நல்ல வேலை பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க பிரதோஷ வழிபாடு

lingam abishekam
- Advertisement -

பிரதோஷ வழிபாடு என்பதே நம்முடைய தோஷங்கள் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் நீங்கி நல்ல முறையில் நாம் வாழ இறைவனை அடிபணிவது தான். இந்த பிரதோஷமானது மாதத்தில் இரண்டு முறை வரும். ஒன்று தேய்பிறை பிரதோஷம் மற்றொன்று வளர்பிறை பிரதோஷம். ஒவ்வொரு நாளில் வரக் கூடிய பிரதோஷமும் நமக்கு ஒவ்வொரு விதமான பலன்களை தரும்.

அந்த வகையில் நாளை செவ்வாய் கிழமை அன்று வரக்கூடிய இந்த தேய்பிறை பிரதோஷம் நம்முடைய பாவங்கள் தோஷங்கள் நிவர்த்தியாவதுடன் பண கஷ்டங்களும் நீங்கும். இத்துடன் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு இந்த பொருளை வாங்கி தருவதன் மூலம் நல்ல வேலை வருமான உயர்வு சம்பள உயர்வு எல்லாம் அதிகரிக்கும் யோகம் கிடைக்கும்.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க பிரதோஷ வழிபாடு

இன்றைய மனிதன் நல்ல முறையில் வாழ அவனுக்கு தேவையானது நல்ல வேலை, அந்த வேலைகேற்ற பதவி, அந்த பதவிகேற்ற சம்பளம். இவை அனைத்தும் சரியாக அமைந்து விட்டால் அவர்களுடைய வாழ்க்கையில் பெருமளவு பிரச்சனை குறைந்து விடும். அவை தீர எம்பெருமானை எப்படி வணங்குவது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த வழிபாட்டை நீங்கள் பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் தான் செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு தானமாக இளநீர் வாங்கி தர வேண்டும். அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு பிரதோஷ வேளையில் 16 பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். இதில் ஒவ்வொரு பொருளுக்கும் தனி மகத்துவம் உண்டு.

- Advertisement -

அந்த வகையில் வேலை, வருமானம், பதவி உயர்வு வேண்டுவோர் இளநீரை வாங்கி கொடுத்து அதில் அபிஷேகம் செய்யும் போது அவர்களுடைய வேண்டுதல் விரைவில் நிறைவேறும். அந்த நேரத்தில் ஆலயத்தில் அமர்ந்து அனைத்து அபிஷேகங்களையும் கண்ணார கண்டு ஓம் சிவாய நம என்ற நாமத்தை உச்சரித்துக் கொண்டே இறைவனை மனதார வணங்க வேண்டும்.

இந்தப் பிரதோஷ வழிபாட்டை பணத்தை நீங்க வீட்டில் எப்படி வழிபடுவது என்று பார்க்கலாம். வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடுபவர்கள் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்யலாம். சிவலிங்கம் இல்லாதவர்கள் சிவபெருமான் படம் இருந்தாலும் வைத்துக் கொள்ளுங்கள். எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை இந்த வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

சிவலிங்கம் வைத்திருப்பவர்கள் பிரதோஷ வேளையில் சிவபெருமானை மஞ்சள் கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். சிவபெருமான் படம் வைத்திருப்பவர்கள் படத்திற்கு வாசனை மிக்க மலர் அல்லது சிகப்பு நிறத்திலான மலர் சூடிக் கொள்ளுங்கள். சிவலிங்கம் வைத்திருப்பவர்களும் இதையே செய்யலாம். அதன் பிறகு பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி வையுங்கள். அந்த தீபம் கிழக்கு முகமாக எரிய வேண்டும்.

நீங்கள் வடக்கு முகமாக அமர்ந்து சிங் வங் சிவாய நம என்ற இந்த நாமத்தை 108 முறை சொல்ல வேண்டும். அபிஷேகம் செய்பவர்கள் அபிஷேகம் செய்து முடித்த பிறகு இந்த மந்திரத்தை சொல்லுங்கள். இந்த மந்திர வழிபாட்டை செய்வதால் பணத்தடைகள் நீங்கி பணவரவு அதிகரிக்கும், கடன் தொல்லை நீங்கும், வீண்விரையும் குறையும்.

இதையும் படிக்கலாமே: நல்ல வாழ்க்கை துணை அமைய மந்திரம்

மனிதனுடைய அத்தனை பாவங்களையும் நீக்கி அவனுடைய அத்தனை தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய வழிபாடு எனில் அது பிரதோஷ வழிபாடு என்றே சொல்லலாம். இந்த பிரதோஷ வழிபாட்டை மேற் கொண்டு நல்ல முறைகளில் வழிபட்டு உங்களுக்கு உரிய அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணுங்கள் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -