இந்த இரண்டு இலைகள் இருந்தால் என்றுமே நம்மிடம் பணம் நிரந்தரமாக இருக்கும்.

elai pariharam
- Advertisement -

நம் வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கு பின்னாலும் பணம் என்ற மூன்றெழுத்து மறைந்து தான் இருக்கிறது. பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் பல சூழ்நிலைகளை கடந்து வருகிறோம். அவ்வாறு சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைத்தால் பிற்கால வாழ்க்கைக்கு அது உதவிகரமாக இருக்கும் என்று தான் அனைவரும் நினைப்போம். ஆனால் பணத்தை சேமித்து வைக்க முடியாமல் விரையம் ஆகும் பொழுது எந்த பரிகாரத்தை செய்தால் கையில் பணம் நிலையாக நிலைத்திருக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பணம், செல்வம் என்று கூறியதுமே நம் நினைவிற்கு வரக்கூடியவர் சுக்கிர பகவான். அவரின் ஆதிக்கத்தை பெற்ற தெய்வமாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார். இவர்களின் பரிபூரண அனுக்கிரகம் கிடைத்தால் பணம் சம்பந்தப்பட்ட அனைத்தும் நமக்கு சாதகமாகவே நடைபெறும். இந்த பதிவில் மகாலட்சுமி தாயாரை எவ்வாறு வசியம் செய்து நம் உடனேயே பணம் இருக்கும் இடத்தில் தங்க வைக்க முடியும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்திற்கும் விருப்பமான பொருட்கள் என்று சில பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களை நாம் அந்த தெய்வத்திற்காக வைக்கும் பொழுது அந்த இடத்தில் அந்த தெய்வம் நிரந்தரமாக வசிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அனைத்து தெய்வத்திற்கும் உகந்ததாக கருதப்படுவது தான் வெற்றிலை. மேலும் வெற்றிகளை குவிக்கும் இலை என்பதால்தான் இதற்கு வெற்றிலை என்று பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட வெற்றிலையில் மகாலட்சுமி தாயார் பரிபூரணமாக குடியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் எந்த வீட்டில் வெற்றிலை வாடுகிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்ய மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வெற்றிலையில் மூன்று திருநீற்றுப்பச்சிலை இலையை வைத்து அதனுடன் பச்சை கற்பூரத்தையும் சேர்த்து நன்றாக மடித்து பணம் வைத்திருக்கும் பெட்டியில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு வைப்பதன் மூலம் மகாலட்சுமி தாயார் அந்த பெட்டியில் நிரந்தரமாக வாசம் செய்வார்கள். அவர்கள் வாசம் செய்தாலே அங்கு தேவையற்ற வீண் விரையங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும். மேலும் பணமானது மேலும் மேலும் சேர்ந்து கொண்டே செல்லும்.

இந்த இலைகளை மாதத்திற்கு ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஓரையான காலை 6 முதல் 7 வரை, மதியம் 1 முதல் 2 வரை, இரவு 8 முதல் 9 வரை இருக்கும் நேரத்தில் மாற்றி வைக்க வேண்டும். பழைய வெற்றிலை, திருநீற்றுப்பச்சிலையை கால்படாத ஒரு இடத்தில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு நிலம் வாங்க கூடிய யோகத்தை பெற செவ்வாய்க்கிழமையில் இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

எளிதாக கிடைக்கக்கூடிய இந்த இரண்டு இலைகளையும் நம்முடைய பணப்பெட்டியில் நாம் வைத்து மகாலட்சுமி தாயாரை நிரந்தரமாக நம்முடனே வாசம் செய்ய வைத்து மகிழ்ச்சியாக வாழ்வோம்.

- Advertisement -