பணம் பெருக பரிகாரம்

Panam peruga pariharam in Tamil
- Advertisement -

ஒரு சிலர் வாழ்க்கையில் பணம் மட்டுமே முக்கியமானது அல்ல என்று கூறினாலும் அவர்கள் வாழ்வதற்கும் பணம் மிகவும் அவசியம். நம் எல்லோருக்குமே நன்கு தெரியும் தற்காலத்தில் எல்லாருக்கும் ஏதாவது ஒரு வகையில் பணம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக அதிக அளவு பணம் சேர வேண்டும் என்பது தான் பெரும்பாலானவர்களின் கவலையாக உள்ளது. அந்த வகையில் நமக்கு வாழ்வில் அதிகளவில் பணம் பெருக செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

பணம் பெருக சிறந்த பரிகாரம்

தங்களுக்கு வாழ்வில் பணம் பெருகிக்கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கும் எவரும் அன்னதானம் செய்தாலே போதும். அதை தவிர்த்து வேறு பெரிய பரிகாரங்கள் ஏதும் செய்ய வேண்டியதில்லை. தங்களுக்கு வருகின்ற வருமானத்தில், தங்களால் சேமிக்க முடிந்த தொகையை கொண்டு தங்களால் இயன்ற அளவு உணவின்றி தவிக்கும் முதியோர்கள், ஊனமுற்றவர்கள், மனநலம் குன்றியவர்களுக்கு அன்னதானம் செய்வதால் இறைவனின் அருட்கடாட்சத்தால் அன்னதானம் செய்பவர்களுக்கு வாழ்வில் பணம் பெருகிக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

தங்கள் குடும்பத்தில் சுமங்கலியாக மறைந்த பெண்களை மனதில் நினைத்தவாறு மஞ்சளை பிடித்து, அந்த மஞ்சளை வழிபாடு செய்பவர்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்டிருக்கின்ற தோஷங்கள் நீங்கி பொருளாதார ரீதியான கஷ்ட நிலைகள் தீர்ந்து, பணப்பெருக்கும் உண்டாகும். முழுதான பாசி பருப்புகளை வாங்கி, அதை நீரில் நன்கு உறவை வைத்து, அதன் பிறகு அந்த பருப்புகளை புறாக்கள், குருவிகள் போன்ற பறவைகளைக்கும், பசுமாடுகளுக்கும் உணவாக கொடுப்பதன் மூலம் வீட்டில் இருக்கின்ற கஷ்டநிலை மாறி பணம் பெருக வழிவகை செய்யும்.

தங்களின் வேலை, தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகி அதனால் வீட்டில் பணம் பெருக செவ்வாய், வெள்ளி அல்லது சனி போன்ற ஏதேனும் ஒரே கிழமையில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, உங்கள் வீட்டில் ஒரு இரும்பு பாத்திரத்தை எடுத்து, அதில் உங்கள் கைகளால் சிறிதளவு காய்ச்சாத பசும்பால், சிறிதளவு பசுநெய், சிறிதளவு சர்க்கரை ஆகிய மூன்று பொருட்களையும் போட்டு, நன்றாக கலந்து, உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற அரசமரம் அல்லது ஏதேனும் கோயிலில் இருக்கின்ற அரச மரத்தின் வேர்களில் ஊற்றி, அரச மரத்தை தொடாமல் 9, 27 அல்லது 108 முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

மேற் சொன்ன பரிகாரத்தை வாரத்தின் அனைத்து நாட்களிலும் செய்யலாம் அல்லது செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் மட்டும் செய்தாலும், இப்பரிகாரத்தை செய்பவருக்கு வீட்டில் பணம் பெருகும்.

தங்கள் வீட்டில் என்றென்றும் பணம் பெருகிக்கொண்டே இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் அல்லது சொர்ணா கிருஷ்ண பைரவர் சன்னதியில் இருக்கும் கோயிலுக்கு, நீங்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று சென்று, சொர்ணாகர்ஷண பைரவருக்கு சுத்தமான பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, பொன்னிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வதால் செல்வ வளமிக்க வாழ்க்கை உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: களத்திர தோஷ பரிகாரம்

ஏதேனும் ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தினம் தொடங்கி, அன்றைய தினம் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக தெய்வானை வள்ளி சமேத முருகப்பெருமான் இருக்கும் கோயிலுக்கு சென்று, முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களை சாற்றி, 6 நெய் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். 9 செவ்வாய்க்கிழமைகள் மேற்சொன்ன பரிகாரத்தை செய்பவர்களுக்கு பணபெருக்கம் உண்டாகும்.

- Advertisement -