7 நாட்களில் பணத் தேவையை பூர்த்தி செய்ய பூசணி விதை பரிகாரம்:

cash1
- Advertisement -

பணம் என்ற இந்த ஒரு விஷயத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு நமக்கு எவ்வளவோ தேவைகள் பூர்த்தியாக வேண்டி இருக்கிறது. ஆனால் அந்த பண வரவுக்கு உண்டான வழியைத்தான் நம்மால் தேடிக் கொள்ள முடியவில்லை. உதாரணத்திற்கு நல்ல வேலை கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள், தொழிலில் லாபம் வராமல் கஷ்டப்படுபவர்கள், வேலை செய்தும், தொழில் செய்தும் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

வாசல் வரைக்கும் வந்த பணம் சில பேருக்கு வீட்டுக்குள் வராது. அந்த அளவுக்கு சில பேர் துரதிஷ்டசாலிகளாக இருப்பார்கள். பத்து ரூபாய் கைக்கு வந்தால், சில பேருக்கு அந்த பத்து ரூபாய் தங்கவே தங்காது. உடனடியாக 20 ரூபாய்க்கு செலவு வரிசை கட்டி நிற்கும். இது தவிர கடன் வாங்கிவிட்டு அதை திரும்ப அடிக்க முடியாமல் கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படி உங்களுக்கு பணத்தினால் எவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தாலும் சரி, அதை 7 நாட்களில் சரி செய்வதற்கு ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உள்ளது. அது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம். பணப் பிரச்சனை தீர பூசணிவிதை பரிகாரம். எவ்வளவு பணம் தேவை என்றாலும் அது உங்கள் வீடு தேடி வரும்.

பணப் பிரச்சனை தீர பூசணிவிதை பரிகாரம்:
இந்த பூசணி விதையானது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அல்லது டிபார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கும். அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏழு பூசணி விதைகளை வலது உள்ளங்கையில் எடுத்து, கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து, குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய வேண்டுதலை வைக்கவும். ஏதாவது ஒரு வேண்டுதலாக இருக்கட்டும். உங்களுக்கு எந்த கடன் சுமை அதிகமாக பாரத்தை கொடுக்கின்றதோ அல்லது எந்த பிரச்சனையை சரி செய்ய உடனடியாக பணம் தேவையோ அந்த ஒரு விஷயத்தை மட்டும் சொல்லி பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வையுங்கள்.

- Advertisement -

உங்களுக்கே உங்கள் பண பிரச்சினை பற்றி நன்றாக தெரியும் அல்லவா. முதலிடத்தில் இருக்கக்கூடிய பணப்பிரச்சனையை சரி செய்ய, முதல் முறை இந்த பரிகாரத்தை தொடங்குங்கள். உள்ளங்கையில் இருக்கும் பூசணி விதை அப்படியே இருக்கட்டும். சமணம் போட்டு அமர்ந்து வேண்டுதலை ஆழ்மனதில் நம்பிக்கையோடு சொல்லுங்கள். ஐந்து நிமிடம் வரை இந்த வேண்டுதலை வைத்தால் போதும். பிறகு கையில் இருக்கும் அந்த விதைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வையுங்கள்.

ஏழு நாட்கள் தொடர்ந்து இதே போல வேண்டுதல் வைக்க வேண்டும். அதே ஏழு பூசணி விதைகளை எடுத்து உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு. தினமும் ஒரே நேரமாக இந்த வேண்டுதலை வைக்க வேண்டும். இன்று காலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை நீங்கள் செய்தால், 7 நாட்களும் தொடர்ந்து காலை 6 மணிக்கு தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

ஏழு நாள் இந்த வேண்டுதல் முடிந்ததும், ஏழாவது நாள் காலை 6 மணிக்கு வேண்டுதலை சொல்லி முடித்துவிட்டு, கையில் இருக்கும் அந்த 7 பூசணி விதைகளை அப்படியே ஒரு பேப்பரில் வைத்து மடித்துக்கொண்டு போய் மரத்தடியில் புதைத்து வைத்து விட்டு வர வேண்டும். வேப்பமரம் அரசமரம் வில்வம் மரம் வாழைமரம் இப்படி ஏதாவது ஒரு மரத்தடியில் இந்த விதைகளை புதைத்து வையுங்கள்.

கோவிலில் இப்படிப்பட்ட மரங்கள் இருக்கிறது அந்த இடத்தில் விதைகளை புதைக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றால் கோவில் மரத்தடியில் இந்த விதையை புதைத்து வைத்தால் உங்களுடைய வேண்டுதல் இன்னும் இன்னும் சீக்கிரம் பளிப்பதற்கு நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய இந்த பரிகாரம் முதல் பிரார்த்தனையை நல்லபடியாக நிறைவேற்றி விட்டது எனும் பட்சத்தில், மீண்டும் 7 விதைகளை எடுத்து அடுத்த பண பிரச்சனை தீர இதே போல ஏழு நாட்கள் வேண்டுதல் வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி, பிளாக் மேஜிக், போன்ற நெகடிவ் எனர்ஜியிலிருந்து நம்மை பாதுகாக்கும் ஹீலிங் நம்பர்.

ஏழு நாட்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போதே பண பிரச்சனை தீர என்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ, அதை தீவிரமாக நீங்கள் செய்ய வேண்டும். அப்போது உங்கள் முயற்சிகளில் நிச்சயம் வெற்றி கிட்டும். தேவைப்படுபவர்கள் மேலே சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -