பண தடை நீங்க, நினைத்த காரியம் வெற்றி பெற 5 மிளகு மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும். அனைத்துமே வெற்றியில் முடியும்

milagu
- Advertisement -

“உப்பில்லாத உணவு குப்பையிலே” என்பது பழமொழி. இந்தப் பழமொழிக்கு அர்த்தம் என்னவென்றால் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உப்பு குறைவான அளவில் இருந்ததென்றால் அதனை சாப்பிடுவதற்கு சுவையாக இருக்காது. அவ்வாறுதான் இப்பொழுது மனித வாழ்க்கையும் இருக்கிறது. பணம் இல்லாத வாழ்க்கை நிம்மதி இல்லாமல் போகிறது. மூன்று வேளை சாப்பிட்டு, தங்குவதற்கு இடம், உடுத்துவதற்கு உடை இவை மூன்றும் சாதாரணமாக ஒருவருக்கு கிடைப்பதற்கே இங்கு பண தட்டுப்பாடு ஏற்படுகிறது. வீடு இல்லாமல், சாப்பிட சாப்பாடு இல்லாமல், உடுத்திக்கொள்ள உணவு இல்லாமல் பலரும் துன்பப்பட்டு கொண்டிருக்கின்றனர். எனவே பணம் என்பது வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இந்த பணம் நம்மிடம் வருவதற்கு தடையாக இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை அழிக்கவல்ல சக்தி இந்த மிளகிற்க்கு இருக்கிறது. இதனை வைத்து செய்யக்கூடிய பரிகாரம் மூலம் நம்மிடம் பணம் வருவதற்கான தடைகள் அனைத்தையும் நீக்க முடியும்.

cash

முந்தைய காலத்தில் எல்லாம் 5 மிளகு மட்டும் கையில் இருந்தால் எதிரில் வீட்டிலும் விருந்து உண்ணலாம் என்று கூறுவார்கள். அவ்வாறு எதிரிகள் நமது உணவில் விஷம் கலந்து இருந்தாலும் அதனை முறிக்க வல்ல சக்தி இந்த மிளகிற்க்கு இருக்கிறது. அதேபோல் ஆன்மீக ரீதியாக ஒருவருக்கு தீமை தரக்கூடிய எதிர்வினைகளையும், ஆற்றல்களையும் அழிக்கவல்ல சக்தியும் இதற்கு இருக்கிறது.

- Advertisement -

எனவே எப்பொழுதும் நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்களை அழிப்பதற்காக நாம் உபயோகப்படுத்தும் பர்ஸ் மற்றும் பை இவற்றில் ஏதாவது ஒன்றில் ஐந்து மிளகுகளை ஒரு கவரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்களை பாதிக்க வரும் எதிர்மறை சக்திகள் உடனே அழைக்கப்படுகின்றன.

vasthu

அடுத்ததாக ஐந்து மிளகுகளை கையிலெடுத்துக் கொண்டு, கிழக்கு திசை பார்த்து நின்று கொண்டு, உங்களுக்கு வரவேண்டிய பணங்கள் எந்த தடையில்லாமல் வர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் கையில் இருக்கும் மிளகுகளை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு திசைகளிலும் ஒவ்வொன்றாக வீசி விட்டு, இறுதியாக இருக்கும் ஒரு மிளகை நீங்கள் நிற்கின்ற இடத்தில் போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் உள்ளே சென்றுவிட வேண்டும்.

- Advertisement -

இதனை உங்கள் வீட்டு வாசலில் அல்லது மொட்டை மாடியில் நின்று கொண்டும் செய்யலாம். இதன் மூலம் நீங்கள் மனதில் நினைத்து வேண்டிக்கொண்டது நிச்சயம் நிறைவேறும். ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்கோ அல்லது ஏதாவது ஒரு நல்ல முடிவை எதிர் பார்த்தோ வெளியில் செல்வதாக இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து விட்டு சென்று பாருங்கள். உங்களுக்கு வரக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி நீங்கள் நினைத்த காரியம் முழுமையாக நடந்தேறும்.

lemon

அதுபோல பணம் பரிவர்த்தனை செய்யும் இடங்களான வியாபார ஸ்தலங்கள் அல்லது நீங்கள் வேலை செய்யும் இடம் இங்கு உங்களுக்கு ஏற்படும் பண பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க ஒரு எலுமிச்சை பழத்தை லேசாக கீறிக் கொண்டு, அதில் ஐந்து மிளகுகளை உள் நுழைத்து போட்டுவிடவேண்டும். பிறகு இந்த எலுமிச்சை பழத்தை நீங்கள் பயன்படுத்தும் டேபிலிலோ, தொழிற் சாலையாக இருந்தால் பூஜை செய்யும் இடத்திலோ வைத்துக் கொள்ள வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு மாற்ற வேண்டும். இதன் மூலம் நல்ல மாற்றம் உண்டாகும்.

- Advertisement -