பணம் பல மடங்கு பெருக பட்டை தூபம்! பல நாள் பண கஷ்டத்தை, ஒரு நாளில் ஒழித்துக் கட்ட இதை செய்தால் போதும்.

dhupam
- Advertisement -

நமக்கு இருக்கக்கூடிய பல பிரச்சனைகளில், பெரிய பிரச்சனை, முதல் பிரச்சனை இந்த பண பிரச்சனை தான். பணத்தை சரியான வழியில், வீட்டிற்குள் சரியான நேரத்தில் கொண்டுவர தொடங்கி விட்டால், வீட்டில் இருக்கும் பலவிதமான பிரச்சனைகள் வீட்டை விட்டு வெளியே சென்று விடும். எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக இருக்கும் இந்த பண பிரச்சனையை தீர்ப்பது எப்படி. இவர்கள் தான் பணம் சம்பாதிக்க வேண்டும். இவர்கள் மட்டும்தான் வீட்டு வேலை செய்ய வேண்டும். என்ற எந்த கட்டாயமும், யாருக்கும் எழுதி வைக்கப்படவில்லை. ஆகவே, ஆர்வம் இருப்பவர்கள் திறமை இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் இரண்டு பேரும் வீட்டு வேலையை பகிர்ந்து கொண்டு, இருவரும் பணம் சம்பாதிக்கலாம்.

ஒருவருடைய வருமானத்தில் குடும்பம் நடத்த முடியவில்லை எனும்போது, இன்னொருவர் சேர்ந்து சம்பாதிப்பதில் எந்த தவறும் கிடையாது. வாய்ப்பு இருப்பவர்கள் இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். அதாவது கணவனும் மனைவியும் சேர்ந்து சம்பாதிக்கும் போது நிச்சயமாக வீட்டில் இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீருவதற்கு ஒரு வழி கிடைக்கும். சம்பாதிக்க வேண்டும் என்று ஆழ்மனதில் பெண்கள் நினைத்து விட்டால் போதும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட வேலை வாய்ப்பு தானாக தேடி வரும்.

- Advertisement -

சரிங்க, சம்பாத்தியத்தை இரட்டிப்பாக்க வருமானத்தை பெருக்க, தேவையான வாய்ப்புகள் வீடு தேடி வர ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் ஏதாவது செய்ய முடியுமா. நிச்சயம் முடியும். அதற்கான பதிவு தான் இது. வாரத்தில் ஒரு நாள் வியாழக்கிழமை இந்த தூபத்தை உங்களுடைய வீட்டில் போட்டால் வருமானம் இரட்டிப்பாவதற்கு உண்டான வாய்ப்புகள் எல்லாம் வீடு தேடி வரும்.

வருமானத்தை இரட்டிப்பாக்கும் தூபம்:
எப்பவும் போல சாம்பிராணி தூபம் போட நெருப்பு தயார் செய்து கொள்ளுங்கள். அதில் வாசனை மிகுந்த சாம்பிராணி தூள் போட்டு விடுங்கள். கூடவே 1 ஸ்பூன் சர்க்கரை, ஒரே ஒரு சிறிய துண்டு பட்டையை, எடுத்து பொடியாக உடைத்துப்போட்டு கொள்ள வேண்டும். இதோடு ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரம் போட்டு இந்த புகையை பூஜை அறையில் காண்பிக்க வேண்டும். பூஜை அறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் நிரம்ப சிலரை காசுகளை வைத்து இந்த தூபம் போடுங்கள்.

- Advertisement -

சிலரை காசுகள் இல்லை என்றால் ரூபாய் நோட்டுகள் கூட, உங்கள் கையில் இருக்கும், ரூபாய் நோட்டை வைத்து தூபம் போடலாம். வெறும் பத்து ரூபாய் வைத்து இந்த தூபத்தை போட்டு விட்டு, பிறகு இந்த தூபத்தை கொண்டு போய் வீடு முழுவதும் எல்லா இடங்களிலும் காண்பித்து விட வேண்டும். இந்த புகை வீட்டில் பண கஷ்டத்தை உண்டாக்கும் நெகட்டிவ் எனர்ஜியை அழித்துவிடும். இந்த வாசம் உங்களுக்கு ஒரு புது உத்வேகத்தை பிறக்கச் செய்யும்.

இதையும் படிக்கலாமே: இந்த நான்கு பொருளும் ஒன்றாக இருக்கும் இடத்தில் பணம் போதும் போதும் என்கிற அளவிற்கு சேர்ந்து கொண்டே இருக்கும். இதுவரை நீங்க கொடுத்து வராத பணமெல்லாம் கூட உங்களை வந்து சேரும்.

பிறகு பாருங்கள் உங்கள் சுறுசுறுப்பு இந்த உலகத்தையே மிஞ்சிவிடும். எப்படியாவது சம்பாதித்து பெரிய பணக்காரராக வேண்டும் என்ற ஆசை உங்களை விட்டுப் போகாது. அந்த ஆசை பல முயற்சிகளை செய்ய தூண்டும். முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கூடவே சேர்த்து நிறைய பணத்தையும் கொடுக்கும். கொஞ்சம் நிறைய பணம் கைகளில் சேமிப்பாக இருந்தால் தன்னம்பிக்கை உயரும். தானாக வாழ்க்கையை வாழ ஆசை வரும். நீங்கள் வேண்டும் என்றால் நம்பிக்கையோடு மேல் சொன்ன அனைத்து விஷயங்களையும் பின்பற்றித்தான் பாருங்கள். வாழ்க்கை சந்தோஷமாக மாறும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -