இந்த மரத்தின் குச்சி பூஜை அறையில் இருந்தால், வீட்டில் வறுமை என்பதே இருக்காது. செல்வம் உங்கள் வீடு தேடி வருவதை யாராலும் தடுத்து நிறுத்தவும் முடியாது.

purasu-maram
- Advertisement -

அந்த காலத்தில் இருந்தே போற்றப்பட்ட ஒரு சிறப்பான மரத்தைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ரொம்பவும் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள், வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்கள், தொழிலில் நஷ்டம் இருந்தால், இப்படி பணம் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், இந்த மரத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த சிறிய குச்சி வீட்டில் இருந்தால் போதும். இவ்வளவு சிறப்பு அம்சங்களை கொண்ட பண பிரச்சனையை சுலபமாக தீர்க்கக்கூடிய அந்த மரம் எது, இந்த மரத்தை அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் எதற்காக பயன்படுத்தி வழிபாடு செய்து வந்தார்கள் என்பதை பற்றிய சில அரிய தகவல்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இன்றைக்கு நாம் புரசு மரத்தின் பெருமைகளை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். புரசு மரத்தைப் பற்றி நம்மில் நிறைய பேர் அதிகமாக கேள்விப்பட்டிருக்க மாட்டோம். புரசு மரத்தில் தான் ஏர் கலப்பையை செய்வார்கள். ஏர் கலப்பை என்பது உழுவதற்காக பயன்படுத்தக்கூடிய பொருள். அந்த காலத்தில் விவசாயம் தான் முதன்மை தொழிலாக இருந்து வந்தது. விவசாயிகள் தான் செல்வந்தர்கள். நம்முடைய முன்னோர்கள் அனைவருக்கும் சோறு போடக் கூடிய தெய்வம் என்றால் அது இந்த ஏர் கலப்பை. அப்படிப்பட்ட ஏர் கலப்பையை செய்வதற்காக அவர்கள் இந்த புரசுமர கட்டையை தான் பயன்படுத்துவார்கள்.

- Advertisement -

புரச மர கட்டையில் செய்த ஏர் கலப்பையை அவர்கள் தங்களுடைய தெய்வமாக பார்த்து வந்தார்கள். இந்த ஏர் கலப்பைக்கு மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து வீட்டில் வைத்து வழிபாடு செய்து வருபவர்கள் செல்வ செழிப்போடு இருப்பார்கள் என்பது நம்பிக்கை. இப்பேற்பட்ட புரசு மரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறிய குச்சியை தான் இன்று நாம் பரிகாரத்திற்கு பயன்படுத்த போகின்றோம். இப்போது ஏர் கலப்பைக்கெல்லாம் நாம் எங்கு செல்வது.

ஆகவே, புரசு மரத்தில் இருக்கும் ஒரு சிறிய குச்சியை மட்டும் எடுத்து அதை சுத்தமாக மஞ்சள் தண்ணீரில் கழுவி, மஞ்சள் பூசி, குங்குமப்பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து தினம்தோறும் அதைத் தொட்டு வழிபாடு செய்து வந்தால் உங்கள் பண பிரச்சனை தீரும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் வீட்டின் செல்வ செழிப்பு படிப்படியாக உயரத் தொடங்கும்.

- Advertisement -

புரசு மரத்திற்கு நாங்கள் எங்கே செல்வது என்ற கேள்வி நிச்சயம் வரும். நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து இந்த புரசு மரக் குச்சியை வாங்கிக் கொள்ளுங்கள். நிறைய மருத்துவத்திற்காகவும் இந்த புரசு மர குச்சியானது இன்றளவிலும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதாவது கருங்காலிக் கட்டை க்கு எந்த அளவிற்கு மகத்துவம் இருக்கின்றதோ, அதை விட பல மடங்கு மகத்துவம் கொண்டதுதான் இந்த புரசு மர குச்சி. வீட்டில் இந்த குச்சியை வைத்திருந்தால் நமக்கு பணக்கஷ்டம் என்பதே வராது. கடன் தொல்லையிலிருந்து விடுபட இந்த சின்ன பரிகாரம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அந்த காலத்தில் பூஜை அறையில் வாசக்கால் செய்யவும், இந்த புரசுமர கட்டையை பயன்படுத்தி வந்தார்கள். வீட்டில் நிலை வாசல் கதவு வைக்கவும் இந்த புரசு மரக்கட்டையை பயன்படுத்தி வந்தார்கள். காரணம் செல்வ செழிப்பை ஈர்த்து தரக்கூடிய சக்தி இந்த புரசு மரத்திற்கு உண்டு என்பது அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு தெரிந்திருந்தது. உங்களுக்கும் இந்த குறிப்பின் மீது நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -