நாம் சம்பாதிக்கும் பணம் நம்மிடம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால் அதற்கு எந்தவித சாத்தியக்கூறும் இல்லை. காரணம் ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு செலவு ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அவ்வாறு செலவு ஏற்படும் பொழுது அந்த செலவு வீண்விரயமாக இல்லாமல் சுப செலவாக இருந்தால் அதனால் நமக்கு சந்தோஷமும், நிம்மதியும் மட்டுமே இருக்கும். அவ்வாறு நாம் சம்பாதிக்கும் சம்பாத்தியம் சுப செலவு செய்வதற்கு ஏற்றார் போல் இருப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையற்ற வீண் விரயங்களை தடுப்பதற்காக நாம் பல முயற்சிகளை செய்து வந்தாலும், நம்மையும் அறியாமல் நாம் ஏதாவது ஒரு வகையில் தேவையற்ற செலவை செய்ய நேரிடும். இந்த தேவையற்ற செலவை தடுப்பதற்காகவும் நம் வீட்டில் என்றும் பணவரவு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவும் செய்யக்கூடிய எளிய பரிகாரம் தான் இது.
இந்த பரிகாரத்திற்கு நாம் பெரிதும் கஷ்டப்பட வேண்டும் என்ற எந்தவித அவசியமும் இல்லை. இதற்காக அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்ற நிலையும் இல்லை. இதற்கு நமக்கு ஒரே ஒரு பொருள் இருந்தால் போதும். அதுதான் ஒரு சிறிய மண்பானை. மிகவும் சிறிய வடிவில் இருந்தாலும் போதும். ஆனால் மண்பானை ஆக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமை அன்று காலையில் சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டும். புதிதாக ஒரு மண்பானையை வாங்கி வர வேண்டும். இந்த மண்பானையை நன்றாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த மண்பானையில் நம்மால் இயன்ற அளவிற்கு சில்லறை காசுகளில் போட வேண்டும்.
மண்பானை நிறைய போட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. குறைவாக இருந்தாலும் அதில் தவறு கிடையாது. இப்பொழுது இந்த மண்பானையை நம் வீட்டின் கிழக்கு திசையில் இருக்கும் ஒரு அலமாரியில் வைத்து விட வேண்டும். கிழக்கு திசையில் மட்டும் தான் வைக்க வேண்டும் வேறு எந்த திசையிலும் வைக்கக்கூடாது. மேலும் இந்த மண்பானையில் மகாலட்சுமியின் அம்சத்திற்கு உரிய பொருட்கள் மற்றும் வாசனை திரவியமான ஜவ்வாது போன்றவற்றையும் சேர்த்து வைக்கலாம். இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது வைக்கலாம்.
மேலும் இந்த மண்பானை யாருடைய கண்ணிற்கும் தென்படாத வண்ணம் மறைத்து வைக்க வேண்டும். நாம் கூட அதை பார்க்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பச்சைக் கற்பூரத்தை போட்டு வைத்திருந்தால் மாதத்திற்கு ஒரு முறை புதிதாக அதில் பச்சை கற்பூரத்தை போட்டு விடுங்கள். இவ்வாறு நாம் வைப்பதால் நம் வீட்டிற்குள் பணவரவு என்பது நிரந்தரமாக இருக்கும். பணத்தடைகளே வராது. அதே சமயம் தேவையற்ற வீண் விரயங்கள் தடுக்கப்பட்டு சுப விரயங்களாக மாற்றப்பட்டு வீட்டில் சந்தோஷமும், நிம்மதியும் நிலைத்து இருக்கும்.
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை நாமும் நம் இல்லங்களில் செய்து சுப விரயங்களை மட்டுமே மேற்கொண்டு என்றும் பணவரவுடன் மகிழ்ச்சியுடன் இருப்போம்.
.