பண வரவை தரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

sankada kara chathurthui
- Advertisement -

இந்த சதுர்த்தி திதி என்பது விநாயகர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். அதிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்பது அதன் பெயரிலே உள்ளது போல் நம்முடைய சங்கடங்களை முழுவதுமாக தீர்க்கக் கூடியது. அப்படியான சங்கடஹர சதுர்த்தி வரக் கூடிய நாட்களைப் பொறுத்து அதன் சிறப்பு மேலும் அதிகரிக்கும். அந்த வகையில் நாளைய தினம் வியாழக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தி வந்திருப்பது குபேர சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லப்படுகிறது.

இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை எளிமையான முறையில் வீட்டிலே நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய சங்கடங்களான துன்பம், துயரம் கடன், பண பிரச்சனை அனைத்தும் தீரும். இத்துடன் சேர்ந்து நல்லதொரு வளமான வாழ்க்கை வாழலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையை எப்படி செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பண வரவை தரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நாளைய (28.3.24) தினம் மாலை 5:30 மணிக்கு மேல் துவங்கி வெள்ளிக்கிழமை(29.3.23) மாலை 6 மணி வரை உள்ளது. சதுர்த்தி வழிபாடு என்பது மாலை 6 மணிக்கு மேல் செய்யக் கூடியது. ஆகையால் இந்த வழிபாட்டை நாளைய தினம் வியாழக்கிழமை மாலை 5:30 மணிக்கு மேல் செய்வதே சிறந்தது.

இந்த வழிபாடு செய்வதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் படத்தை துடைத்து மஞ்சள், குங்குமம், பொட்டு வைத்து விட்டு மலர்களை சூட்டி விடுங்கள். விநாயகருக்கு உகந்த அருகம் புல்லை கொஞ்சம் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.
அடுத்து நெய்வேதியமாக ஏதேனும் செய்ய முடிந்தால் செய்யுங்கள் அல்லது ஒரே ஒரு வெல்ல கட்டியை மட்டுமாவது வைத்து விடுங்கள். இப்போது விநாயகருக்கு முன்பாக இரண்டு ஏலக்காய் வைத்து உங்களுடைய பண பிரச்சனை கடன் தொல்லை அனைத்து சங்கடங்களும் தீர வேண்டும் என்று மனதார விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த வேளையில் விநாயகர் அகவல் படிக்க வேண்டும். யார் ஒருவர் தினமும் இந்த விநாயகர் அகவலை தொடர்ந்து படிக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் சங்கடம் என்ற வார்த்தைக்கு வழியில்லை என்று சொல்லப்படுகிறது. அப்படியான இந்த அகவலை நாளைய தினத்தில் சதுர்த்தி வழிபாட்டின் போது சொன்னால் மிகப் பெரிய பலனை பெறலாம். இந்த வழிபாடு முடிந்த பிறகு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யுங்கள். அது உங்கள் வழிபாட்டை மேலும் பயனுள்ளதாக மாற்றும்.

விநாயகருக்கு வைத்து படைத்து இந்த ஏலக்காவை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். அது நல்ல பண வரவு ஈர்த்துக் கொடுக்கும். இந்த வழிபாட்டை நாளைய தினம் தொடங்கி 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். 48 நாட்களும் இரண்டு ஏலக்காவை தினந்தோறும் வைக்க வேண்டும். அதை சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அப்படியே சாப்பிடவும் செய்யலாம். இப்படி ஒவ்வொரு நாளும் ஏலக்காய் ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுத்திக் கொண்டே வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: அடகு நகையை திருப்ப நட்சத்திர வழிபாடு

உங்களுடைய தடைகள் பண பிரச்சனை மனப்பிரச்சனை குழப்பம் அனைத்தும் தீரும் என்று சொல்லப்படுகிறது.விநாயகரை இப்படி எளிமையான வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருந்தால் நாளைய தினம் இந்த வழிபாட்டை தவறாமல் செய்து விடுங்கள். இதனால் உங்களுடைய வாழ்க்கையில் அனைத்து செல்வ நலன்களையும் பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -