பூஜை அறையில் வைக்கும் பஞ்ச பாத்திர தண்ணீரில் இந்த 3 பொருளை போட்டு வைத்தால், ஏழேழு தலைமுறைக்கும் உங்கள் குடும்பத்திற்க்கு பஞ்சம் என்பதே இருக்காது.

panja-pathiram
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய பூஜை அறை தான் அந்த வீட்டின் கோவிலாக கருதப்படுகிறது. நம் வீட்டில் தெய்வங்கள் வாசம் செய்யும் பூஜை அறையை, எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த இடத்தில் காய்ந்த பூக்கள் இருக்கவே கூடாது. ஒட்டடையும் தூசிகளும் இருக்கவே கூடாது. சந்தர்ப்ப சூழ்நிலையால் சுவாமிக்கு புதியதாக பூக்களை போட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. காய்ந்த பூக்களை பூஜையறையில் வைத்து விளக்கு ஏற்றி பூஜை செய்யாதீர்கள். அதேபோல பூஜை அறையில் இருக்கக்கூடிய பஞ்ச பாத்திரத்தில் எப்போதும் வீட்டு பெண்களுக்கு ஒரு கவனம் இருக்க வேண்டும். பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் குறையவே கூடாது.

தெய்வங்களுக்கு நாம் வைக்கக்கூடிய நெய்வேதியத்துக்கு இணையானது இந்த பஞ்ச பாத்திரத்த தண்ணீர். அந்த பஞ்ச பாத்திர தண்ணீரில் எந்தெந்த பொருட்களை போட்டு வைத்தால் வீட்டில் சுபிட்சம் நிலவும், லட்சுமி கடாட்சம் பெருகும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

பஞ்சம் நீங்க பஞ்ச பாத்திர பரிகாரம்:
முதலில் தினமும் விளக்கு ஏற்றுவதற்கு முன்பாக பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் பழைய தண்ணீரை கீழே அல்லது செடியில் ஊற்றிவிட்டு அந்த பாத்திரத்தை ஒரு முறை கழுவி விட்டு, புதிய தண்ணீரை வைக்க வேண்டும். அந்த தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரம், நசுக்கிய ஏலக்காய், லவங்கம், போட்டு பூஜையறையில் வைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. இந்த மூன்று பொருட்களுமே லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக் கூடிய பொருள் தான். இந்த வாசம் இருக்கக்கூடிய இடத்தில் பண ஈர்ப்பு இருக்கும். இந்த வாசம் நிறைந்திருக்கும் இடத்தில் இறை சக்தியும் தெய்வக் கடாட்சமும் நிறைவாக இருக்கும்.

அப்படி இல்லை என்றால் ஒரே ஒரு வெள்ளி நாணயத்தை அந்த பஞ்ச பாத்திர தண்ணீரில் போட்டு வைப்பது மிக மிக நல்லது. ஒரு வீட்டு பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் எப்போதுமே அசுத்தம் நிறைந்த தண்ணீராக இருக்கவே கூடாது. விளக்கு ஏற்றிவிட்டு பூஜையை நிறைவு செய்து கொண்டு, உங்கள் வேண்டுதலை இறைவனிடம் சொல்லிவிட்டு, பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் அந்த தண்ணீரை பஞ்சபாத்திர உத்திரனியால்(பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் சின்ன கரண்டியால்) எடுத்து ஒரு சொட்டு உங்கள் கையில் விட்டு, தினமும் தீர்த்தமாக பருகுவது ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -

தினமும் விளக்கு ஏற்றி முடித்துவிட்டு அந்தத் தீர்தத்தை நாம் பருக வேண்டும் என்றால் நிச்சயமாக அந்தப் பஞ்சபாத்திர தீர்த்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் பிறக்கும். பச்சைக் கற்பூரம் ஏலக்காய் லவங்கம் இந்த மூன்று பொருட்களோடு சேர்த்து துளசி இலை, வில்வ இலைகள் கிடைத்தால் அந்த தண்ணீரில் போடுவது இன்னும் இரட்டிப்பு மடங்கு பலனை நமக்கு கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்க பிரச்சனைகளுக்கு எல்லாம் முடிவு கட்ட, இந்த ஒரு ரூபாய் போதும். உங்க வாழ்க்கையில் ஒரு முறை இதை மட்டும் செஞ்சுடுங்க இனி நீங்க தொட்டதெல்லாம் ஜெயம் தான்.

இந்த வாசம் பூஜை அறையில் நிறைவாக இருந்தால் நிச்சயமாக உங்களுடைய வீட்டில் சண்டை சச்சரவு ஏற்படாது. வீட்டில் இருப்பவர்களுக்கு மன நிறைவான சூழ்நிலை ஏற்படும். அவரவர் வேலையை அவரவர் சரியாக பார்ப்பார்கள். சரியான நேரத்தில் எழுந்து சரியான நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை செய்து விட்டாலே வீட்டிற்கு வருமானம் தேடி வரும். சோம்பேறித்தனமும் வறுமையும் பீடையும் உங்களை நெருங்கப் போவதில்லை. பிறகு உங்களை பார்த்து உங்களுடைய வீட்டில் இருக்கும் அடுத்த தலைமுறையினரும் சுறுசுறுப்பாக நடந்து கொள்வார்கள். பிறகு வீட்டிற்குள் பஞ்சம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது. இந்த எளிமையான பரிகாரத்தை பின்பற்றி பாருங்கள் நிச்சயம் குடும்பம் சீரோடும் சிறப்போடும் வாழ்வாங்கு வாழும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -