இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிப்பதோடு கண் திருஷ்டிகள் அனைத்தும் விலகி நன்மைகள் உண்டாகும்.

kan thirustri pana varavu salt
- Advertisement -

வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிப்பதற்குரிய வழியை நம்மால் கண்டுபிடித்து விட முடியும். ஆனால் கண் திருஷ்டி என்ற ஒரு எதிர்மறை ஆற்றலால் நம் வீட்டிற்குள் எந்த விதமான பாதிப்பு வரும் என்பதே தெரியாமல் இருக்கும் பொழுது, அதற்குரிய வழியை நம்மால் கண்டுபிடிக்க முடியுமா? முடியாதல்லவா. ஆதலால் தான் கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். கண் திருஷ்டி வந்த பிறகு அதை சரி செய்வதை விட, கண் திருஷ்டி ஏற்படாமல் பார்த்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் எந்த பரிகாரத்தை செய்தால் நம் வீட்டில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் விலகும் என்றும் அதே நேரத்தில் நமக்கு பணவரவு அதிகரிக்கும் என்றும் தான் பார்க்க போகிறோம்.

கண் திருஷ்டியை போக்குவதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. கண் திருஷ்டி ஏற்படாமல் இருப்பதற்கும் பல பரிகாரங்கள் இருக்கின்றன. இவற்றை நாம் செய்யும் பொழுது கண் திருஷ்டி குறையும், அதை தவிர்த்து புதிதாக வேறு எதுவும் ஏற்படாது. ஆனால் இந்த பதிவில் நாம் கண் திருஷ்டி வராமல் தடுக்க கூடிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு பணவரவும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கு நமக்கு கல் உப்பு மற்றும் எலுமிச்சம் பழம் தேவைப்படும். கல்லுப்பிற்கு எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்குரிய அற்புத சக்தி இருக்கிறது. ஆதலால் தான் கல் உப்பை வைத்து திருஷ்டி சுத்தி போடுவார்கள். அதே சமயம் மகாலட்சுமி தாயாருக்கு விருப்பமான பொருட்களில் முதன்மையிடம் வகிக்கக்கூடியதும் கல் உப்புதான். கல் உப்பில் மகாலட்சுமி தாயார் குடி இருக்கிறாள் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

அடுத்ததாக ராஜகனி என்று அழைக்கப்படக்கூடிய எலுமிச்சம் பழத்தை வைத்து நாம் திருஷ்டி சுத்திப் போடும் பழக்கம் இருக்கிறது. அதே சமயம் தெய்வத்தின் அருளை பெறுவதற்கு அவர்களின் பாதத்தில் வைத்து நாம் வழிபடக்கூடிய கனியாகவும் எலுமிச்சம் பழம் திகழ்கிறது.

- Advertisement -

திருஷ்டியும், பணவரவும் நம் வீட்டு வாசல் வழியாகத்தான் உள்ளே நுழையும். ஆதலால் இந்த பரிகாரத்தை நாம் வாசற் காலில் தான் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டு நிரம்ப உப்பை கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி ஒன்றில் மஞ்சளையும் மற்றொன்றில் குங்குமத்தையும் தடவி அந்த உப்பின் மேல் வைத்து விடுங்கள்.

இப்படி செய்வதன் மூலம் நம்முடைய வீட்டிற்கு வரக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் விலகி விடும். அதே நேரம் பண வரவும் அதிகரிக்கும். இதை வாரத்திற்கு ஒரு முறை நாம் மாற்ற வேண்டும். மேலும் வியாழக்கிழமை அன்றுதான் இந்த பரிகாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். பழைய எலுமிச்சம் பழத்தை கால்படாத இடத்தில் தூக்கி எறிந்து விட வேண்டும். உப்பை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அடகு கடைக்கு சென்ற நகை வீடு திரும்பவில்லையா? நம்பி கொடுத்த இடத்தில் இருந்து நகை வரவில்லையா? இந்த பரிகார முறையை செய்து பாருங்கள் இதற்குரிய பலனை கண்டிப்பாக உணர்வீர்கள்.

இந்த ஒரு பரிகாரத்தை நாமும் நம் இல்லத்தில் மேற்கொண்டு கண் திருஷ்டியில் இருந்து தப்பித்து பணவரவை அதிகரித்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

- Advertisement -