பண பிரச்சினை தீர முருகர் வழிபாடு

murugan deepa valipadu
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் பணம் ஒன்று தான் பிரதானமாக திகழ்கிறது. பணத்தை பெற வேண்டும் என்றால் அதற்காக பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஏழை முதல் பணக்காரர் வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரீதியாக பணப்பிரச்சினை என்பது இருந்து கொண்டு தான் இஇருக்கும். ந்த பண பிரச்சனையை தீர்ப்பதற்கு முருகப்பெருமானின் வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக பணரீதியான பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும் என்றுதான் பலரும் கூறுவார்கள். மகாலட்சுமி தாயாரை வழிபடுவதன் மூலம் பணவரவு என்பது அதிகரிக்கும். லட்சுமி கடாட்சம் ஏற்படும். ஆனால் பணத்தால் ஒருவருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது, பணத்தால் ஒருவருக்கு துன்பங்கள் ஏற்பட்டு இருக்கிறது என்றால் அவர்கள் கண்டிப்பான முறையில் முருகப் பெருமானை தான் வழிபட வேண்டும்.

- Advertisement -

நம்முடைய கஷ்டங்களையும், துன்பங்களையும், துயரங்களையும் நீக்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானிடம் தான் பண தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை திங்கட்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அல்லது மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அருகில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு முருகப்பெருமானுக்கு முன்பாக இரண்டு அகல் விளக்குகளில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அங்கேயே அமர்ந்து “ஓம் ஸ்ரீம் சரவணபவ” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த வழிபாட்டை நாம் ஒரு மணி நேரம் செய்ய வேண்டும். இத்தனை முறைதான் மந்திரத்தை கூற வேண்டும் என்ற கணக்கு இல்லை. ஆனால் கோவிலில் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும். அப்படி இருக்கக்கூடிய அந்த ஒரு மணி நேரமும் மனமுருகி பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

அருகில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் கோவில் இல்லை என்பவர்கள் வீட்டிலேயே இதே முறையில் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த முறையில் தொடர்ந்து 27 திங்கட்கிழமைகள் முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று தீபமேற்றி வழிபட்டு வரவேண்டும். இப்படி செய்வதன் மூலம் பணம் தொடர்பாக ஒருவருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது என்றால் அந்தப் பிரச்சினை தீர்வதற்குரிய வழியை முருகப்பெருமான் காட்டுவார். பணத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த பிரச்சினை இருந்தாலும் அந்த பிரச்சினை சரி செய்வதற்குரிய வழிகள் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: அனைத்து பிரச்சினைகளும் தீர ஒரே பரிகாரம்
முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரையில் வழிபட வேண்டும் என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்றால் நாம் திங்கட்கிழமையில் முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த வழிப்பாட்டு முறையை நம்பிக்கையுடன் மேற்கொண்டு பணரீதியான பிரச்சனையில் இருந்து வெளியில் வந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்வோம்.

- Advertisement -