பண வரவை அதிகரிக்கும் பைரவர் வழிபாடு

panam bhairavar
- Advertisement -

நம்முடைய கர்ம வினைகளை நீக்குவதற்கு சிவபெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக வேண்டும். எவர் ஒருவர் சிவபெருமானை முழுமனதோடு வழிபடுகிறாரோ அவருடைய கர்ம வினைகள் குறைய ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கர்ம வினைகளை நீக்கக்கூடிய சிவபெருமானின் ஒரு அவதாரம் தான் காலபைரவர். காலங்களை கட்டுப்படுத்தும் வல்லமை மிக்கவராக திகழ்வதால் தான் இவருக்கு காலபைரவர் என்ற பெயர் வந்தது. தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி அடித்து நமக்கு நன்மைகளை தரக்கூடிய காவல் தெய்வமாக விளங்க கூடியவராக காலபைரவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட காலபைரவரை பணவரவு அதிகரிப்பதற்கு எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அந்த பிரச்சினைகளில் இருந்து வெளியில் வருவதற்கு நமக்கு உறுதுணையாக இருக்கக்கூடியவர் காலபைரவர். அதனால் தான் சனியால் பாதிக்கப்பட்டவர்களும் சரி செவ்வாயால் பாதிக்கப்பட்டவர்களும் சரி கால பைரவரை தொடர்ச்சியாக வழிபாடு செய்ய அந்த தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. கால பைரவரை நாம் முறையாக வழிபடும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் நீங்கும். கர்ம வினைகள் நீங்குவதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

கால பைரவருக்கு உகந்த தினமாக அஷ்டமி திகழ்கிறது. தேய்பிறை அஷ்டமி வளர்பிறை அஷ்டமி என்று இரண்டு அஷ்டமிகள் ஒரு மாதத்தில் வரும் என்பதும் அந்த அஷ்டமி தினத்தில் காலபைரவரை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது என்பதும் பலரும் அறிந்ததே. பணவரவை அதிகரிப்பதற்கு நாம் கால பைரவரை பௌர்ணமி தினங்களில் வழிபட வேண்டும்.

பௌர்ணமி தினத்தன்று அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய காலபைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்ற வேண்டும். பஞ்ச தீபம் என்றதும் ஐந்து எண்ணெய்கள் கலந்த பஞ்ச கூட்டி எண்ணெய் என்று விற்கும் அதை வாங்கி தீபம் ஏற்றக்கூடாது. இதற்கு நாம் ஐந்து புது அகல் விளக்குகளை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த அகல் விளக்குகளில் மஞ்சள் தடவி சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதை காலபைரவருக்கு முன்பாக வைத்து ஒவ்வொரு அகல் விளக்கிலும் ஒவ்வொரு எண்ணையை ஊற்ற வேண்டும். நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களை ஊற்றி மஞ்சள் அல்லது வெள்ளை நிற திரியை பயன்படுத்தி தீபம் ஏற்ற வேண்டும்.

இப்படி தீபம் ஏற்றும் பொழுது காலபைரவருக்கு சர்க்கரைப் பொங்கலை நெய்வேத்தியமாக வைத்து வணங்க வேண்டும், கால பைரவருக்கு தாமரை பூக்கள் அல்லது மல்லிகை பூக்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். நெய்வேத்தியம் செய்த சர்க்கரை பொங்கலை அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி விட வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று பௌர்ணமி தினங்களுக்கு தீபம் ஏற்றி வழிபட காலபைரவரின் அருளால் பணவரவு என்பது அதிகரிக்கும். தடைப்பட்டு இருக்கும் பண வரவும் தடையின்றி நம்மை வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் கருமஞ்சள் பரிகாரம்

காலபைரவரை முழுமனதோடு வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும் என்பது மனதில் நிறுத்திக் கொண்டு நம்பிக்கையுடன் அவரை வழிபடலாம்.

- Advertisement -