உடனடி பண தேவையை பூர்த்தி செய்யும் பரிகாரம்

goat
- Advertisement -

எல்லாருமே வேலைக்கு போறோம். எல்லாருமே சம்பாதிக்கிறோம். சொல்லப்போனால் ஆறு மாதத்திற்கு முன்பாக வந்த வருமானத்தை விட, இந்த மாதம் கைக்கு வந்த வருமானமும் அதிகம். இன்சென்டிவ் அதிகம் ஆனாலும் நமக்கான தேவை என்று வரும்போது செலவுக்கு கையில் காசு இல்லையே. நம்முடைய தேவைகளுக்கு செலவு செய்ய காசை கடனாகத்தான் இன்னொருவரிடம் கேட்டு பெருகின்றோம். இப்படி எல்லாம் ஒரு சூழ்நிலை எனக்கு வரவே கூடாது.

டக்குனு 2000 ரூபாய் பணம் தேவை என்றாலும் கையில் இருப்பு எப்போதுமே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இந்த பதிவு. ஆன்மீகத்தில் இதற்கு நிறைய சூட்சம பரிகாரங்கள் இருக்கிறது. அதிலிருந்து இதுவரை நீங்கள் கேள்விப்படாத இரண்டு புது விஷயங்களைத் தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். அவசர தேவைக்கு கையில் காசு தங்கனும் என்று நினைப்பவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை படித்து பலன் பெறலாம்.

- Advertisement -

பண தேவை பூர்த்தி செய்யும் விசித்திர பரிகாரம்

உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் ஆடுகளுக்கு உங்களால் முடிந்த உணவை வாங்கி சாப்பிட கொடுக்க வேண்டும். குறிப்பாக ஆட்டுக்குட்டிகளுக்கு உங்கள் கையால் உணவை தானம் செய்தால் உடனடி பண தேவை பூர்த்தி ஆகும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகாது. டக்கு டக்குனு கையில் பணம் வந்து நிற்கும். இது பயங்கரமா ஒர்க் அவுட் ஆகுங்க முழு நம்பிக்கையுடன் செஞ்சு பாருங்க. நாளைக்கு அவசர தேவைக்கு கையில் காசு இல்லையே, எப்படி வரும், என்று சிந்திக்கும் போது, 50 ரூபாய்க்கு ஏதாவது சாப்பிடும் பொருளை வாங்கி ஆட்டுக்குட்டிக்கு வச்சிருங்க அவ்வளவுதான் பரிகாரம்.

கிராமப்புறங்களில் ஆடு சுலபமாக வீட்டு பக்கத்திலேயே இருக்கும். அதற்கு சாப்பிட ஏதாவது ஒரு பொருள் வாங்கி கொடுக்கலாம். நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் என்ன செய்வது. ஆதிசேஷனது படத்தை அடிக்கடி பார்த்து பணம் கையில் தங்க வேண்டும் என்ற வேண்டுதலை வைக்கணும். ஆதிசேஷன் என்பவர் பாம்பு.

- Advertisement -

உங்களுடைய மொபைலில் ஆதிசேஷன் என்று டைப் செய்தாலே இந்த படம் உங்களுக்கு கிடைத்துவிடும். அந்த படத்தை டிபியா கொண்டு வந்து உங்க போனில் வைத்துக் கொள்ளுங்கள். ஆதிசேஷனை மனதார நினைத்து எனக்கு பணவரவு வேண்டும். கையில் செலவுக்கு பணம் கிடைக்கணும் என்று மனதார பிரார்த்தனை செய்தால் உங்களுடைய தேவைக்கு ஏற்ப உடனடியாக பண வரவு இருக்கும்.

இதையெல்லாம் தாண்டி இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் போது மஞ்சள் நிறத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். மஞ்சள் நிற ஆடை அணிவது, மஞ்சள் நிற பூ வைப்பது, சந்தன பொட்டு வைத்துக் கொள்வது, இப்படி மஞ்சள் நிறத்தை அதிகமாக நாம் பயன்படுத்தும் போது குரு பகவானின் அனுதுரகம் கிடைத்து, நமக்கு பணவரவு அதிகரிக்கும். செல்வாக்கும் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: வறுமையை நீக்கும் சிவ மந்திரம்

தங்கம் வாங்கும் யோகமும் கிடைக்கும். மேலே சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்கள் எல்லாமே எளிமையானவை நம்பிக்கை உள்ளவர்கள் தேவை ஏற்படும்போது இதை பின்பற்றி பாருங்கள். இந்த பரிகாரத்தை பின்பற்றும்போது உங்களுக்கு லக்கடிச்சு கைக்கு பணம் வந்துட்டா அந்த பரிகாரத்தை விடவே விடாதீங்க. அந்த பரிகாரம் உங்களுக்கு மட்டுமே சொந்தம்.

- Advertisement -