பண வசியம் ஏற்பட பரிகாரம்

pana vasiyam
- Advertisement -

அன்றாடம் நம் வாழ்க்கையை நடத்துவதற்கு பணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. அப்படி சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவராலும் சேமித்து வைக்க முடியாது. ஒரு சிலருக்கு எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகளும் இருக்கும். இன்னும் சிலருக்கோ வரவிற்கு மீறிய செலவுகள் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலைகள் அனைத்தும் நீங்கி வருமானம் சேமிப்பாக உயர பண வசியத்தை எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பண வசியம் ஏற்படுவதற்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக தேவைப்படும். அப்படி மகாலட்சுமி அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி வைத்து பூஜை செய்ய வேண்டும். அந்த பொருட்களால் பண வசியமும் ஏற்பட வேண்டும். அப்படிப்பட்ட சில பொருட்களை எப்படி நாம் வைத்து வழிபாடு செய்து பண வசியத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும். இதற்கு தேவையான பொருட்களை வியாழக்கிழமையே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அரை மீட்டர் பச்சை பட்டு துணி தேவைப்படும். இந்த பட்டு துணியை விரித்து அதற்கு மேல் ஒரு ஜாதிக்காய், ஒரு மாசிக்காய், ஐந்து லவங்கம், ஐந்து ஏலக்காய், வெள்ளியில் செய்யப்பட்ட நவரத்தின மோதிரம் சிறிய அளவாக இருந்தாலும் பரவாயில்லை அது ஒன்று, பஞ்சலோகம், 12 ஒரு ரூபாய் நாணயங்கள், துளசி குச்சி, மூங்கில் குச்சி, ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகு இவை அனைத்தையும் வைத்து பட்டு துணியை மடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த மூட்டையை மகாலட்சுமி தாயாரின் பாதத்துக்கு அடியில் வைத்து அதற்கு மேல் உதிரி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி அர்ச்சனை செய்யும் பொழுது “மகாலட்சுமியே வசி வசி யாமி” என்னும் மந்திரத்தை கூறி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு ஒரு மஞ்சள் நிற நூலை எடுத்து அந்த மூட்டையை 24 முறை சுற்றி முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த மூட்டையை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் பொழுது அதனுடன் வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாய் நாணயம் ஒன்று, சிறிதளவு உதிரி மல்லிகை பூக்களை வைத்து வைக்க வேண்டும்.

வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று இந்த மூட்டையை எடுத்து மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து பூஜை செய்துவிட்டு மறுபடியும் பணம் இருக்கும் இடத்திலேயே கொண்டு போய் வைத்து விட வேண்டும். அப்படி திரும்ப வைக்கும் பொழுது புதிதாக வெற்றிலை பாக்கு, மலர்கள், போன வாரம் வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயம் இவற்றை வைத்து வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தங்கம் தாராளமாக சேர வழிபாடு

இந்த முறையில் நாம் பூஜை செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெற்று பண வசியம் ஏற்பட்டு நிலையான நிரந்தரமான பணவரவு ஏற்படும்.

- Advertisement -