இதை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள் மூக்குக்கு மேல் முன்கோபம் பொசுக்கு பொசுக்கென இனி உங்களுக்கு வரவே வராது.

kovam
- Advertisement -

சில பேருக்கு பேசிக் கொண்டிருக்கும் போதே மூக்குக்கு மேல் கோபம் வரும். நாம் என்னதான் சொல்ல வருகின்றோம் என்று காது கொடுத்து கேட்கவே மாட்டார்கள். ரொம்பவும் சத்தம் போட்டு கோபத்தில் கத்துவார்கள். முன்கோபம் ஒருவருடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை அப்படியே அழித்துவிடும். நீங்களே கொஞ்சம் நினைத்து பாருங்கள்.

முன் கோபத்தில் எரிந்து எரிந்து விழுபவர்களை பார்த்தால், ‘இவனுக்கு என்ன நல்லது சொல்வது, எதை சொன்னாலும் இவன் காது கொடுத்து கேட்க மாட்டான். எப்படியோ போகட்டும். பட்டால் தான் புத்தி வரும்.’ என்று ஒதுங்கி விடுவீர்கள். ஆகவே முன் கோபப்பட்டால் அடுத்தவர்களுடைய நல்ல ஆலோசனையைக் கூட நம்மால் பெற முடியாது.

- Advertisement -

சிலர் இந்த முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள், ஆனால் வழி தெரியாமல் சிரமப்படுவார்கள். உங்களுக்கும் முன்கோபம் அதிகம் வருமா. அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா. இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பதிவு உங்களுக்காக.

முன் கோபம் குறைய சந்தன திலகம்

தினமும் காலையில் எழுந்து இஷ்ட தெய்வத்தின் நாமத்தை மூன்று முறை சொல்லிவிட்டு, இன்றைக்கு நாம் முன்கோபம் பட மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு வழக்கம் போல உங்களுடைய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, பூஜை அறைக்கு சென்று கொஞ்சமாக சந்தனத்தில் பன்னீர் ஊற்றி கலந்து அந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். இந்த சந்தனமானது குளிர்ச்சி தன்மை கொண்டது.

- Advertisement -

தெய்வீகத் தன்மை கொண்டது. முன்கோபத்தை குறைத்து விடும். பரிகாரத்திற்கு நீங்கள் பயன்படுத்தும் சந்தனம், சுத்தமான சந்தன கட்டையில் செய்யப்பட்ட சந்தனமாக இருக்க வேண்டும். அந்தப் பன்னீர் சுத்தமான பன்னீராக இருக்க வேண்டும். அந்த பன்னீரின் வாசத்தை நீங்கள் சுவாசிக்கும் போது உங்களுடைய மன அழுத்தம் நீங்கும். முன்கோபமானது வராமல் தடுக்கப்படும்.

இதில் நமக்கு இன்னொரு லாபமும் இருக்கிறது. மஞ்சள் நிறத்தில் இருக்கும் சந்தனம் குரு பகவானுக்கு உரிய பொருள். இதை தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கூட சீக்கிரத்தில் சரியாகும். அதோடு மட்டுமல்லாமல் ஒருவருடைய முகம் கலையாக அழகாக தெரிய வேண்டும் என்றால் இந்த சந்தன திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

உங்கள் முகத்தில் இருக்கும் அந்த பீடை நீங்கி முகம் லட்சுமி கடாட்சத்தோடு தெரிய தொடங்கி விடும். இப்படியும் பல நன்மைகள் நிறைந்த இந்த சந்தனத்தை இன்றிலிருந்து நெற்றியில் வைக்கத் தொடங்கி பாருங்களேன். நீங்களே உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்ல மாற்றங்களை உணருவீர்கள்.

இதையும் படிக்கலாமே: தேவையில்லாத செலவை குறைக்க பர்ஸில் இருக்க வேண்டிய முக்கியமான பொருள் இதுதான்.

பரிகாரத்தை செய்து விட்டு விரைந்து அடுத்தவர்களோடு மல்லுக்கட்டி திரியக்கூடாது. கோபத்தை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் ஆழ் மனதிலும் இருக்க வேண்டும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -