சம்பளப் பணம் வந்தவுடன் இப்படி செலவு செய்தால் பணம் கையில் தங்குவதோடு வருமானமும் அதிகரிக்கும்.

mahalakshmi cash
- Advertisement -

பணத்தை சம்பாதிக்க நாம் பெரும்பாடு படுகிறோம். அப்படி சம்பாதிக்கும் பணம் கைக்கு வந்தவுடன் அதை எந்த வகையில் செலவு செய்கிறோம் என்பதை பொறுத்து தான் அந்த பணம் அதிகரிப்பதும் வீண் விரையம் ஆகுவதும் நடக்கும். சம்பளம் வந்தவுடன் சில விஷயங்களுக்காக செலவு செய்யும் போது அது அதிகரிக்கும் என்பதை இப்போது அல்ல நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இந்த முறையை மாத சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமின்றி அந்த மாதம் தொடங்கியவுடன் முதல் வருமானம் அதாவது சொந்தமாக தொழில் செய்பவர்கள், கடை வைத்திருப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் எல்லாம் மாதத்தின் முதல் நாள் முதல் வருமானத்தை இப்படி பயன்படுத்தினால் அந்த வருமானம் அதிகரிப்பதோடு பணம் வீண்விரயமாகாமல் கையில் தங்கும். அதைப்பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சம்பளம் வாங்கியவுடன் செய்ய வேண்டிய செலவு

வருமானம் கையில் வந்தவுடன் முதலில் செய்ய வேண்டிய செலவு விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவது தான். இது உங்களுடைய வருமானத்தை பெருக்குவதுடன் வீண் விரயங்களை தடுத்து பணத்தை தங்க வைக்கும்.

அடுத்ததாக பசு மாட்டிற்கு உண்ண ஏதாவது வாங்கிக் கொடுங்கள். கீரை, பழங்கள் இப்படி எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொடுக்கலாம். அதே போல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெண்னையை தானமாக வாங்கி கொடுங்கள். அதை செய்ய முடியாதவர்கள் வெற்றிலையை வாங்கி மாலையாக தொடுத்து போடலாம்.

- Advertisement -

அதுமட்டுமின்றி சம்பளம் வாங்கியவுடன் அதில் முதல் செலவாக மல்லிகை பூவை வாங்குங்கள். இந்த மல்லிகை பூவை உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஏதேனும் அம்மன் கோவிலுக்கு கொடுங்கள. இதன் மூலம் வருமானம் நிச்சயம் பல மடங்கு உயர்வதோடு கையில் பணம் எப்போதும் தங்கும்.

இதே போல உங்கள் வீட்டின் அருகில் பாம்பு புற்று இருந்தால் அதற்கு பால் வாங்கி ஊற்றலாம். இதன் மூலமும் பணம் கையில் தங்கி வருமானம் அதிகரிக்கும். இதை செய்யும் போது கவனமாக செய்யுங்கள்.

- Advertisement -

இவை அனைத்திலும் விட உங்களால் முடிந்த அளவு ஏதேனும் ஒரு ஏழை குழந்தைக்கு படிப்பிற்கு ஏதாவது உதவி செய்யுங்கள். அது ஒரு சிறிய பேனாவாக இருக்கலாம், ஒரு நோட்டாக இருக்கலாம் உங்களால் என்ன முடியுமோ அதை வாங்கி கொடுங்கள். மேற்கூறிய அனைத்தையும் விட இதை செய்யும் பொழுது லட்சுமி கடாட்சமும் சேர்த்து அனைத்து நலன்களையும் பெறலாம்.

இப்பொழுதெல்லாம் சம்பளம் பெரும்பாலும் வங்கி கணக்கிற்கு தான் செல்கிறது. அது மட்டும் இன்றி தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட இந்த முறையே பயன்படுத்துகிறார்கள். என்னதான் இப்படி செய்தாலும் கூட அதிலிருந்து கிடைக்கும் பணத்தை கையால் கொடுத்து இவற்றில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணம் திரும்ப கிடைக்க தீப வழிபாடு.

இப்படி நம் கையில் வரும் முதல் பணத்தில் நாம் செய்யும் முதல் செலவு தான் நம்முடைய வருமானம் அதிகரிக்க கூடிய வழியை ஏற்படுத்தும். இது இப்போது செய்யக் கூடிய வழக்கமல்ல நம் முன்னோர்கள் காலத்திலிருந்து பின்பற்றியவை தான். இந்த வழிமுறைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் பின்பற்றி பலனடையலாம். என்ற கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -