பண வரவை அதிகரிக்கும் சிவ வழிபாடு

sivan prayer
- Advertisement -

ஆதி முதல் அந்தம் வரை இருக்கக்கூடிய அனைத்து விதமான செயல்களுக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய ஒன்று என்றால் அது பணமாக தான் இருக்க முடியும். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று அன்றைய காலத்திலேயே கூறி இருக்கிறார்கள். அது இப்பொழுது மிக மிக அற்புதமாக பொருந்தக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. ஒருவருக்கு பணம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு அவருக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

அதே போல் பணம் இல்லாதவரிடம் என்னதான் நல்ல குணங்கள் இருந்தாலும் அவரை யாரும் மதிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட பணத்தை பெறுவதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கடினமாக உழைத்தாலும் ஒரு சிலருக்கு பணவரவு ஏற்படுவதில் தடைகள் தாமதங்கள் உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் சிவபெருமானை எந்த முறையில் வழிபட்டால் பணவரவு அதிகரிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பொதுவாக பணம் தொடர்பான பிரச்சனைகளை நாம் சமாளிக்க வேண்டும் என்றால் நாம் மகாலட்சுமியின் அருளை பெற வேண்டும் என்றுதான் அனைவரும் கூறுவார்கள். அப்படிப்பட்ட மகாலட்சுமியே தன்னிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான செல்வங்களை இழந்த சூழ்நிலையில் சிவபெருமானை நினைத்து தவம் இருந்துதான் இழந்த ஐஸ்வர்யம் அனைத்தையும் பெற்றார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் குபேரருக்கு செல்வ சம்பத்துகளை வாரி வழங்கிய கடவுளாகவும் சிவபெருமான் திகழ்கிறார். அதனால் நாம் சிவபெருமானை வழிப்பட்டோம் என்றால் நாம் இழந்த செல்வத்தையும் பணவரவையும் பெற முடியும்.

மகாலட்சுமிக்கு உரிய கிழமை ஆன வெள்ளிக்கிழமை அன்று தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். எப்பொழுது போல் வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் பூஜைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது தங்களால் இயன்ற அளவு விபூதியை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

- Advertisement -

எந்த நேரத்தில் சிவபெருமானுக்கு அபிஷேகம் நடக்கும் என்பதை முதல் நாளே கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்திற்கு ஏற்றவாறு விபூதியை வாங்கிக்கொண்டு சிவாலயத்திற்கு சென்று அங்கு அபிஷேகம் நடக்கும் பொழுது நாம் வாங்கி வந்த விபூதியை கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்து முடித்த பிறகு அபிஷேகம் செய்த விபூதியை வாங்கி வந்து வீட்டில் ஒரு பச்சை நிற பட்டு துணியில் பை போல் தயார் செய்து வைத்து அதற்குள் போட்டு வைத்துக்கொண்டு பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.

அன்றைய காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் சுருக்குப்பை என்று வைத்திருப்பார்கள் அல்லவா? அதைப்போல் தயார் செய்து வைத்துக்கொண்டு அதில் விபூதியை வாங்கி வைத்து முடிச்சு போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி வெள்ளிக்கிழமை அன்று சிவபெருமான்னுக்கு அபிஷேகம் செய்த விபூதியை குபேரருக்கு உகந்த நிறமான பச்சை நிறத்தில் வாங்கி பணம் வைக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் அந்த இடத்தில் பண வரவானது அதிகரிக்கும். நம்முடைய உழைப்பிற்கேற்ற உயர்வு நமக்கு கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: வசீகரத் தோற்றத்தை தரும் மந்திரம்

மிகவும் எளிமையான இந்த சிவபெருமான் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் பணவரவிற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது.

- Advertisement -