பணம் கொட்டோ கொட்டென கொட்ட கொட்டாங்குச்சியில் இதை போட்டு வையுங்கள். அடுத்தடுத்து நடக்கக்கூடிய நல்லதை விரல் விட்டு எண்ண கூட நேரம் இருக்காது.

cash6
- Advertisement -

கண்ணாடி பாத்திரம், பீங்கான் பாத்திரம், தங்க பாத்திரம், வெள்ளி பாத்திரம், இவைகளை எல்லாம் விட மதிப்பு மிக்க ஒரு பொருள்தான் கொட்டாங்குச்சி. இயற்கை நமக்கு கொடுத்த உறுதியான பாத்திரம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதோடு மட்டுமா பிரம்மா விஷ்ணு சிவன் இந்த மும்மூர்த்திகளின் கலவைதான் தேங்காய் என்று சொல்லப்படுகிறது. தேங்காய் தண்ணீருக்கு எதிர் மறை ஆற்றலை நீக்கக்கூடிய தன்மை உண்டு. அதனால் தான், எந்த நல்ல காரியம் நடந்தாலும் அந்த இடத்தில் தேங்காயை உடைக்கின்றோம்.

தேங்காயை உடைத்து தொடங்கக்கூடிய அந்த நல்ல விஷயத்தில் நமக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம் என்றும் நம்முடைய இந்து சாஸ்திரத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. கோவிலுக்கு சென்றால் தேங்காய் உடைக்காமல் வருகின்றோமா. இவ்வளவு அருமை பெருமைகளை கொண்ட தேங்காயிலிருந்து வரும் கொட்டாங்குச்சியை பெரும்பாலும் நாம் தூக்கி குப்பையில் தான் போடுவோம். அந்த கொட்டாங்குச்சியை வைத்து நாம் ஒரு ஆன்மீகம் பரிகாரத்தை இன்று பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

பணத்தைக் கொட்டி தரும் கொட்டாங்குச்சி பரிகாரம்:
தேங்காய் துருவிய கொட்டாங்குச்சிக்கு உள்பக்கம் நன்றாக காய வைத்து, மிச்சம் மீதி இருக்கும் தேங்காயை எல்லாம் சுத்தமாக நீக்கி விடுங்கள். கொட்டாங்குச்சியை அப்படியே தரையில் வைத்தால் நிற்காது. கீழே சாய்ந்து விடும். ஆக அந்த கொட்டாங்குச்சியை நிற்க வைக்கும் அளவுக்கு அடியில் ஒரு சிறிய கிண்ணம் எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஏதாவது ரிங் போல இருக்கும் கலவடையின் மேல் அந்த கொட்டாங்குச்சியை நிற்க வைத்துக் கொள்ளலாம்.

அதன் உள்ளே முதலில் ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளு, அதன் பிறகு ஒரு ரூபாய் நாணயம், அதன் பிறகு ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, போட்டுவிட்டு அந்த கல் உப்புக்கு மேலே, இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பு, ஒரே ஒரு அன்னாசி பூவை, அழகாக அடுக்கி அப்படியே இதை வரவேற்பு அறையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த கொட்டாங்குச்சி எப்போதும் உங்களுக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். வீட்டில் அவ்வளவு மன அமைதி இருக்கும். சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. கல் உப்பு எப்போதுமே எதிர்மறை ஆற்றலை ஈர்த்துக் கொள்ளும் என்று சொல்லுவார்கள். அந்த கல்லுப்பு பரிகாரத்தை நாம் இன்னும் கொஞ்சம் பலபடுத்தி செய்து வைத்திருக்கின்றோம் அவ்வளவுதான்.

எள்ளு சனிபகவானால் எந்த பாதிப்புகளும் வராமல் இருக்க. குலதெய்வத்தை நினைத்து வைக்க கூடிய ஒரு ரூபாய் நாணயம். எதிர்மறை ஆற்றலை அழிக்க கூடிய, மகாலட்சுமியே அம்சமாகவே சொல்லப்படும் உப்பு, கிராம்பு ஏலக்காய் அன்னாசிப்பூ, இந்த மூன்று பொருட்களுக்குமே பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி உண்டு. எதிர்மறை ஆற்றலை அழிக்கக்கூடிய சக்தியும் உண்டு. ஆக இந்த பொருட்கள் எல்லாம் சேர்ந்து கொட்டாங்குச்சியில் இருக்கும் போது நமக்கு ஒரு நல்ல ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். (இந்த பொருட்களை எல்லாம் வாரத்தில் ஒரு நாள் மாற்ற வேண்டும். கல் உப்பை மட்டும் தண்ணீரில் கரைத்து விடுங்கள். மற்ற பொருட்களை எல்லாம் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். ஒரு ரூபாய் நாணயத்தை மீண்டும் அடுத்த வாரம் பரிகாரம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்).

- Advertisement -

இதை செய்த உடனேயே கூரையை பிச்சி கொண்டு பணம் கொட்டும் என்று சொல்ல வரவில்லை. வீட்டிற்குள் பண வராமல் தடுக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் இருக்கிறது அல்லவா, அந்த நெகட்டிவ் எனர்ஜியை இது உடைத்து விடும். இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு ‘என்னை விட்டு கஷ்டம் போகாது. நான் மட்டும்தான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன். என்னை சுற்றி இருக்கும் மற்றவர்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள், சந்தோஷமாக இருக்கிறார்கள், பணம் என் கையில் வர மாட்டேங்குது’ என்று நெகட்டிவ்வாவே பேசிக் கொண்டு இருந்தால் இந்த பரிகாரம் செய்து எந்த பிரயோஜனமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: பூஜை அறையில் வைக்கும் பஞ்ச பாத்திர தண்ணீரில் இந்த 3 பொருளை போட்டு வைத்தால், ஏழேழு தலைமுறைக்கும் உங்கள் குடும்பத்திற்க்கு பஞ்சம் என்பதே இருக்காது.

பரிகாரத்தை செய்து விட்டோம். இனிமே நமக்கு நல்லது தான் நடக்கும். நிறைய பணம் வரும். நிறைய சொத்து கிடைக்கும். ஏதாவது செய்து வாழ்க்கையில் இனி முன்னேறிடும் விடலாம். என்று பாசிட்டிவ் ஆகவே நினைத்துக் கொண்டிருங்கள். முன்னேற நிறைய நிறைய நிறைய முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்க போகும் நல்லதை விரல் விட்டு எண்ண முடியாது. சந்தோஷமாக பரிகாரத்தை படிக்கும் போதே நமக்கு எல்லா நன்மையும் நடந்து விட்டதாக தோன்ற வேண்டும். அப்போதுதான் நன்மை நடக்கும். ஒருவருடைய எண்ணம் தாங்க அவர்களுடைய வாழ்க்கையை நிர்ணயிப்பது. ஆக உங்களுடைய எண்ணத்தை தூய்மை செய்யுங்கள். பரிகாரத்தை செய்யுங்கள். பலன் பெறுங்கள்.

- Advertisement -