பண வரவு அதிகரிக்க வெற்றிலை பரிகாரம்

vetrilai pariharam
- Advertisement -

இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நமக்கு கண்டிப்பான முறையில் பணம் என்ற ஒன்று தேவைப்படும். பணம் இல்லாமல் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான எந்தவித பொருட்களையும் நம்மால் வாங்க முடியாது, அனுபவிக்கவும் முடியாது. அந்த பணத்தை தரக்கூடிய அற்புதமான கடவுளாக தான் மகாலட்சுமி தாயார் விளக்குகிறார். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் அருளை நாம் பரிபூரணமாக பெறவும் பணவரவை அதிகரிக்கவும் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும் என்றால் கண்டிப்பான முறையில் வெள்ளிக்கிழமையை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று நாம் மகாலட்சுமி தாயாரை வழிபட்டோம் என்றால் மகாலட்சுமி தாயாரின் அருளோடு மட்டுமல்லாமல் சுக்கிர பகவானின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு கிடைத்தால் பணவரவு அதிகரிக்கும் என்றால் சுக்கிர பகவானின் அருள் கிடைக்கும் பொழுது நம்முடைய தேவைக்கேற்ற பணம் நமக்கு கிடைக்கும். அதே போல் வசதி வாய்ப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது. அதனால் தான் பொருளாதார நிலை உயர வேண்டும், வாழ்வில் மகிழ்ச்சி உண்டாக வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள்.

இந்த பரிகாரத்தை வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக சுக்கிர ஹோரையில்தான் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாய் நாணயம் மற்றும் பனை ஓலை மஞ்சள் நூல் இவை அனைத்தும் தேவைப்படும். காலையில் எப்பொழுதும் போல் வெள்ளிக்கிழமை பூஜையை செய்து முடித்த பிறகு இரண்டு வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதில் ஒரு கொட்டை பாக்கை வைத்து அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். பிறகு இதை அப்படியே சுருட்டி இதற்கு மேல் 9 இன்ச் நீளம் இருக்கக் கூடிய பனை ஓலையை சுற்ற வேண்டும். பனை ஓலையின் நீளம் சரியாக 9 இன்ச் இருக்க வேண்டும். இந்த பனை ஓலை பிரியாமல் இருப்பதற்கு மஞ்சள் நூலால் நன்றாக கட்டி முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த வெற்றிலை முடிச்சை மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாரின் போற்றிகள், அஷ்டோத்திரம், அஷ்டகம் என்று எது தெரியுமோ அதை கூறி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து விட வேண்டும். பூஜையை நிறைவு செய்த பிறகு இந்த வெற்றிலை முடிச்சை எடுத்து நாம் பணம் வைத்திருக்கும் பணப்பெட்டியிலோ அல்லது பர்ஸ்ஸிலோ வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த முடிச்சை வாராவாரம் வெள்ளிக்கிழமை புதிதாக செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பழைய முடிச்சை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். அதில் இருக்கும் ஒரு ரூபாயை மட்டும் தனியாக எடுத்து சேர்த்து வைத்துக் கொண்டே வரவேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த பணத்தை எடுத்து ஏதாவது ஒரு பெருமாள் கோவிலில் மகாலட்சுமி தாயாரின் சன்னதியில் இருக்கக்கூடிய உண்டியலில் சேர்த்து விடலாம் அல்லது கோவிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: சனி மற்றும் செவ்வாய் தோஷம் நீங்க தீபம்

மிகவும் எளிமையான இந்த வெற்றிலை பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து பணவரவை அதிகரித்துக் கொள்ளலாம்.

- Advertisement -