எவ்வளவு பெரிய செய்வினையாக இருந்தாலும் அதை செயலிழக்கச் செய்யும் விளக்கு. இந்த விளக்கை ஏற்றினால் செய்வினைக்கே, செய்வினையை திருப்பி அனுப்பி விடலாம். இனி பயம் இல்லை.

amman
- Advertisement -

குடும்பத்தில் தீராமல் தொடர்ந்து ஏதாவது ஒரு கஷ்டம் வந்தால் உடனடியாக நம் மனதில் எழும்பும் ஒரு சந்தேகம், ‘நம்முடைய குடும்பத்திற்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களோ’ என்று தான் நினைப்போம். இந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக நம் நிம்மதியை இழக்க செய்து விடும்.

செய்வினை ஏவல் பில்லி சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றல்கள் சக்தி பெறுவதற்கு முதல் காரணம், என்ன தெரியுமா. நம்முடைய பயம்தான். பயமில்லாமல் எல்லாவற்றையும் எதிர்த்து நின்றால் இப்படிப்பட்ட எதிர்மறை சக்திகள் எல்லாம் நம்மை பார்த்ததும் இரண்டு தள்ளி ஓடிவிடும். பயந்து பயந்து நடுங்கிக் கொண்டே இருந்தால் இந்த எதிர்மறை ஆற்றல் எல்லாம் நம்மை தூக்கிப்போட்டு மிதிக்க தொடங்கிவிடும்.

- Advertisement -

எது எப்படியாக இருந்தாலும் சரி, எங்களுடைய அடி மனதில் ஒரு சின்ன பயம் இருக்கிறது. எங்கள் குடும்பத்திற்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாக சொல்கிறார்கள். அதிக பணம் செலவு செய்து பரிகாரம் செய்து கொள்ள எங்களால் முடியாது. நமக்கு நாமே செய்வினையை நீக்க ஏதேனும் பரிகாரம் செய்யலாமா என்று கேட்பவர்களுக்காக இதோ ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் விளக்கப் பரிகாரம். இந்த பரிகாரத்தை நமக்கு நாமே நம்முடைய வீட்டில் செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை செய்தால் ஏவல் பில்லி செய்வினை சூனியம் எதுவாக இருந்தாலும் அது நம் குடும்பத்தை விட்டு விலகி விடும்.

செய்வினையை செயலிழக்கச் செய்யும் விளக்கு:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு இலுப்பை எண்ணெயும் வேப்ப எண்ணெயும் தேவை. வேப்ப எண்ணெய் 1/2 லிட்டர் என்றால், இலுப்பை எண்ணெய் 1/2 லிட்டர். இரண்டும் சம அளவு எடுத்து கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை போட்டு தான் தீபம் ஏற்ற வேண்டும். இரும்பு விலக்கில் தீபம் ஏற்ற வேண்டும். இரும்பு விளக்கு பெரும்பாலும் கடைகளில் நமக்கு கிடைக்காது. இரும்பு கடையில் சொல்லி ஒரு தகட்டில் விளக்கு போல செய்து வாங்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரே ஒரு விளக்கு போதும். பெரும்பாலும் இரும்பு விளக்கில் எந்த இடத்திலும் தீபம் ஏற்ற மாட்டார்கள். இந்த செய்வினை நீக்குவதற்கு மட்டும் தான் இந்த இரும்பு விளக்கு பயன்படுத்தப்பட வேண்டும். வீட்டில் பூஜையறை அல்லாமல் வேறு ஏதாவது ஒரு இடத்தில் ஒரு தட்டின் மேல் இரும்பு விளக்கை வைத்து, இலுப்பெண்ணையும் வேப்பெண்ணையும் கலந்து வைத்திருக்கிறோம் அல்லவா அந்த எண்ணெயை ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபத்தை தொடர்ந்து ஒரு வீட்டில் 48 நாட்கள் ஏற்றினால் அந்த வீட்டில் இருக்கும் செய்வினை பிரச்சனை விலகிவிடும்.

நல்லா தெரிஞ்சுக்கோங்க. அந்த இரும்பு விலக்கை மற்ற வேறு எந்த பயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்தக் கூடாது. இந்த விளக்கு ஏற்றி முடித்த பின்பு 48 நாட்கள் கழித்து அந்த இரும்பு விளக்கை கொண்டு போய் ஊர் எல்லையில் யார் கால் படாத இடத்தில் போட்டு விட்டு வந்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த விளக்கு ஏற்றி ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ எரிந்த பின்பு அந்த விளக்கை எடுத்து யார் கைக்கும் படாமல் உயரமான இடத்தில் வைத்து விடுங்கள். மறுநாள் அந்த விளக்கை ஏற்றும் போது பழைய திரி, பழைய எண்ணெய் எது இருந்தாலும் அதை துடைத்து கீழே ஊற்றிவிட்டு மீண்டும் புதிய திரி புதிய எண்ணெய் போட்டு தான் ஏற்ற வேண்டும். நேரம் என்பது உங்கள் சகோதரியம் தான். உச்சி வேலை அதாவது மதியம் 12 மணி, இரவு 12 மணியை தவிர்த்து விட்டு மற்ற எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த விளக்கை ஏற்றி வீட்டில் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பல வருடங்களாக தீராத வியாதியால் படுத்த படுக்கையில் இருப்பவர்கள் நோயிலின் பிடியில் இருந்து விரைவில் மீண்டு வர செய்ய வேண்டிய எளிய பரிகாரம்.

48 நாள் விளக்கை ஏற்றி முடித்த பின்பு குலதெய்வ கோவிலுக்கு சென்று ஒரு இரவு தங்கி விட்டு வருவது சிறப்பான பலனை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -