வசீகரத் தோற்றத்தை தரும் மந்திரம்

mahalashmi4
- Advertisement -

எல்லா பெண்களுக்கும், எல்லா ஆண்களுக்கும் தேவையான ஒரு விஷயம் வசீகரம், அழகு. இது ஒருவருடைய நிறத்தில் வரக்கூடியது அல்ல. வசீகரத் தோற்றம் என்பது அடுத்தவர்களை கவரக்கூடிய வகையில் அமையக்கூடிய ஒரு விஷயம். அது ஒரு சில பேருக்கு இயற்கையாகவே இருக்கும். ஒரு சில பேருக்கு தரித்திரம் என்னும் திரை போட்டு மறைக்கப்பட்டு இருக்கும்.

சிலபேர் பார்ப்பதற்கு மாநிரமாதான் இருப்பவர்கள். ஆனால் அவர்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோணும். அவர்களிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோணும். சில பேர் பார்ப்பதற்கு வெள்ளையாகவே இருந்தாலும், அவர்களுடைய முகத்தில் ஒரு வசீகரமோ ஒரு கலையோ தெரியாது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும், ஒரு பெரிய கவுரவமான வேலையில் அமர வேண்டும் என்றால், இந்த வசீகரம் ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியம்.

- Advertisement -

நீங்க பெண்களாக இருந்தால் மகாலட்சுமி அம்சத்தோடு இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் அந்த மன்மதனை போல் வசீகரமாக இருக்க வேண்டும். அதற்கு உண்டான எளிமையான ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வசீகரத் தோற்றம் பெற பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு முதலில் நமக்கு இரண்டு பொருட்கள் தேவை. மகிழம்பூ பொடி, ஜாதிக்காய் பொடி. இந்த இரண்டுமே நாட்டு மருந்து கடைகளில் விற்க்கும். மகிழம்பூ காய்ந்ததாக நாட்டு மருந்து கடைகளில் கிடைத்தால், அதை வாங்கி மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதை ஜாதிக்காய் பொடியோடு கலந்து ஒரு டப்பாவில் போட்டுக்கொள்ளுங்கள். குளிக்கும்போது தேவையான அளவு அளவு இந்த மகிழும்பு பொடியை போட்டு, கூடவே பன்னீர் அல்லது தண்ணீர் ஊற்றி கலந்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்ப நமக்கு தேவையான எல்லாம் தயாராக இருக்கிறது. குளிக்க செல்வதற்கு முன் ‘ஓம் சர்வ மோஹ வசீகரி’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு தயார் செய்து வைத்திருக்கும் கலவையை முகத்தில் பூசிக்கொண்டு, உடம்பு முழுவதும் பூசிக்கொண்டு, ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து குளித்தால் போதும். நீங்கள் வசீகரத் தோற்றத்தோடு மாறிவிடுவீர்கள். இந்த பொடியை உடம்பில் பூசி குளிக்கும் போது உடம்பில் இருக்கும் துர்நாற்றம் நீங்கும்.

உங்கள் சருமத்தில் நல்ல நறுமணம் வீசும். உங்களுடைய சருமம் பொலிவாகும். கலை இழந்து கிடக்கும் உங்களுடைய முகம் பொலிவை பெறும். முகத்தின் முன்பாக நிற்கும் தரித்திரம் என்ற அந்த திரை கூடிய சீக்கிரத்தில் விலகிவிடும். தொடர்ந்து 11 நாள் இப்படி குளித்தாலே உங்களுடைய தோற்றத்தில் நிச்சயம் மாற்றம் தெரியும். அதோடு நிறுத்திடாதீங்க தொடர்ந்து 48 நாள் இதை செய்யுங்க.

இதையும் படிக்கலாமே: 11 நாட்களில் கடன் பிரச்சனையை தீர்க்கும் பரிகாரம்

அதாவது இதை போட்டு குளித்தால் வெள்ளையாக மாறிடுவீங்க என்று சொல்ல வரவில்லை. உங்களுடைய தேகம் பொன் போல மிளிர்ந்து அடுத்தவர்களை வசீகரிக்க கூடிய தன்மையை நீங்கள் பெறுவீர்கள் என்பது அர்த்தம். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தை நல்லதுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நல்லது மட்டுமே நடக்கும். நீங்களும் நாலு பேர் மத்தியில் மதிக்கத்தக்கவர்களாக மாறுவீர்கள். உங்களுடைய பேச்சுக்கும் ஒரு மரியாதை கிடைக்கும் என்ற தகவலோடு இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -