மணி பிளான்ட் வைத்தும் கூட வீட்டில் பணப் பிரச்சனை இருந்தால், அதற்கு காரணம் இதுவாக கூட இருக்கலாம். உடனே அதை இப்படி சரி செய்து, உங்கள் பண வரவை அதிகப்படுத்திகொள்ளுங்கள். இல்லையென்றால் பெரிய இழப்புகள் வந்து சேரும்.

- Advertisement -

நாம் வீட்டில் வளர்க்கும் ஒரு சில செடிகள் கூட நல்ல ஆற்றலை நமக்கு கொடுக்கும் சக்தி கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த மணி பிளான்ட் பண வரவிற்கு முக்கியமான ஒரு செடி. இந்த செடி பண வரவிற்கு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவுக்கு இந்த செடியை வீட்டில் எப்படி இருந்தால் பண இழப்பும் ஏற்படும். அது என்ன பண புழக்கம் அதிகரிக்க இந்த செடியை எப்படி வைக்க வேண்டும் என்று தெரிந்து அதை சரி செய்து கொள்வதற்கான பதிவு தான் இது.

வீட்டில் நல்ல பணவரவு இருக்க வேண்டும் என்றால் வீடும் வீட்டைச் சுற்றி உள்ள இடங்களும், வீட்டில் இருக்கும் பொருள்களும் எல்லாம் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் சம்பாதிக்கும் பணம் உங்கள் கையில் தங்கும். பணவரவு என்றால் எங்கிருந்து வந்து பணம் கொட்டுகிறது என்று மட்டும் அர்த்தமில்லை. நீங்கள் பாடப்பட்டு சம்பாதிக்கும் ஒற்றை ரூபாயாக இருந்தாலும் அது நல்ல முறையில் நல்ல காரியத்திற்காக வீண்விரயமாகாமல் செலவழிந்தால் அதுவுமே உங்களுக்கு ஒரு நல்ல பண வரவு தான்.

- Advertisement -

பொதுவாக மணிபிளான்ட் செடியை வீட்டில் வைப்பவர்கள் பெரும்பாலும் அதை அழகிற்காக வீட்டிற்குள்ளே சின்ன கண்ணாடி குடுவையில் வைத்து விடுகிறார்கள். எந்த ஒரு பொருளுமே அது வளர வளர தான் அதற்கான சக்தியும் அதிகரிக்கும், அப்படி இருக்கும் போது குடுவையில் வைக்கும் இந்த செடிகளை நீங்கள் ஓரளவிற்கு மேல் வளர்க்க முடியாது அதன் வளர்ச்சியானது குறிப்பிட்ட நேரத்தில் பிறகு தடைப்பட்டு விடும். அப்படி இருக்கையில் நிச்சயமாக உங்களுக்கு பண வரவு தடைப்படவே செய்யும் முற்றிலுமாக பண வரவு தடை படுவதற்குள் இதை உடனே சரி செய்ய வேண்டும்.

இந்த மணி பிளான்ட் செடியை தரையில் மாற்றி வைத்து வளர வைக்க வேண்டும். அப்படி உங்களுக்கு இடமே இல்லை என்றால் ஏதாவது ஒரு தொட்டியாவது கொஞ்சம் அகலமான கெட்டியாக பார்த்து வாங்கி அதில் இந்த மணி பிளான்ட் செடியை வைத்து நன்றாக கொடி கட்டி வீட்டில் படரும்படி வளர்க்க வேண்டும். இந்த கொடி எந்த அளவுக்கு வீட்டில் வேர் விட்டு படர்ந்து வளர்கிறதோ, அந்த அளவிற்கு உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். இந்த மணி பிளான்ட் செடியுடன் வெற்றிலை செடியும் சேர்த்து வளர்த்தால் இதன் ஆற்றல் பல மடங்கு அதிகமாக இருக்கும். வெற்றிலை மகாலட்சுமியின் அம்சம் இந்த இரண்டையும் ஒன்றாக வைக்கும் போது பணவரவு தடை என்ற வார்த்தைக்கு இடமில்லை.

- Advertisement -

இன்னும் சில செடிகளை கூட பண வரவிற்காக வீட்டில் வளர்க்கலாம் அதில் முக்கியமானது மல்லி செடி இந்த செடியை வீட்டில் வளர்த்தால் போதும் இதன் வாசம் பரவி வருவதை போல பணமும் உங்கள் வீட்டில் வரும்.இந்த செடியை வைத்து விட்டால் மட்டும் போதும் என்று நினைக்காமல் மல்லிச் செடி வைத்தால் அதில் பூக்கள் பூக்க வேண்டும். அப்படி பூத்தால் மட்டுமே அந்த செடி பண ஈர்ப்பு சக்தி கிடைக்கும்.

அதைப் போல் கற்றாழைச் செடியின் வளர்க்கலாம் இதுவும் கண் திருஷ்டியை நீக்கி உங்களின் பணம் வரவை அதிகப்படுத்தும். வீட்டில் இடம் இருப்பவர்கள் கட்டாயமாக வேப்ப மரம் வீட்டு வாசலில் வைக்கலாம். இது தெய்வீகத்தன்மை நிறைந்ததோடு இந்த செடிகளின் ஆற்றல்கள் நமக்கு முழுமையாக கிடைத்த இந்த வேப்ப மரம் பெரிதும் உதவி செய்யும்.

இதையும் படிக்கலாமே: தீராத நோய்கள் தீர நாளை 22/11/2022 கார்த்திகை அமாவாசையில் மறக்காமல் செய்ய வேண்டியது என்ன? நோய்களை நெருங்க விடாமல் தடுக்கும் எளிய மூலிகை பரிகாரம்!

இதையெல்லாம் கேட்கும் போதும், சொல்லும் போதும் சின்ன விஷயங்களாக தான் தோன்றும் ஆனால் நஷ்டம் என்று வந்த பிறகு பதறுவதை விட வரும் முன் இதை எல்லாம் தெரிந்து கொண்டு சரி செய்தால் நல்லது தானே.

- Advertisement -