வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத பிரச்சனையில் சிக்கித் தவிப்பவர்கள் யாரிடமும் சொல்லாமல் நள்ளிரவில் இந்த பூஜையை செய்தால் மலை போல் வந்த துன்பமும் பனி போல உருகி விடும்.

pirithiyangara devi agal dheepam
- Advertisement -

மனிதனுக்கு இருக்கும் பிரச்சனைகள் எண்ணில் அடங்காதவை. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான பிரச்சினையில் சிக்கி உழன்று கொண்டு இருப்பார்கள். அதிலும் ஒரு சிலரின் பிரச்சனைகளை வெளியில் கூட சொல்ல முடியாது. அது போன்ற சமயங்களில் இனி நம்மால் வாழவே முடியாது என்ற ஒரு விரக்தி நிலைக்கு கூட சென்று விடுவார்கள். அப்படி ஆனவர்களின் இறுதி கட்ட சரணடைவு என்பது தெய்வமாகத் தான் இருக்கும். அதிலும் இந்த தெய்வத்தை சரணடையும் போது அதிலிருந்து சீக்கிரத்தில் விமோசனம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாடு குறித்த தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிரச்சனை தீர பிரத்தியங்கரா தேவி வழிபாடு
பொதுவாக நம்மில் பலருக்கும் உக்கிர தெய்வமாக இருப்பவர்களை வணங்கலாமா கூடாதா? என்ற எண்ணம் உண்டு. நம்முடைய துன்பத்தை விரைவில் தீர்க்கக்கூடிய தெய்வங்களாக விளங்குபவர்கள் இந்த உக்கிர தெய்வங்கள் தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அந்த வகையில் நம்முடைய சொல்ல முடியாத துன்பத்திலிருந்து மீண்டு வர பிரத்தியங்கரா தேவி வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நள்ளிரவு 11 மணிக்கு தான் செய்ய வேண்டும். இந்த வழிபாடு செய்ய நாம் பூஜை அறையை முன்னமே சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் செவ்வரளி பூ, ஒரு பூசணிக்காய், ஒரு குமட்டிக்காய், ஒரு ஊமத்தங்காய், 8 எலுமிச்சை பழம், கொஞ்சம் பச்சரிசி, மஞ்சள் இத்துடன் வெற்றிலை பாக்கு தேங்காய், பழம் போன்றவற்றை தயார் செய்து கொள்ள வேண்டும்.

அதே போல் இந்த பூஜைக்கு பிரத்தியங்கிரா தேவி புகைப்படமும், ஒரு குத்து விளக்கும் அவசியம் தேவை. இந்த பூஜைக்கு நெய்வேத்தியமாக பூசணிக்காயை வைத்து ஏதாவது ஒரு சமையலை செய்து விடுங்கள். அது இனிப்பு காரம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

- Advertisement -

இந்த பூஜையை செய்ய நள்ளிரவு 11 மணிக்கு உங்கள் வீட்டின் பூஜை அறையில் முதலில் தரையை சுத்தமாக துடைத்து விட்டு, அங்கு அரிசி மாவில் கோலம் போட்டு விடுங்கள். அதன் பிறகு அந்த கோலத்தின் மேல் மஞ்சள் கலந்த அரிசியை அர்ச்சனை போல தூவி அதன் மேல் குத்து விளக்கை வைத்து எண்ணெய் ஊற்றி ஐந்து முகத்திலும் திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இப்போது பிரத்தியங்கரா தேவி புகைப்படத்தில் அந்த குத்து விளக்கின் மீது சாற்றி வைத்து செவ்வரளி பூவை மாலையாக போட்டு விடுங்கள். குத்துவிளக்கு இருக்கும் மறக்காமல் பூ வைத்து விடுங்கள்.

அடுத்து முதலில் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டு தீபமாக ஏற்றி வெற்றிலை பாக்கு பழம் அனைத்தையும் வைத்து படைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் வாங்கி வைத்திருக்கும் 7 எலுமிச்சை பழம், ஒரு குமட்டிக்காய், ஊமத்தங்காய், என அனைத்தையும் இரண்டாக நறுக்கி அனைத்திலும் எண்ணெய் ஊற்றி வரிசையாக பிரத்யங்கிரா தேவிக்கு முன்பாக வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தின் முன்பாக அமர்ந்து உங்களுடைய எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை தீர்க்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தீப வழிபாட்டை நீங்கள் தொடர்ந்து செய்து வரும் போது பிரத்தியங்கரா தேவியின் அனுகிரகத்தை முழுவதுமாக பெற முடியும். அது மட்டுமின்றி உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எந்த விதமான பிரச்சனை இருந்தாலும் அது காணாமல் போய் விடும் என்பது நிச்சயம். ஏன் உங்களை அழிக்க வேண்டும் என்பவர்கள் கூட காணாமல் போய் விடுவார்கள். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த தெய்வ வழிபாடு தான் இது.

இதையும் படிக்கலாமே: இந்த 1 பொருளை மட்டும் யாராவது சும்மா கொடுத்தால் கூட வாங்கிடாதீங்க பெரும் தரித்திரம் வருமாம் தெரியுமா?

இந்த வழிபாட்டை அமாவாசை, அஷ்டமி, சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை இந்த தினங்களில் செய்யலாம். எப்போதாவது மன வருத்தத்தில் சிக்கியிருந்தால் இந்த நாளில் மட்டும் செய்தால் போதும். அல்லது மிகப்பெரிய சிக்கலில் சிக்கிருக்கிறீர்கள் என நினைப்பவர்கள் இந்த நாளில் தொடங்கி தொடர்ந்து 48 நாட்கள் இந்த தீபத்தை ஏற்றி வர உங்களை சூழ்ந்திருக்கும் துன்பங்கள் எல்லாம் காணாமல் போய் விடும் என்பது மட்டும் உறுதி. நம்பிக்கையுடன் பிரத்யங்கிரா தேவி வழிபாட்டை செய்து துன்பமில்லா வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -