பல நாள் பணக்கஷ்டமும் அஞ்சு நிமிதசத்துல பஞ்சாய் பறக்க அஞ்சு ரூபாய் நாணயம் போதும்.

five rupees mahalakshmi
- Advertisement -

ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கையை நிம்மதியாகவும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தான் நினைப்போம். அதற்காகத் தான் பாடும் படுகிறோம். ஆனாலும் எல்லோராலும் இந்த வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடிவதில்லை. அதற்கு காரணம் இந்த பற்றாக்குறையும் வருமானம் போதாததும் தான். அதை சரி செய்வதற்கான பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்தப் பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பணக்கஷ்டம் தீர பரிகாரம்

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலை பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும். இதை செய்ய நமக்கு சிகப்பு நிறத்திலான சிறிய துணி அத்துடன் ஒரு ஐந்து ரூபாய் நாணயம், ஒரு கைப்பிடி கல் உப்பு தேவை. இந்த நாணயம் உப்பு இதெல்லாம் வீட்டில் இருக்கும் சிகப்பு துணியை மட்டும் முதல் நாளே வாங்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை காலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து முடித்த பிறகு விளக்கு ஏற்றிய பிறகு பூஜையறையில் அமர்ந்து கொண்டே இந்த சிகப்பு நிற துணியில் ஒரு கைப்பிடி நிறைய கல் உப்பை வைத்து அதன் மேல் இந்த ஐந்து ரூபாய் நாணயத்தையும் வைத்து முடிச்சாக கட்டி விடுங்கள்.

இந்த முடிச்சை பூஜை அறையில் மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து உங்களுடைய பண பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து பணம் பல மடங்கு பெருக வேண்டும் என வேண்டிக் கொண்டு இந்த முடிச்சை உங்கள் வீட்டில் வட கிழக்கு மூலையில் வைத்து விடுங்கள்.இதை வடகிழக்கு மூலையில் எதன் மேல் வேண்டுமானாலும் வைக்கலாம்.

- Advertisement -

இந்த முடிச்சானது வீட்டில் இருந்தால் பணவரவானது உங்களைத் தேடி வரும், பண வரவிற்கான வாய்ப்புகள் பெருகும், வருமானம் அதிகரிக்கும், வேலை வாய்ப்புகள் பெருகும், வர வேண்டிய இடத்திலிருந்து பணம் வரும், உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் நீங்கள் யாரிடம் சென்று உதவி கேட்டாலும் பணம் நிச்சயம் கிடைக்கும். பண தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் இந்த மூட்டை சரி செய்யும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இதை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள் மூக்குக்கு மேல் முன்கோபம் பொசுக்கு பொசுக்கென இனி உங்களுக்கு வரவே வராது.

ஐந்து ரூபாய் நாணயம் சிகப்பு நிற துணி இவை எல்லாம் குபேர சம்பத்து நிறைந்த பொருள். இத்துடன் மகாலட்சுமி தாயாரின் அம்சமான உப்பு அனைத்தும் ஒரு சேர ஒரே இடத்தில் இருக்கும் போது பணம் உங்களை வந்து அடையும். நம்பிக்கையிருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -