். உழைத்த உழைப்பிற்கான பணம் கையில் வரும் நேரத்தில் வராமல் தடைகள் ஏற்படும். ஒருசில நேரங்களில் இவர்களுக்கு அந்த நேரத்தின் மீதும், பணத்தின் மீதும் கோபம் அதிகமாக வந்துவிடும். தேவைப்படும் நேரத்தில் வராத பணம் தள்ளிப் போகும் பொழுது இருக்கின்ற பிரச்சினைகளின் தாக்கம் மனிதனை பலவித பிரச்சினைகளுக்குள் மாற்றிவிடுகிறது. பணம் அதிகம் உள்ளவர்களிடம் சரளமாக பணம் வந்து கொண்டே இருக்கும். இல்லாதவரிடம் பணம் வருவதற்கு தடுமாற்றம் ஏற்படும். இதற்கு காரணம் புரியாமல் பலரும் தங்களை நொந்து கொண்டிருப்பார்கள். இதனால் பணத்தின் மீது கோபம் அதிகரிக்கும், இந்தப் பணம் நம்மிடம் வரவே வராது, நமக்கும் பணத்திற்கும் அதிக தூரம் இருக்கிறது என்ற எண்ண ஓட்டம் வந்துவிடும். இவ்வாறான எண்ணங்களே நம்மிடம் பணம் சேர்வதைத் தடுக்கிறது. இந்த தடைகள் அனைத்தும் நீங்குவதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கையில் நிறைய பணம் சேர்வதற்கு அவர்கள் ஒன்றும் வரம் வாங்கி வரவில்லை. அதேபோல் நம் கையில் பணம் சேராமல் இருப்பதற்கு நாம் ஒன்றும் சாபம் வாங்கி வரவில்லை. எனவே பணம் நம்மிடம் சேர்வதற்கு நம்மாலான முயற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். பணம் என்பது இன்று என்னிடம், நாளை உன்னிடம் என்று ஒருவரிடம் இருந்து ஒருவர் இடம் மாறிக்கொண்டே இருக்கும். பணம் என்பது நிலையான ஒரு விஷயம் கிடையாது.

- Advertisement -

நமது முன்னோர்கள் சொல்படி நமது எண்ணங்கள் நிலையானதாக இருந்தால் நாம் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நல்லவையாக முடியும். அவ்வாறு தொடர்ந்து மூன்று தினங்கள் ஒரு காரியத்தை நினைத்துக்கொண்டே இருந்தால் அந்த காரியம் நிச்சயம் வெற்றி பெறும். இருப்பினும் ஒரு சிலரிடம் பணம் சேர்வதற்கு தடைகள் அதிகமாக இருந்து கொண்டிருக்கும். இதற்கு நம்மிடம் இருக்கும் கண்ணுக்கு தெரியாத தோஷங்களும் காரணமாக இருக்கலாம்.

இந்த தோஷங்களை அகற்றுவதற்கு வெள்ளிக்கிழமை தோறும் ஓரை நேரத்தில் இந்தப் பரிகாரம் செய்து வர நல்ல பலன் கிடைக்கிறது. அதற்கு முதலில் காலை எழுந்தவுடனே பூஜை அறையில் பூஜை செய்துவிட்டு, ஏற்றிய தீபம் அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதியம் சுக்கிர ஓரையில் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் ஒரு பச்சை நிற துணியில் மூன்று பாதாமை எடுத்து மூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அதனையும் பூஜை அறையில் வைத்து குலதெய்வம் மற்றும் சுக்கிர பகவானை மனதில் நினைத்துக் கொண்டு மனமார வேண்டிக் கொள்ள வேண்டும். பணம் என்னிடம் வருவதற்கான தடைகள் அகன்று, என்னிடம் பணம் சேர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

பின்னர் இந்த மூட்டையை நீங்கள் எப்போதும் பணம் வைக்கும் டப்பாவில் வைத்து விட வேண்டும். இதனை மூன்று மாதத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்து வருவதன் மூலம் உங்களுக்கு இருக்கும் தோஷங்கள் நீங்கி, உண்டாகும் மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

- Advertisement -