கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமும், நகையும் வீட்டில் தங்கவில்லையா? அப்போ ஒரு முறை இதை செஞ்சு பாருங்க. உங்க வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுவதை உங்களால் உணர முடியும்.

mahalakshmi
- Advertisement -

நமக்கு ஆயிரம் செலவுகள் வந்தாலும் அதில் ஒரு ரூபாயாவது நாம் சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்போம். அதேபோல் சிறுக சிறுக சேமித்து சிலர் நகைகளையும் வாங்குவர். இந்த சேமிப்பு உயர்ந்து கொண்டே செல்லும் பொழுது நமக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் நாம் ஒரு ரூபாய் சேமித்த இடத்தில் அது இரண்டு ரூபாயாக தேவையில்லாத விரையங்கள் ஏற்படும் பொழுது நமக்கு மிகவும் வருத்தத்தை தரும். இந்தப் பதிவில் நாம் சேமிக்கும் செல்வம் மேலும் மேலும் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

சேமிப்பு உயர்வதற்கு நாம் மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். அதை மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வதென்று இப்போது பார்ப்போம். நம் வீட்டில் இருக்கும் மஹாலட்சுமியின் புகைப்படத்திற்கு முன்பாக ஒரு ரூபாய் நாணயங்களாக 108 நாணயங்களை எடுத்து வைத்துக் கொண்டு, வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அதாவது சுக்கிர கோரையில் மகாலட்சுமி பூஜையை நாம் மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கிண்ணம் வெள்ளி கிண்ணமாக இருந்தால் அது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும் அல்லது பித்தளை கிண்ணத்தையும் எடுத்துக் கொள்ளலாம். இப்போது நாம் ஒவ்வொரு நாணயமாக எடுத்து, “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்று கூறி, அர்ச்சனை செய்வது போல அந்த நாணயத்தை மகாலட்சுமிக்கு முன்பாக காட்டி கிண்ணத்தில் போடவேண்டும். இப்படி 108 நாணயங்களையும் அர்ச்சனை செய்து கிண்ணத்தில் போட்ட பிறகு அந்த நாணயங்களுக்கு மேல் சுவர்ண நாணயம், அதாவது தங்க நாணயம் வைக்கவேண்டும்.

தங்க நாணயம் வைக்க வசதி இல்லாதவர்கள், பஞ்ச பூதங்களை ஈர்க்கும் தன்மை கொண்டதாக விளங்கும் பஞ்சலோக நாணயத்தை வாங்கி வைக்கலாம். பிறகு அந்த நாணயத்திற்கு மேல் ஒரு விநாயகர் சிலையை வைக்க வேண்டும். அந்த விநாயகர் வெள்ளி விநாயகராக இருந்தால் நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். இப்போது இந்தக் கிண்ணத்தை நாம் பணத்தை சேமித்து வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

- Advertisement -

பொதுவாக பலரும் பீரோவில் தான் பணத்தை வைப்பது வழக்கம். அந்த வகையில் பீரோ லாக்கரில் இந்த கிண்ணத்தை வைக்கலாம். மேலும் பீரோவானது கன்னி மூலையிலோ அல்லது ஈசானிய மூலையிலோ இருக்க வேண்டும். அதே போல பீரோ கிழக்கு திசை பார்த்தோ அல்லது வடக்கு திசை பார்த்தோ இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செய்வினை நீங்க ஏற்றவேண்டிய விளக்கு

அடுத்ததாக நாம் பீரோவில் பணத்தை வைக்கும் பொழுது, கிழக்கு திசை பார்த்த பீரோவாக இருந்தால் நாம் வடக்கு முகமாக நின்று வைக்க வேண்டும். வடக்கு திசை பார்த்த பீரோவாக இருந்தால் நாம் கிழக்கு முகமாக நின்று வைக்க வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நம்முடைய வீண் விரயங்கள் தவிர்க்கப்படுகிறது. மேலும் நம்முடைய சேமிப்புகள் உயரும். நாம் கஷ்டப்பட்டு வாங்கிய நகைகள் நம்மிடமே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -