பீரோவில் வைக்கும் பணமெல்லாம் பஞ்சாக காற்றில் பறக்கிறதா? பணம் உங்களை விட்டு பறந்து செல்லாமல் இருக்க, பணத்தின் மேலே இந்த பொருளை வைத்தாலே போதும்.

- Advertisement -

பேப்பர் பறக்காமல் இருப்பதற்கு பேப்பர் வெயிட்டை வைப்பது போலவே, பணம் நம்மைவிட்டு பறக்காமல் இருக்க, அதாவது பணம் வீணாக செலவாகாமல் இருக்க, பணத்தை பாதுகாக்க, ஒரு பொருளை நாம் பணத்தின் மேல் வைக்கப் போகின்றோம். எவ்வளவு பணம் வருமானமாக வருகின்றது. அந்த பணத்தை எல்லாம் கொண்டுபோய் பணப்பெட்டியில் பீரோவில் வைக்கின்றோம். ஆனால், அந்த பணமெல்லாம் செல்லும் இடமே தெரிய மாட்டேன்கிறது. அவ்வளவு செலவு. எவ்வளவு வீண் விரயங்கள் என்று புலம்பிக் கொண்டே இருப்பவர்கள் உங்கள் பணம் உங்களை விட்டு பறந்து செல்லாமல் இருக்க இந்த பொருளை பணத்தின் மீது வையுங்கள். அது எந்த பொருள் உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆர்வமாக உள்ளதா.

bero-padikaram

பணத்தின் மேலே நாம் வைக்க வேண்டிய பொருள் படிகாரம். நிலை வாசல்படியில் படிகாரத்தை கட்டி தொங்க விட்டால் வீட்டிற்குள் எந்த ஒரு கண் திருஷ்டியும் கெட்ட சக்தியையும் வரவிடாது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஒரு சிறிய துண்டு படிகார கட்டியை எடுத்து பணத்தின் மேலே வைத்து விட்டால் பணம் உங்களை விட்டுப் பறந்து எங்கேயுமே செல்லாது. எங்களிடம் கட்டுக்கட்டாக பணம் எல்லாம் இல்லை நாங்கள் எப்படி இதை செய்வது. ஒரே ஒரு நூறு ரூபாயை உங்கள் பீரோவில் வைத்தால் கூட, அந்த நூறு ரூபாய்க்கு மேல் ஒரு சிறிய படிகார கட்டி வையுங்கள்.

- Advertisement -

அந்த நூறு ரூபாய் பல மடங்கு ரூபாயாக பெருகும். அந்த நூறு ரூபாய் வீண் விரையம் ஆகாது. பணத்தின் மேலே இந்த படிகார கல்லை வைத்து விட்டு, நோட்டை பார்த்துக் கொண்டே இருந்தால் எக்காரணத்தை கொண்டும் அந்த நோட்டு குட்டி போடாது. நீங்கள் தான் அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். பரிகாரம் என்பது உங்களுக்கு ஊன்றுகோலாக இருப்பதுதான்.

தவிர பரிகாரமே பணத்தைக் கொண்டுவந்து உங்களுக்கு கொடுக்காது. ஆத்மார்த்தமாக நம்பி நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து விட்டு, பணம் சம்பாதிப்பதற்கான முயற்சிகள் எடுத்தால் பரிகாரத்தின் மூலம் பல நன்மைகளைப் பெற முடியும். படிகார கட்டிக்கு அதிகமான சக்தி உள்ளது. அந்த நேர்மறை ஆற்றல் நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதே போல் தான் உங்களிடம் சொத்து பத்திரம், நில பத்திரம் எது இருந்தாலும் சரி, அந்த பத்திரத்தின் மேலும் ஒரு படிகார கல்லை வைத்து வைக்கலாம். இப்படி செய்தால் மேலும் மேலும் சொத்து சேரும் யோகம் உங்களுக்கு வரும்.

gold

நகைப்பெட்டி வைத்துள்ளீர்களா. அந்த நகை பெட்டியின் மீது படிகாரத்தை வையுங்கள். மேலும் மேலும் நகை சேரும் யோகம் வரும். நான்கு பட்டுப் புடவைகளை வைத்துள்ளீர்களா. அந்த பட்டுப் புடவையின் மேல் படிகார கல்லை வையுங்கள். பட்டுப் புடவையை மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்கும். பட்டுப் புடவைக்கு மேல், படிகாரத்தை நேரடியாக வைக்க வேண்டாம். துணி கிழிவதற்க்கு வாய்ப்பு உள்ளது. பட்டுப்புடவை ஒரு மஞ்சள் துணி பையில் வைத்துவிட்டு, மஞ்சள் துணிப்பைக்கும் மேலே படிகாரத்தை வைத்துக் கொள்ளலாம்.

bero

பணத்தின் மேலே படிகார கல்லை வைத்தால் எதுவும் ஆகாது. இருப்பினும் பணம் ஏதாவது ஆகிவிடும் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், பணத்தை மஞ்சள் பையில் போட்டு அந்த மஞ்சள் பைக்கு மேலே இந்த படிகார கல் வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய இஷ்டம்தான். முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல பலனை நீங்கள் பெறுவீர்கள் என்று கருதி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -