பணவரவில் இருக்கும் தடைகள் நீங்க பரிகாரம்

pana thadai
- Advertisement -

நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்து அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் பாடுபட்டு உழைப்பவர்கள் பலர் இந்த உலகில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி உழைப்பவர்கள் அனைவரும் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வது என்பது முடியாத காரியமாகவே திகழ்கிறது.

எவ்வளவுதான் கடினமாக சம்பாதித்தாலும் பணம் வரவில்லை என்று புலம்புபவர்கள் ஒரு பக்கம் இருக்க எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும் அது கையில் நிற்கவேயில்லை என்று புலம்புபவர்கள் மற்றொரு பக்கம் இருக்கிறார்கள். இப்படி பணம் கையில் தங்கவே இல்லை என்று புலம்புபவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பணம் வரவேண்டும், பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் கடினமாக உழைக்க வேண்டும். அப்படி கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சிக்கனமாக வைத்து செலவு செய்வதன் மூலமே தான் அவர்களுடைய சேமிப்பை உயர்த்த முடியும். இப்படி கடினமாக உழைத்தும் பணத்தை சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை உயர்த்த வேண்டும் என்று நினைப்பவர்கள் பலரால் அந்த சேமிப்பை உயர்த்த முடியாத சூழ்நிலை உண்டாகும். தேவையற்ற செலவுகளோ, வீண்விரயங்களோ, மருத்துவ செலவுகள் என்று ஏதாவது ஒன்று அந்த மாதத்தில் ஏற்பட்டு சேமிப்பதற்காக வைத்திருந்த பணம் கரைந்து காணாமல் போய்விடும். இப்படி வீண் விரயங்கள் ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

பணம் நம்முடன் இருக்க வேண்டும் என்றால் நமக்கு மூன்று பேரின் அருள் பரிபூரணமாக வேண்டும். பணத்திற்கு அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமி தாயார். அடுத்ததாக கிரகங்களில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் சுக்கிர பகவானும், பெரும் செல்வத்தை தரக்கூடிய குருபகவானின் அருளும் வேண்டும். இவர்கள் மூவரின் அருளையும் பரிபூரணமாக பெறுவதற்குரிய பரிகாரத்தை தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை நாளன்று தான் செய்ய வேண்டும். வியாழக்கிழமை அன்று இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் அதாவது குரு ஹோரையில் ஒரு வெள்ளை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். மஞ்சளில் பன்னீரைக் குழைத்து அந்த வெள்ளைத் துணியில் தடவி நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த வேளை அல்லது காலையில் வரக்கூடிய சுக்கிர ஹோரயான ஆறு மணியில் இருந்து ஏழு மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

வீட்டு பூஜை அறையில் எப்போதும் போல் விளக்கேற்றி உங்களுடைய அன்றாட வழிபாட்டை முடித்த பிறகு காய வைத்திருக்கும் மஞ்சள் துணியை எடுத்து விரித்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் 100 ரூபாய் நோட்டை வைத்துக் கொள்ளுங்கள். அந்த நூறு ரூபாய் நோட்டிற்கு மேலாக ஆறு உடையாத நல்ல கிராம்பாக பார்த்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் மற்றொரு 100 ரூபாய் நோட்டை வைக்க வேண்டும். இந்த 100 ரூபாய் நோட்டின் மீது 6 ஏலக்காயை வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த ஏலக்காய் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். உடையாத முழு ஏலக்காயாக இருக்க வேண்டும். மறுபடியும் இதற்கு மேல் ஒரு 100 ரூபாய் நோட்டை எடுத்து வைத்து ஒரு சிட்டிகை அளவு குங்குமப்பூவை வைக்க வேண்டும். இதற்கு மேல் மற்றொரு 100 ரூபாயை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த மஞ்சள் துணியை அப்படியே மடித்து மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து கற்பூர தீப தூப ஆராதனை அனைத்தும் காட்டி முடித்துவிட்டு பணம் இருக்கும் இடத்தில் எடுத்து வைத்து விட வேண்டும்.

இதில் இருக்கக்கூடிய கிராம்பு, ஏலக்காய், குங்குமப்பூவை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றினால் போதும். 100 ரூபாய் நோட்டை அப்படியே வைத்திருங்கள். இதை வைத்த சிறிது நாட்களிலேயே உங்களுடைய பணம் சேமிப்பாக உயர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: செய்வினை நீக்கும் குலதெய்வ வழிபாடு

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் சேமிப்பு உயரும் வீண் விரயம் ஏற்படாது.

- Advertisement -