நல்ல வாழ்க்கை துணை அமைய மந்திரம்

indharani manthiram
- Advertisement -

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்களுடைய திருமண வாழ்க்கையை துவங்குவதற்கு முன்பாக தனக்கான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் முனைப்பாக இருப்பார்கள். அவர்கள் தங்களை புரிந்து கொள்பவர்களாகவும் தங்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கக் கூடியவர்களாகவும் இருந்தால் தான் அவர்களால் தங்களுடைய வாழ்க்கையில் சிறக்க முடியும் என்பதே இதற்குக் காரணம்.

இதனால் தான் நம்முடைய பாரம்பரியம் தொட்டு திருமண பந்தத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த ஒரு உறவானது பல உறவுகளுக்கு அடித்தளமாக அமைவதுடன் அது தான் நம்முடைய குடும்ப அமைப்பிற்கே ஒரு ஆணிவேராக உள்ளது. அப்படியான இல்வாழ்க்கைக்கு தங்களுடைய துணை நல்ல முறையில் அமைய வேண்டும் என ஒவ்வொருவரும் தினம் மனதில் நினைப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

- Advertisement -

இந்த எண்ணத்துடனும் தேடுதலுடனும் திருமணத்திற்காக தயாராக இருப்பவர்கள் இந்த ஒரு பெண் தெய்வத்தை வணங்கும் போது அவர்களுடைய எண்ணம் எளிதில் ஈடேறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த தெய்வம் யார் அவரை தொழுவதற்கான மந்திரம் என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

நல்ல வரன் அமைய சொல்ல வேண்டிய மந்திரம்

சப்த கன்னிகளான பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, சாமுண்டி இவர்களில் இந்திராணி தாயாரை வணங்குவது பற்றி தான் இப்பொழுது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த இந்திராணி ஆனவர் தேவலோகத்தின் அதிபதி இந்திர னின் மனைவி.

- Advertisement -

இவர் இந்திரனின் அம்சமான கற்பக மலரை கூந்தலில் தலையில் சூடியவள். யானை இந்த அன்னையின் வாகனம். தன்னை வழிபாடு அவர்களின் உயிரை காப்பதிலும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைத்து தருவதிலும் தலை சிறந்த தாயாக விலங்குபவளும் இந்த அன்னையே.

இந்திராணியின் சக்தியான பொன்னிற மேனி உடையவள். வஜ்ராயுதம் தாங்கி அபய கரம் காட்டுவாள் சத்ருபையும் நீக்குபவள். சுகங்கள் தந்து நல்ல முறையில் வாழ வைப்பவள். இப்படியான இந்திராணி தேவியின் காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்தால் மனம் ஆகாத ஆண்கள் பெண்கள் இருவருக்கும் நல்ல வாழ்க்கை துணை அமையும்.

இந்திராணி காயத்ரி மந்திரம்

“ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத் ”

இதையும் படிக்கலாமே: பொருளாதார தடை நீங்க வழிபாடு

திருமணம் ஆகாத ஆண் பெண் இருவரும் தங்களுக்கான வாழ்க்கை துணையின் தேடும் முயற்சியுடன் இந்திராணி தயாரி இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வரும் போது நல்ல வாழ்க்கைத் துணை அமைந்து இல்லறம் நல்லறமாக மாறும். அத்துடன் அவர்கள் சொத்து சுகத்துடனும் வாழக் கூடிய யோகத்தையும் பெறுவார்கள். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த மந்திர வழிபாட்டை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -