கழுத்தை நெரிக்கும் கடனும், திடீர் தேவைக்கு பணமும் வேண்டுபவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம்! பணப் பிரச்சனைக்கு தீர்வு தருவாரா இவர்?

cash-deepam-vilakku
- Advertisement -

மனிதனாக பிறந்துவிட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் கழுத்தை நெரிக்க கூடிய அளவிற்கு கடன் பிரச்சனை பலருக்கு இருப்பது உண்டு. இந்த கடன் பிரச்சனையால் சிக்கித் தவிப்பவர்களும், அவசர தேவைக்கு கூட பணம் கிடைக்காமல் தள்ளாடுபவர்களும், இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். பணப் பிரச்சனைக்கு தீர்வு தருவாரா இவர்? அவரை எப்படி வணங்க அனுகூல பலன் கிடைக்கும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

என்னதான் விழுந்து விழுந்து நீங்கள் கடவுளை வணங்கி வந்தாலும், செய்த பாவத்திற்கு உரிய கர்ம பலன்களை அனுபவித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். இது போன்ற கர்ம பலன்களை அனுபவிப்பவர்களும், ஜாதக ரீதியாக சிக்கல்களில் தவிப்பவர்களும் அதிலிருந்து எளிதாக வெளிப்பட்டு பண பிரச்சனையை சரி செய்து கொள்ள எளிய பரிகாரங்களை நம்பித் தான் இருக்கின்றனர். இத்தகையவர்கள் பண பிரச்சினைகள் தீர செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை தான் இனி பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

லக்ஷ்மி நரசிம்மர் பண பிரச்சனையை தீர்க்கக் கூடிய அற்புதமான கடவுள் ஆவார்! இவரை வேண்டி வணங்குபவர்களுக்கு பண ரீதியான எந்த பிரச்சனைகளும் வருவதில்லையாம். அந்த அளவிற்கு பணம் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட செய்யக்கூடிய அற்புதமான கடவுளாக விளங்கக்கூடிய இவரின் அருளை ரொம்பவும் சுலபமாக பெற்றுக் கொள்ள முடியும். ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று அங்குள்ள சன்னிலியில் ஆறு விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். ஆறு விளக்குகளும் நெய் விளக்குகளாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இது போல 5 வாரம் தொடர்ந்து நீங்கள் லக்ஷ்மி நரசிம்மர் சன்னதியில் ஆறு விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இப்படி செய்து வந்து பின் தீபம் ஏற்றிய பிறகு ஆலமரத்திற்கு செல்ல வேண்டும். ஆலமரத்தை சுற்றி 54 முறை அல்லது 108 முறை வலம் வந்து வழிபட வேண்டும். அதன் பிறகு தான் நீங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும். நரசிம்மர் கோவிலில் விளக்கேற்றிவிட்டு, ஆலமரத்தை 108 முறை சுற்றி வர உங்களுக்கு தீராத கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதாக நம்பிக்கை கூறப்படுகிறது.

- Advertisement -

அது மட்டும் அல்லாமல் சிலருக்கு அவசர தேவைக்கு பணம் கிடைக்காமல் இருப்பார்கள். இத்தகையவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அது போல நீங்கள் எப்போதும் பண ரீதியான பிரச்சினைகளை சந்திக்காமல் இருக்க, அடிக்கடி லட்சுமி நரசிம்மரை வழிபடுவது சிறப்பு! லட்சுமி நரசிம்மரை வழிபடும் பொழுது சனிக்கிழமைகளில் வழிபடுங்கள், ரொம்பவும் விசேஷமான பலன்களை அவர் அள்ளிக் கொடுப்பார்.

இவ்வாறு ஓர் வாரம் செய்து விட்டு அப்படியே விடக் கூடாது. ஐந்து வாரங்கள் சனிக்கிழமை தோறும் செய்ய வேண்டும். பெண்கள் தீட்டு காலத்தில் ஒரு வாரத்தை தவிர்த்து மற்ற வாரங்களில் இதை செய்து பார்க்கலாம். இப்படி ஐந்து வாரங்கள் தொடர்ந்து சனிக்கிழமைகளில் லக்ஷ்மி நரசிம்மரை இப்படி வழிபட்டு வந்தால், அவர் மனம் குளிர்ந்து தீராத கடனில் இருந்தும், பண பிரச்சனையில் இருந்தும் விடுவிப்பார் என்பது ஐதீகம்.

- Advertisement -