வெள்ளிக்கிழமை ராகு கால அம்பாள் வழிபாடு

amman
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை பட்டியலிட்டு சொன்னால், ஒரு நாள் போதாது. அந்த அளவிற்கு கஷ்டமும் சுமையும் அதிகமாக இருக்கக்கூடிய மனித பிறவி இது. இந்த பிறவியில் இருக்கும் கஷ்டத்தில் இருந்து விடுபட, இறைவனின் பாதங்களில் முக்தி கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு இறை வழிபாடு மட்டும்தான் ஒரே வழி.

இன்று அந்த வரிசையில் நம்முடைய குடும்ப சாபங்கள், குடும்ப கஷ்டங்கள், குலதெய்வ கோபம், குலதெய்வம் சாபம் இப்படிப்பட்ட கண்ணுக்கு தெரியாத பல பிரச்சனைகளில் இருந்து விடுபடும் ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் செய்தால் போதும். உங்கள் குடும்பத்திற்கு வரும் கஷ்டங்கள் குறையும். வாழ்நாள் துன்பங்கள் குறையும். நல்லது நடக்கும். அம்பாள் உங்கள் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக் கொள்வாள். வெள்ளிக்கிழமை நம்முடைய குடும்ப நலனுக்காக செய்ய வேண்டிய, அம்பாள் வழிபாடு பற்றிய தகவல்களை, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

வெள்ளிக்கிழமை ராகுகால அம்பாள் வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையான பொருட்கள். மண் அகல் விளக்கு, பசு நெய், தாமரை தண்டு திரி, அவ்வளவுதான். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் வெள்ளிக்கிழமை ராகு கால நேரம். வெள்ளிக்கிழமை ராகுகால நேரம் ஆனது 10:30 மணியிலிருந்து 12:00 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த நேரத்தில் கோவிலுக்கு சென்றும் இந்த விளக்கை ஏற்றலாம், அல்லது வீட்டிலிருந்தபடியும் அம்பாளை நினைத்து இந்த விளக்கை ஏற்றலாம். முடிந்தால் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று, மேல் சொன்ன முறைப்படி விளக்கு ஏற்றினால், உங்கள் குடும்பத்தில் இருக்கும் தீராத துன்பங்கள் தீரும்.

கோவிலுக்கு சென்று வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, மன உறுதி அம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். செய்த தவறுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, குடும்பம் சுபிட்சம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை வையுங்கள். கோவிலுக்கு செல்ல முடியாது என்பவர்கள் வீட்டிலேயே அம்மன் திருவுருவப்படத்திற்கு முன்பு இந்த விளக்கை ஏற்றி வைத்து பிரார்த்தனை வைத்தாலும், உங்கள் குடும்ப கஷ்டம் தீரும்.

இதையும் படிக்கலாமே: செல்வவளம் பெருக சில்லறை காசு பரிகாரம்

இது தவிர உங்கள் குடும்பத்திற்கு கண்ணுக்கு தெரியாமல் அடுத்தவர்கள் விட்ட சாபம், குலதெய்வக் கோபம் ஏதாவது இருந்தாலும் அதுவும் மறைந்து போக இந்த வழிபாடு உங்களுக்கு நிச்சயம் கை மேல் பலனை கொடுக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -