செல்வ செழிப்பை பெருக்கும் குபேரர் வழிபாடு

kubera cash
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகங்களுக்குரிய நாளாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த நாளில் நாம் செய்யக் கூடிய வழிபாடு நம்முடைய வாழ்வை வளமாக்கும். அதே போல தான் தெய்வத்திற்கென நாட்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினத்தில் அந்த தெய்வங்களை வணங்கும் போது அதற்கான பலன் நமக்கு பல மடங்காக கிடைக்கும்.

அந்த வகையில் வியாழக்கிழமை கிரகங்களில் குரு பகவானுக்குரிய நாளாகவும், தெய்வங்களில் குபேரருக்குரிய வழிபாட்டு நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய நாளில் நாம் குபேரரை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வீட்டில் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளலாம். அந்த வழிபாட்டை இன்னும் எளிமையாக எப்படி செய்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

பண வரவு அதிகரிக்க குபேரர் வழிபாடு

பணவரவு அதிகரிக்க வேண்டும் பணம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வரக்கூ டிய தெய்வங்களில் குபேரர் முதன்மையானவர் என்று சொல்லலாம். அவரை சில முறைகளில் நாம் வழிபாடு செய்யும் போது நம்முடைய செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளலாம் அப்படியான ஒரு வழிபாட்டு முறையை இப்போது பார்க்கலாம்.

இந்த வழிபாட்டை வியாழக்கிழமை அன்று செய்வது சிறந்தது. ஏனெனில் குபேரருக்கு உகந்த நாள். அதே போல் வியாழக்கிழமை மாலை 5:30 மணிக்கு மேல் எட்டு மணிக்குள்ளாக இந்த வழிபாடு செய்து விடுங்கள். இதற்கு குபேரருக்கு உகந்த ஜாதிக்காய் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜாதிக்காய்க்கு பன்னீர் ஊற்றி முதலில் சுத்தம் செய்து விடுங்கள். ஜாதிக்காய்க்கு சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து ஒரு சிறிய தட்டில் அதை வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதே போல் குபேரர் படம் இருந்தால் துடைத்து சந்தன பொட்டு வைத்து அலங்காரம் செய்து விடுங்கள் இல்லை என்றால் மகாலட்சுமி தாயார் படத்திற்கு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். படத்திற்கு பூக்களையும் மறக்காமல் போட்டு விடுங்கள். குபேரருக்கு அவல், பால் போன்ற எளிமையான நெய்வேத்தியத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது படத்திற்கு முன்பாக இந்த ஜாதிக்காயை வைத்து விட்டு ஒரு நெய் தீபத்தை ஏற்றுங்கள். அப்போது இந்த ஜாதிக்காய்க்கு அட்சதை, குங்குமம், சந்தனம், பூக்கள் போன்றவற்றால் அர்ச்சனை செய்யுங்கள். இப்படி அர்ச்சனை செய்யும் வேளையில் ஓம் குபேராய நமக என்று இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து இந்த ஜாதிக்காயை மட்டும் எடுத்து நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். வியாபாரம் தொழில் செய்பவராக இருந்தால் அங்கு பணம் வைக்கும் இடத்தில் இதை வைத்தால் வியாபாரம் பல மடங்கு அதிகரித்து வருமானம் பெருகும். வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்தாலும் பண ஆகர்ஷணம் ஏற்பட்டு பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

மறுநாள் வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்த பூக்கள் அச்சதை அனைத்தையும் செடிகள் இருக்கும் இடத்தில் போட்டு விடுங்கள். இந்த ஜாதிக்காய் அப்படியே இருக்கட்டும் ஜாதிக்காய் சீக்கிரத்தில் கெட்டுப் போகாது. இந்த பரிகாரத்தை மாதத்திற்கு ஒருமுறை செய்யலாம் அதே ஜாதிக்காயை கூட மறுபடியும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் தவறில்லை.

இதையும் படிக்கலாமே: பண வரவை தரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

குபேரருக்கு உகந்த இந்த பொருளை வைத்து வழிபாடு செய்து அதை நம்முடைய பணம் வைக்கும் இடத்தில் வைக்கும் போது பண வரவு நிச்சயம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -