பணக்கார யோகம் கிடைக்க செய்ய வேண்டிய தாந்திரீக பரிகாரம்

cash2
- Advertisement -

நாம் மட்டும் பணக்காரர்களாக இருந்து விட்டால் போதுமா? நமக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறை, நாம் சேர்த்து வைத்த சொத்தை பாதுகாத்து, இரட்டிப்பாக பெருக்கி பணக்காரர்களாகவே இருக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் பரம்பரை சொத்தை இரட்டிப்பாக முடிகிறதோ, இல்லையோ, இருக்கின்ற சொத்தை விற்று சாப்பிடாமல் பாதுகாத்தாலே போதும் என்ற நிலைமை நமக்கு இருக்கிறது. உங்கள் சொத்து நிலையாக உங்களிடம் தங்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

எனக்கு பிறகு என்னுடைய சொத்து, என்னுடைய குழந்தைகளுக்கு தான் இருக்க வேண்டும். அவர்கள் அந்த சொத்தை பாதுகாத்து வர வேண்டும் என்று நினைத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தற்சமயம் இருக்கும் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். என் அப்பா தாத்தா பாட்டன் பூட்டன், சேர்த்து வைத்த சொத்தை நான் பாதுகாக்க வேண்டும் என்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

உங்கள் வறுமையை விரட்டி அடித்து, உங்கள் சொத்தை நிலையாக உங்களிடமே தங்க வைக்கக்கூடிய எளிமையான தாந்திரீக பரிகாரம் இது. தாந்திரீக பரிகாரமாக இருந்தாலும் குல தெய்வத்தை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இந்த எண்ணெயை தினமும் உங்களுடைய கையில் பூசிக் கொண்டால் போதும். நீங்கள் கைராசிக்காரர்களாக மாறிவிடுவீர்கள். இந்த எண்ணெய் பூசிய கையால் நீங்கள் தொடும் பணம், செய்யும் தொழில் வியாபாரம், செய்யும் வேலை, எல்லாமே நிறைய லாபத்தை கொடுக்கும். சேர்த்து வைத்த செல்வத்தை அப்படியே உங்கள் அடுத்த தலைமுறைக்கு அப்படியே கொண்டு சேர்க்க தினமும் கையில் பூசிக்கொள்ள வேண்டிய எண்ணெய் என்ன.

- Advertisement -

அதிர்ஷ்டம் தரும் எண்ணெய்

உங்கள் கையை அதிர்ஷ்டமாக்கி செல்வத்தை தக்க வைக்க போகும் எண்ணெய் ஜாதிக்காய் எண்ணெய். இது அவ்வளவு எளிதாக எல்லா கடைகளிலும் கிடைக்காது. நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்தோ அல்லது ஆன்லைனில் புக் செய்தோ இந்த எண்ணெயை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெய் கொஞ்சம் விலை கூடுதலாக தான் இருக்கும்.

ஆனால் தாந்திரீக பரிகாரங்களில் இந்த எண்ணெய்க்கு பண ஈர்ப்பு அதிகமாக உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த எண்ணெயை தொட்ட கையால் பணத்தையோ உங்கள் சொத்து பத்திரத்தையோ, அல்லது தங்கம் போன்ற விலை உயர்ந்த உங்கள் வீட்டு சொத்துக்களை நீங்கள் தொடும்போது, அந்த சொத்துக்கள் உங்களிடம் நிலையாக தங்குமென்றும், அந்த சொத்துக்கள் எளிதில் அடமானம் போகாமல், விற்காமல் அடுத்தடுத்த தலைமுறையினர் கையில் போய் சேரும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

எவ்வளவோ செலவு செய்கின்றோம். இந்த எண்ணெயை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் குளித்துவிட்டு, குலதெய்வத்தின் பெயரை 3 முறை சொல்லிவிட்டு, சொத்து சுகம் எங்கள் தலைமுறைக்கு நிலையாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த எண்ணெயை ஒரு சொட்டு உள்ளங்கைகளில் வைத்து, இரண்டு கைகளிலும் தேய்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். வழக்கம் போல உங்கள் வேலைகளை பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சொல்லும் இந்த தாந்திரீக பரிகாரர பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -