பண பிரச்சனையை தீர்க்க முத்தான 3 பரிகாரங்கள்

sivan6
- Advertisement -

கைக்கு வந்த வருமானம் வீண் விரைய செலவு ஆகாமல் நிலையாக சேமிப்பில் இருக்கவும், அடகு வைத்த தங்கத்தை மீட்கவும், மேலும் மேலும் தங்கம் வாங்கி சேர்க்கவும், பூர்வீக சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வரவும், எளிமையான ஆன்மீகம் சொல்லக்கூடிய மூன்று பரிகாரங்களை தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரம் எல்லோராலும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

வருமானம் நிரந்தரமாக கையில் தாங்க

கையில் வரக்கூடிய பணம் தங்கவே மாட்டேங்குது. வீண் விரைய செலவுகள் ஆகிக்கொண்டே இருக்கா. வாரம் தோறும் திங்கட்கிழமை ஆனால் உங்கள் கைகளால் கொஞ்சம் வில்வ இலையை வாங்கி சிவன் கோவிலுக்கு மாலையாக கட்டி போடுங்கள். கூடவே உங்கள் கையால் சாம்பிராணி வாங்கி சிவன் கோவிலுக்கு தானம் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

பால் சாம்பிராணி என்று சொல்லுவார்கள் அல்லவா. சிவனுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது சாம்பிராணி புகையின் வாசம். இதை நீங்கள் சிவன் கோவில்களுக்கு தொடர்ச்சியாக தானம் கொடுத்துக் கொண்டே இருந்தால் உங்கள் செலவுகள் குறைந்து கையில் பணம் தங்கும்.

வீடு முழுவதும் தங்கம் நிரம்பி வழிய

அந்த காலத்தில் எல்லாம் வாசலில் காய போட்டு இருக்கும் நெல்லை, கோழி வந்து சாப்பிட்டால், பாட்டி காதில் கிடக்கும் தங்க குண்டலத்தை எடுத்து கோழியை துரத்த வீசமாம். அந்த அளவுக்கு தங்கம் அவர்களிடம் கொட்டி கிடந்தது. இன்று குண்டுமணி தங்கம் கூட நம்மால் வாங்க முடியாத சூழ்நிலை. புதுசா தங்கம் வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை.

- Advertisement -

வாங்கிய தங்கத்தை அடமானத்தில் வைக்கக்கூடிய நிலைமையில் இருக்கின்றோம். இந்த நிலைமை மாற நம் வீட்டிலும் தங்கம் நிறைவாக இருக்க, லட்சுமி குபேரருக்கு மஞ்சள் நிற சாமந்திப் பூவில் மாலை கட்டிக் கொண்டு போய் போடுங்க. அதிலும் வியாழக்கிழமை இந்த மஞ்சள் சாமந்தியில் மாலை கட்டி போட்டு தங்கம் வேண்டும் என்று வேண்டுதல் வைத்தால் அந்த வேண்டுதலானது உடனே பலிக்கும்.

சில பேர் இதை மஞ்சள் செவ்வந்திப் பூ என்றும் சொல்லுவார்கள். அதேபோல பெண்கள் வெள்ளிக்கிழமை மஞ்சள் நிற பூவை தலையில் சூட்டிக் கொள்ளணும். இதே சாமந்தி பூவை வைத்துக் கொண்டாலும் தவறு கிடையாது.

- Advertisement -

பூர்வீக சொத்து பிரச்சனை முடிவுக்கு வர

பாட்டன் பூட்டன் சம்பாதித்து வைத்த பூர்வீக சொத்து நிறைய இருக்கும். ஆனால் அந்த சொத்து எல்லாம் பங்குதாரர்களின் தகராறு, கோர்ட்டு கேஸ் வழக்குகளில் நிற்கும். சொத்து இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை நிறைய பேருக்கு இருக்கு. இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், சிவப்பு நிற செம்பருத்திப் பூக்களை அழகாக மாலையாக கோர்த்தோ அல்லது கட்டியோ உங்கள் ஊர் பெண் தெய்வத்திற்கு கொண்டு போய் போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் ஜெயிக்க முத்தான 3 பரிகாரம்

உங்க ஊர் மாரியம்மன், உங்கள் ஊர் எல்லையம்மன் என்று யாராவது இருப்பார்கள் அல்லவா. அந்த அம்பாளுக்கு உங்கள் கையால் சிவப்பு நிற செம்பருத்தி பூ மாலை போடுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் இந்த வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் உங்களுடைய பூர்வீக சொத்து பிரச்சனை, பல வருடமாக இழுத்துக் கொண்டே இருக்கக்கூடிய சொத்து பிரச்சனை உடனடியாக ஒரு முடிவுக்கு வரும். சொந்த பந்தங்கள் எல்லாம் ஒன்று கூடி சொத்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ள அவர்களே முன்வருவார்கள்.

- Advertisement -