3 முத்தான விஷயங்களைக் முடித்து தரும் இந்த அற்புத பொருள் 1 மட்டும் வீட்டில் இருந்தால் போதும். அனைத்து துன்பங்களும் தீர்ந்துவிடும்

cash
- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்கும் பலவித கனவுகளும், கற்பனைகளும் இருக்கின்றது. தனது குடும்பம் சிறப்புடன் இருக்க வேண்டும், தனது வாழ்க்கை வளமாக இருக்க வேண்டும், தனது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று பல கனவுகள் இருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் நிறைவேற வேண்டுமென்றால் அதற்கு அதிர்ஷ்டமும், இறைவனின் அருளும் இருக்க வேண்டும். இவை இரண்டும் இருந்தால் மட்டுமே சமுதாயத்தில் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான பணம் நம்மிடம் வந்து சேரும். பணம் இல்லாத வாழ்க்கையை இப்பொழுதுள்ள காலகட்டத்தில் வாழ்வதென்பது மிகவும் கொடுமையான விஷயமாக இருக்கிறது. பணம் இருந்து மனதில் நிம்மதி இல்லாமல் இருந்தாலும் அந்த வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே மன நிம்மதி, பணவரவு இவை அனைத்தையும் கொடுக்கக்கூடிய இந்த ஒரு பொருள் மட்டும் நம் கையில் இருந்தால் போதும். அனைத்துமே நம்மைத் தேடி வந்துவிடும். வாருங்கள் அது என்ன பொருள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

அனைவரது வீட்டிலும் இந்த பொருள் நிச்சயம் இருக்கும். அப்படி இல்லை என்றாலும் சிறு பிள்ளைகள் இருக்கும் வீட்டில் இந்த பொருள் இல்லாமல் இருக்காது. இதனை பெரியவர்கள் பெயர் சொல்லாதது, பிள்ளை வளர்ப்பான் என்று சொல்வார்கள். ஆம்! அனைவருக்கும் இந்த பெயர் சொன்னவுடனே தெரிந்திருக்கும் அது வசம்பு என்று.

- Advertisement -

வசம்பிற்க்கு பொதுவாகவே தன்னிடம் இருக்கும் பொருட்களை அதிக அளவில் ஈத்துக் கொடுக்கும் அற்புத சக்தி இருக்கிறது. பூமியில் பிறக்கும் இளம் உயிரான சிறு குழந்தைகளுக்கு கண் திருஷ்டி பட்டு விடாமல் இருக்கவும், நோய் வராமல் தடுக்கவும் இந்த வசம்பைக் கரியாக்கி அதனை மையாக பொட்டு வைத்து விடுவார்கள்.

அதேபோல் பணவரவை அதிகரிப்பதற்கு நீங்கள் பணம் வைக்கும் டப்பா அல்லது பர்ஸில் சிறிய துண்டு வசம்பை வைத்துவிட வேண்டும். இது உங்கள் பணப் பர்ஸில் இருக்கும் பணத்தை வீண் விரயம் ஆகாமல் தடுக்கும். அதுமட்டுமல்லாமல் உங்களிடமிருந்து செல்லும் பணம் மறுபடியும் எந்தவித வழியிலாவது மீண்டும் உங்களையே வந்து சேரும்.

- Advertisement -

ஒரு சிலர் தங்கள் கணவர் தன்னிடம் அன்பாக இல்லை, எப்பொழுதும் கோபமாக இருக்கிறார் என்று கணவரின் அன்பை எதிர்பார்த்து மன வலியோடு காத்துக் கொண்டிருப்பார்கள். இப்படி கணவரின் அன்பைப் பெறுவதற்கு முதலில் சிறிய துண்டு வசம்பை ஒரு மஞ்சள் நிற கயிற்றால் கட்ட வேண்டும். பிறகு அதனை தாலி சரடு அல்லது தாலி கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். இதனை கட்டும் பொழுது மனதிற்குள் என் கணவர் என்னிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று மூன்று முறை சொல்லி கட்ட வேண்டும்.

அதேபோல் ஒரு மண் அகல் விளக்கில் பசு நெய் ஊற்றி, திரி போட்டு, விளக்கு ஏற்றி, அதில் வசம்பை சூடுபடுத்தி, கரியாக்கி, அதனுடன நல்லெண்ணெய் சேர்த்து குழைத்து, மையாக்கி ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனை நீங்கள் வெளியில் செல்லும் பொழுது நெற்றியில் பொட்டாக வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு செல்லும் பொழுது நீங்கள் எந்தவித காரியத்திற்கும் சென்றாலும் அது வெற்றி அடையும்.

- Advertisement -